முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டென்மார்க் ராணிக்கு கொரோனா பாதிப்பு

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2022      உலகம்
Denmark-Queen-2022-09-22

இங்கிலாந்து ராணியின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு விட்டு நாடு திரும்பிய டென்மார்க் ராணிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு கடந்த 19-ம் தேதி லண்டனில் நடந்தது. இதில் டென்மார்க் ராணி இரண்டாம் மார்கரெட்(82) நேரில் கலந்து கொண்டு ராணி எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து நாடு திரும்பிய அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதியானது. 

 

50 ஆண்டு காலம் ராணியாக உள்ள அவர் கடந்த செவ்வாய்க் கிழமை இரவு முதல் அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார். ஏற்கனவே அவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா தாக்கி மீண்டு வந்தார். அவர் 3 டோஸ் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ள நிலையில் இப்போது கொரோனா தாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து