முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொளத்தூரில் பா.ஜ.க. உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு

சனிக்கிழமை, 2 ஜூலை 2022      தமிழகம்
Annamalai 2022 05 06

Source: provided

சென்னை : தி.மு.க. அரசை கண்டித்து வரும் 5-ம் தேதி தமிழக பா.ஜ.க. அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்துகிறது. அந்த வகையில் கொளத்தூர் தொகுதியில் போராட்டம் நடத்த மாநில தலைவர் அண்ணாமலைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  

தமிழக பா.ஜ.க. சார்பில் வருகிற 5-ம் தேதி தி.மு.க. அரசை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலைமை தாங்க நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மாநில தலைவர் அண்ணாமலை முதல்வர்  மு.க.ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக பெரவள்ளூர் காமராஜர் சிலை அருகே உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டுள்ளார்கள். ஆனால் அங்கு உண்ணாவிரதத்துக்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். 

சென்னையை பொறுத்தவரை வள்ளுவர் கோட்டம், கலெக்டர் அலுவலகம் அருகில் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் ஆகிய இடங்களில்தான் உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

உண்ணாவிரத போராட்டத்தை எழுச்சியுடன் நடத்த அனைத்து மாவட்டங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து பா.ஜ.க. நிர்வாகிகள் கூறும் போது, திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து