முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாய்லாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய முன்னாள் காவல் அதிகாரி தற்கொலை 22 குழந்தைகள் உட்பட 34 பேர் பலியான பரிதாபம்

வியாழக்கிழமை, 6 அக்டோபர் 2022      உலகம்
Gun 2022-10-06

Source: provided

பாங்காக்: தாய்லாந்தின் நோங் பூவா  லாம்பூ மாகாணத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 22 சிறுவர்கள் உட்பட 34 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும்  துப்பாக்கிச்சூடு நடத்தியவர் 34 வயதான முன்னாள் போலீஸ் அதிகாரி என்றும், துப்பாக்கிச் சூடு நடத்தியதை தொடர்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதில் மேலும் 12 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி சூடு நடத்திய நபர் போதைப்பொருள் வழக்கில் தொடர்புடைய காரணங்களுக்காக காவல் துறையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இவர் மதிய உணவு நேரத்தில் துப்பாக்கி சூடு நடத்திய போது சுமார் 30 குழந்தைகள் மையத்தில் இருந்ததாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் எட்டு மாத கர்ப்பிணியான ஒரு ஆசிரியர் உட்பட நான்கு அல்லது ஐந்து ஊழியர்களை அவர் முதலில் சுட்டுக் கொன்றதாக மாவட்ட அதிகாரி கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து