முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கு ஆன்லைனில் வரும் 4-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2022      தமிழகம்
School-Education 2022 02 11

Source: provided

சென்னை : இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கு வரும் 4-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

2022-23-ம் கல்வி ஆண்டில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தொடக்க கல்வி பட்டய படிப்பில் சேருவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

விண்ணப்பங்கள் இணையதளத்தில் https://scert.tnschools.gov.in என்ற முகவரியில் ஜூலை 4-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. உரிய கட்டணம் செலுத்தி விவரங்களை பதிவேற்றம் செய்யலாம். 

தொடக்க கல்வி பட்டய படிப்பில் சேர விரும்புவோர் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஓ.சி.வகுப்பு 50 சதவீதம் மதிப்பெண்ணும் மற்ற பிரிவினர் 45 சதவீத மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். 31.7.2022 அன்று அதிகபட்ச வயது 30-க்கு மிகாமல் இருக்க வேண்டும். பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்சமாக வயது 35 ஆகும். 9-ந்தேதி மாலை 5 மணிக்குள் உரிய கட்டணத்துடன் விண்ணப்பதினை பதிவேற்றம் செய்ய கடைசி நாளாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து