முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை, எழும்பூரில் வன உயிரின வார விழா: தமிழ்நாடு புலிகள் மாநாடு நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார் அமைச்சர் ராமச்சந்திரன்

ஞாயிற்றுக்கிழமை, 2 அக்டோபர் 2022      தமிழகம்
Ramachandran 2022-10-02

Source: provided

சென்னை : சென்னை எழும்பூரில் நேற்று வனத்துறை சார்பில் நடைபெற்ற வன உயிரின வார விழாவின் முதல் நாள் தமிழ்நாடு புலிகள் காப்பகம் குறித்த கலந்தாய்வு மாநாடாக நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சிகளை அமைச்சர்  ராமச்சந்திரன், மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி  துவக்கி வைத்தனர்.  

வன உயிரினங்கள் மற்றும் அவைகளின் வாழ்விடங்களை பாதுகாப்பது குறித்து நாடெங்கிலும் உள்ள பொதுமக்களிடம் மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வன உயிரினங்களை பாதுகாப்பதில் அவர்களின் பங்குகள் பற்றி அறிந்து கொள்ளவும், வரும் 8-ம் தேதி வரை ஒரு வார காலம் வன உயிரின வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

வனப்பகுதிகளில் அதிக அளவு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கவும், வனப்பாதுகாப்பு, மனித, வன உயிரின மோதல் தடுப்பு நடவடிக்கை, வனவிலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளை தடுத்திட வனப்பணியாளர்கள் குழு அமைத்து  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர்  கா.ராமச்சந்திரன் தெரிவித்தார். 

மேலும் சென்னை மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை அமைச்சர் வழங்கினார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து