முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரானில் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 17 பேர் பலி

சனிக்கிழமை, 23 ஜூலை 2022      உலகம்
Iran 2022-07-23

Source: provided

டெக்ரான் : ஈரானில் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். 

ஈரானின் பர்ஸ் மாகாணத்தில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. குறிப்பாக அம்மாகாணத்தின் இஸ்டபென் நகரில் கனமழை கொட்டித்தீர்த்தது. கனமழை காரணமாக அந்நகரில் உள்ள ரவுட்பெல் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள குடியிருப்புகள், சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. 

இந்நிலையில், இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். ஈரானில் மேலும் சில நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து