முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை, பொள்ளாச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு: அண்ணாமலை கண்டனம்

வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2022      தமிழகம்
Annamalai 2022--09-23

Source: provided

சென்னை : கோவை பொள்ளாச்சியில் பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவத்துக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, கோயம்புத்தூர் பா.ஜ.க. அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி எங்கள் சகோதர, சகோதரிகளின் மன தைரியத்தை குறைத்து விடலாம் என்று யாரும் நினைத்து விட வேண்டாம்.

இது போன்ற அச்சுறுத்தல்கள் சமூக விரோதிகளுக்கு எதிரான எங்கள் சமூக பணியை மேலும் வேகப்படுத்தும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை தி.மு.க. அரசு உணர வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து