எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : 'இயற்கையாகவே பெண்களுக்கு வாதாடும் திறமை உண்டு என்ப தால் அவர்களை எளிதில் வாதாடி ஜெயிக்க முடியாது' என பெண் வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு விழாவில் பங்கேற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் புகழாரம் சூடினார்.
சென்னை உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் 62ம் ஆண்டு விழா உயர்நீதிமன்ற கலையரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசும்போது, "எந்த சமுதாயத்தில் பெண்களின் நிலைப்பாடு உயர்ந்திருக்கிறதோ அந்த சமுதாயம் தான் உயர்ந்த சமுதாயம். அந்த வகையில் தமிழ் சமுதாயம் பெண்கள் சார்ந்த வளர்ந்த, உயர்ந்த சமுதாயம். பெண்களுக்கு இயற்கையாகவே வாதாடும் திறமை உண்டு. அவர்களை எளிதில் வாதாடி ஜெயிக்க முடியாது என்பதை வீட்டிலேயே தினமும் அனுபவித்து வருகிறோம்.
அந்தக் காலத்திலேயே பெண்கள் கல்வியிலும். செல்வத்திலும் ஆண்களுக்கு சமீமாக. பிரதானமாக திகழ்ந்துள்ளனர். அதனால் தான் நீதித் துறையிலும் நீதி தேவதை, நீதித்தாய் என புகழாரம் சூடுகிறோம். அதேபோல தவறைச் சுட்டிக்காட்டும் போர்க் குணமும் பெண்களுக்கு உண்டு. பணிபுரியும் பெண்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் பல் வேறு இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. இது மாறுகின்ற கால கட்டம். அதற்கேற்ப நம்மை நாமே தயார் படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


