முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடுகள்தோறும் தேசியக்கொடியை ஏற்றுவதற்கு அறிவிப்பு வெளியிடுங்கள் : முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Annamalai 2022-08-07

Source: provided

சென்னை : தமிழகத்தில் உள்ள வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்ற அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடவேண்டும் என அண்ணாமலை தெரிவித்தார். 

திருவள்ளூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் தேசியக்கொடி குறித்து மாபெரும் விழிப்புணர்வு பேரணி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. ஆவடி மாநகராட்சியில் துவங்கிய பேரணியில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பா.ஜ.க. தொண்டர்கள் இந்திய தேசியக் கொடியை கைகளில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். 

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது,

மக்கள் எழுச்சியுடன் தேசியக் கொடியை கையில் ஏந்தி நடைபயணத்தை மேற்கொண்டுள்ளோம். தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களிடையே தேசிய பற்று குறித்து போட்டிகள் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தேசிய கொடியை ஏற்றும் இயக்கத்தை முன்னெடுப்பது அவசியம்.

தமிழகத்தில் உள்ள வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்ற அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடவேண்டும். அதே போல் தி.மு.க. தொண்டர்களையும் தேசிய கொடி ஏற்றும்படி மு.க.ஸ்டாலின் கூற வேண்டும் என்று கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து