தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள 'ஆய்வக பராமரிப்பு உதவியாளர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான டிவில்லியர்ஸ், மொத்தம் 184 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் பெங்களூரு அணிக்காக மட்டும் அவர் 156 போட்டிகளில் விளையாடி உள்ளார். 2011 முதல் 2021 வரையில் பெங்களூரு அணியில் அவர் இடம் பெற்றிருந்தார். நடப்பு சீசனில் அவர் விளையாடப் போவதில்லை என முன்னதாகவே தெரிவித்திருந்தார். இந்நிலையில், அடுத்த சீசனில் (ஐபிஎல் 2023) தனது வருகை குறித்து பேசியுள்ளார் டிவில்லியர்ஸ்.
"அடுத்த சீசனில் நான் நிச்சயம் இருப்பேன். ஆனால் அது எப்படி என்பதை இன்னும் உறுதி செய்யவில்லை. இதனை விராட் கோலி உறுதிப்படுத்தியதில் எனக்கு மகிழ்ச்சி. வரும் சீசனில் பெங்களூருவில் சில போட்டிகள் இருக்கும். அதனால் எனது இரண்டாவது வீட்டுக்கு திரும்புவதில் எனக்கு மகிழ்ச்சி. சின்னசாமி கிரிக்கெட் மைதானம் முழுவதும் ரசிகர்களால் நிரம்பி வாழும் அந்த காட்சியை காண நாம் மிகவும் ஆர்வமாக உள்ளேன். அணியில் மீண்டும் இணைவதை நான் மிகவும் விரும்புகிறேன். அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்த்தும் உள்ளேன்" என தெரிவித்துள்ளார் டிவில்லியர்ஸ்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: நவோமி ஒசாகா தோல்வி..!
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி அந்நாட்டு தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஜப்பான் நாட்டை சேர்ந்த நவோமி ஒசாகா, அமெரிக்காவைச் சேர்ந்த அமெண்டா அனிசிமோவாவை எதிர்கொண்டார்.
இதில் நவோமி ஒசாகா 5-7, 4-6 என்ற நேர் செட்களில் அனிசிமோவாவிடம் தோல்வி அடைந்து, தொடரில் இருந்து வெளியேறினார்.
பெண்கள் டி20 கிரிக்கெட்: சூப்பர் நோவாஸ் வெற்றி
3 அணிகள் இடையிலான பெண்கள் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி புனேவில் நடந்து வருகிறது. இதில் முதல் லீக் ஆட்டத்தில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான டிரையல்பிளேசர்ஸ், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர் நோவாஸ் அணிகள் சந்தித்தன. டாஸ் ஜெயித்த சூப்பர்நோவாஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன்படி, முதலில் பேட்செய்த சூப்பர் நோவாஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹர்மன்பிரீத் கவுர் 37 ரன், ஹர்லின் தியோல் 35 ரன், டாட்டின் 32 ரன்கள் எடுத்தனர்.
அதன்பின், 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டிரையல் பிளேசர்ஸ் ஆடியது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார். இறுதியில் டிரையல் பிளேசர்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சூப்பர் நோவாஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சூப்பர் நோவாஸ் சார்பில் பூஜா வஸ்த்ராசாகர் 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: வங்கதேசம் 277 ரன்கள் குவிப்பு
இலங்கை, வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்தது வங்காளதேசம். 6-வது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹிமுடன் கைகோர்த்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் சதமடித்து அசத்தினர். முதல் நாள் முடிவில் வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்துள்ளது.
போட்டியின் 23-வது ஓவரில் பீல்டிங் செய்துகொண்டிருந்த இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் குசால் மென்டிஸ் நெஞ்சு வலிப்பதாக கூறினார். அணியின் உதவியாளர்கள் உதவியுடன் வெளியேறிய அவர், டாக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் இதயத்தில் பிரச்சினை எதுவும் இல்லை, தசைப்பிடிப்பு தான் வலிக்கு காரணம் என தெரிய வந்ததால் இலங்கை அணி நிர்வாகம் நிம்மதி அடைந்துள்ளது.
எந்த மைதானத்திலும் சிறப்பாக ஆடுவோம்: சஹா நம்பிக்கை
24-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் “பிளேஆப்” சுற்று ஆட்டம் நேற்று தொடங்கியது. கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் நான்கு நாட்களுக்கு முன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிவடைந்தன. பிளேஆப் சுற்றின் ‘குவாலிலையர் 1’ ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடந்தது. இதில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ்-சஞ்சு சாஞ்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
இந்த நிலையில் எந்த மைதானத்திலும் எங்களால் சிறப்பாக ஆட முடியும் என்று குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் விர்த்திமான் சஹா நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-குஜராத் அணிக்காக நான் விளையாடுகிறேன். எனவே எனது சொந்த மைதானம் அகமதாபாத் மொதேரா ஸ்டேடியம் ஆகும். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக நான் நீண்ட காலம் ஆடவில்லை. இதனால் ஈடன் கார்ன் எனது சொந்த மைதானம் அல்ல. எந்த மைதானத்திலும் குஜராத் அணி சிறப்பாக விளையாடும். ந்திய அணிக்கான தேர்வு குறித்து நான் நினைக்கவில்லை. இவ்வாறு விர்த்திமான் சஹா கூறியுள்ளார்.
இந்தோனேஷியாவில் ஹாக்கி: இந்தியா - பாக். ஆட்டம் டிரா
இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் தொடங்கிய இந்தத் தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடியது. இதன் 9-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி அறிமுக வீரரான செல்வம் கார்த்தி கோல் அடித்தார். தமிழகத்தின் அரியலூரைச் சேர்ந்த செல்வம் கார்த்தி அடித்த கோலால் இந்திய அணி 1-0 என முன்னிலை வகித்தது.
இதன் பின்னர் இரு அணிகள் தரப்பில் கோல் அடிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இரு அணி வீரர்களுமே பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோல்களாக மாற்றத் தவறினர். போட்டி முடிவடைய ஒரு நிமிடமே இருந்த நிலையில் பாகிஸ்தான் வீரர் ராணா கோல் அடித்தார். இதனால் ஆட்டம் சமநிலையை எட்டியது. இதற்கு பதிலடி கொடுக்க இந்திய அணி வீரர்கள் முயன்ற போதிலும் சாத்தியமாகவில்லை. முடிவில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந் தது. இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் இன்று ஜப்பானுடன் மோதுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 3 days 18 hours ago |
பக்காலா மீன் வறுவல்![]() 6 days 19 hours ago |
பாசி பருப்பு பாயாசம்![]() 1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 02-07-2022.
02 Jul 2022 -
மீண்டும் வர்ணனைக்கு திரும்பிய ரவி சாஸ்திரி
01 Jul 2022இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் 2021 டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைந்தது.
-
பாவோ நூர்மி ஈட்டி எறிதல் போட்டி: புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ரா
01 Jul 2022ஸ்டாக்ஹோம் : பின்லாந்தில் நடைபெற்ற பாவோ நூர்மி விளையாட்டுப் போட்டியில் 89.30 மீட்டர் தூரம் எறிந்து தேசிய சாதனை படைத்திருந்தார்.
-
4-ம் தேதி சென்னையில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த ஏற்பாடு : கோவை, மதுரையில் உயர்தொழில்நுட்ப நிறுவனங்கள்: அமைச்சர் பேட்டி
01 Jul 2022சென்னை : வரும் 4-ம் தேதி சென்னையில் மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
-
சர்ச்சை பேச்சு ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கி விட்டது: நாட்டு மக்களிடம் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் : வழக்குகளை மாற்றக்கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் கண்டனம்
01 Jul 2022புதுடெல்லி : முஸ்லிம்களின் இறைத்தூதரை அவமதிக்கும் வகையில் நுபுர் சர்மா பேசியது நாடு முழுவதும் முஸ்லிம்களை வெகுண்டெழச் செய்துள்ளது.
-
டுவிட்டரில் தனது கட்சி பொறுப்பை மாற்றினார் எடப்பாடி பழனிசாமி
01 Jul 2022சென்னை : அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் என்ற தனது கட்சி பொறுப்பை தனது டுவிட்டர் சமூக வலைதளத்தில் அ.தி.மு.க தலைமை நிலையச்செயலாளர் என்று மாற்றியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
-
மீண்டும் ஷிகர் தவான் தேர்வு: இங்கிலாந்து எதிரான 3 டி-20, 3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு
01 Jul 2022மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
-
தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை : நிரந்தர பணி நியமனம் செய்வதில் என்ன பிரச்சினை என கேள்வி
01 Jul 2022மதுரை : ஆசிரியர்கள் நியமனம் மாணவர்களின் நலன் சார்ந்தது என்ற தெரிவித்த ஐகோர்ட் மதுரை கிளை தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான தமிழக அரசின் அறிவிப்
-
வெள்ளப் பெருக்கு குறைந்ததால் குற்றாலம் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
01 Jul 2022தென்காசி : குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தனர்.
-
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவல்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
01 Jul 2022சென்னை : கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (ஜூலை 1) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
-
பெரும்பான்மையை நிரூபிக்கிறார் ஷிண்டே: மகாராஷ்டிரா மாநில சட்டசபையில் ஜூலை 4-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு
01 Jul 2022மும்பை : பா.ஜ.க ஆதரவுடன் சிவசேனை அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குழுத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றுக் கொண்ட நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவையில் 4-ம் தேதி (வரு
-
காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
01 Jul 2022சென்னை : காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
5 ஆண்டுகளில் ஜிஎஸ்டி நடைமுறையில் பல விதமான சவால்களை சந்தித்தோம் : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
01 Jul 2022புதுடெல்லி : நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி வசூல் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.1.44 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் தெரிவ
-
விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு: தங்கத்திற்கான இறக்குமதி வரியை 5 சதவீதம் உயர்த்தியது மத்திய அரசு
01 Jul 2022மும்பை : தங்கத்திற்கான இறக்குமதி வரியை 5 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் இந்தியாவில் தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
-
இங்கி.,க்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங்
01 Jul 2022பர்மிங்காம் : இந்தியாவுக்கு எதிரான 5 ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்திருக்கிறது.
-
ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 12 வரை பார்லி., மழைக்கால கூட்டத்தொடர்
01 Jul 2022புதுடெல்லி : பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18-ம் தேதி தொடங்கும் என மக்களவை செயலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
கேப்டன் பொறுப்பு குறித்து நினைவுகளை பகிர்ந்த பும்ரா
01 Jul 2022எட்ஜ்பாஸ்டன் : இந்திய அணியை தலைமை தாங்கி வழிநடத்துவதற்கு முன்னதாக வேறு எந்த அணிக்கும் தான் கேப்டனாக இருந்ததில்லை என டோனி தன்னிடம் சொன்னதாக இந்திய அணியின் கேப்டன் பும்ரா
-
தமிழக அரசு உருவாக்கியது மாநில அணை பாதுகாப்பு அமைப்பு
01 Jul 2022சென்னை : மத்திய அரசின் அணை பாதுகாப்பு சட்டத்தின்கீழ் மாநில அணை பாதுகாப்பு அமைப்பை தமிழக அரசு ஏற்படுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
உதய்பூர் படுகொலை தொடர்பாக டி.ஜி.பி உள்ளிட்ட 32 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
01 Jul 2022உதய்பூர் : உதய்பூரில் நடத்தப்பட்ட படுகொலை சம்பவத்தால் சட்ட ஒழுங்கின் மேல் எழுந்த விமர்சனத்தைத் தொடர்ந்து மாநில காவல்துறை தலைவர் உள்பட மூத்த ஐபிஎஸ் காவல் அதிகாரிகள் 32 ப
-
சுதந்திர, குடியரசு நாளைவிட முக்கியமானது ஜி.எஸ்.டி நாள் : கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
01 Jul 2022சென்னை : சுதந்திர நாள், குடியரசு நாளைவிட ஜிஎஸ்டி 5 ஆம் ஆண்டு நாள் மிகவும் முக்கியமானது என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
-
ஜூன் மாத ஜி.எஸ்.டி. வசூல் 1.44 லட்சம் கோடி ரூபாய் : மத்திய நிதித் துறை அமைச்சகம் தகவல்
01 Jul 2022புதுடெல்லி : சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) வசூல் நடப்பாண்டு ஜூன் மாதத்தில் ரூ.1.44 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த மே மாதத்தில் ரூ.1.41 லட்சம் கோடி வச
-
பா.ஜ.க. ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு இன்று சென்னை வருகை
01 Jul 2022சென்னை : ஜனாதிபதி தேர்தல் வருகிற 18-ம் தேதி நடைபெற உள்ளது. பா.ஜ.க.
-
உதய்பூர் படுகொலை: மேலும் இருவர் கைது
01 Jul 2022முஹம்மது நபி பற்றிய நுபுர் ஷர்மாவின் கருத்தை ஆதரித்ததற்காக தையல்காரர் கன்னையா லால் ஜூன் 28 அன்று அவரது கடையில் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.
-
ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சிவசேனா மனு
01 Jul 2022புதுடெல்லி : மகாராஷ்டிரத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சிவசேனா தலைவர் சுனில் பிரபு மனு தாக்கல் செய்துள்ளார
-
சரக்கு மற்றும் சேவை வரி மிகப்பெரிய வரி சீர்திருத்தம் : பிரதமர் நரேந்திர மோடி டுவிட்
01 Jul 2022புதுடெல்லி : சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) மிகப்பெரிய வரி சீர்திருத்தம் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இதன் மூலம் ஒரே நாடு ஒரே வரி என்ற தொலைநோக்கு பார்வை நிறைவ