எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரோட் ஐஸ்லாந்து, அமெரிக்காவின் ரோட் ஐஸ்லாந்து மாகாணத்தில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தின் சனிக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 9 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேக நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை.
இது தொடர்பாக பிரவுன் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், 2 உயிரிழப்புகளை உறுதி செய்ததுடன், மேலும் 9 பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், பல்கலைக்கழகத்தில் உள்ளவர்கள் இயல்பு நிலை திரும்பும்வரை வெளியில் வர வேண்டாம் என்றும், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இறந்தவர்கள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணைகள் தொடர்வதாகவும், எந்த சந்தேக நபரும் கைது செய்யப்படவில்லை என்றும் மேயர் பிரட் ஸ்மைலி தெரிவித்தார். சந்தேக நபரை கண்டறிய பிரவுன் பல்கலைக்கழக அதிகாரிகள், பிராவிடன்ஸ் நகர காவல்துறை மற்றும் எஃப்.பி.ஐ ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுவதாக அவர் கூறினார். இந்த ஆண்டு மட்டும் அமெரிக்காவில் உள்ள கல்வி நிறுவனங்களில் 70-க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


