எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆலங்குளத்தில் புதிய வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்கப்படும் என்றும் தென்காசி குற்றாலம் இடையே இருக்கக்கூடிய இலாத்தூர் பெரிய ஏரி ஒரு முக்கிய மீன்பிடி மற்றும் சுற்றுலாத்தலமாக 10 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் என்றும் தென்காசியில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது,
தென்காசி மாவட்டத்துக்கு வந்ததுமே, இந்த மண்ணைப் போலவே மனதும் குளிர்ச்சி அடைந்து விடுகிறது. இது இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டம் மட்டுமல்ல, வீரத்தின் விளைநிலமாக இருக்கும் பூலித்தேவன் மண் இது. தி.மு.க. ஆட்சி மலர்ந்து 19 மாதங்கள் ஆகி இருக்கிறது. இந்த 19 மாத காலங்களில் பல நூறு சாதனைகளை தமிழக மக்களுக்கு தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம்.
தென்காசி மாவட்டத்தின் முக்கிய இணைப்பு சாலையாக விளங்கக்கூடிய புளியங்குடி சங்கரன்கோயில் நெடுஞ்சாலை மேம்படுத்தப்படும். புதிதாக அமைந்துள்ள தென்காசி மாவட்டத்திற்கு புதிய மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்கப்படும். துரைசாமிபுரம் மக்களுடைய நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பனையூர் கூடலூர் - துரைசிங்கபுரம் சாலை மேம்படுத்தப்படும். தென்காசி குற்றாலம் இடையே இருக்கக்கூடிய இலாத்தூர் பெரிய ஏரி ஒரு முக்கிய மீன்பிடி மற்றும் சுற்றுலாத்தலமாக 10 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
சிவகிரி மற்றும் ஆலங்குளம் பகுதி விவசாயிகளினுடைய கோரிக்கையை ஏற்று அவர்கள் பயன்பெறக்ககூடிய வகையில் ஆலங்குளத்தில் புதிய வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
தென்காசி அலங்கார் நகரைச் சேர்ந்த மாணவி சண்முகவள்ளி 2020-ல் நடைபெற்ற குடிமைப் பணித் தேர்வில் இந்திய அளவில் 108-வது இடத்தையும், தமிழக அளவில் 3-வது இடத்தையும், பெண்கள் பிரிவில் முதலிடம் பெற்று இந்த மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு இந்த விழாவின் மூலமாக முதல்வர் என்ற முறையில் வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே போல், வினைதீர்த்த நாடார்பட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளியில், 3-ம் வகுப்பு படிக்கக் கூடிய ஆராதனா எனும் குழந்தை, சமீபத்தில், எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அந்தக் கடிதத்தில், தான் படிக்கும் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டித்தர வேண்டும் என்று கேட்டிருந்தார். அதற்கு முதற்கட்டமாக, 35 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் இரண்டு வகுப்பறைகள் கட்டப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்படி ஒவ்வொருவருடைய தேவைகளையும் கேட்டுக் கேட்டு, ஒவ்வொரு பகுதியின் பிரச்சினையையும் அறிந்து, அறிந்து நிறைவேற்றித் தரும் அரசாக நம்முடைய அரசு செயல்பட்டு வருகிறது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர், தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் எந்த சாதனையையும் செய்யவில்லை. எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். சில மாதங்கள் வரைக்கும் என்ன சொன்னார் என்றால், விடுபட்ட சில வாக்குறுதிகளை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு இதை நிறைவேற்றவில்லை, அதை நிறைவேற்றவில்லை என்று சொல்லி கொண்டு இருந்தார். அதை நாம் நிறைவேற்றியதும், என்ன சொல்லுவது என்று தெரியாமல் எதையுமே நிறைவேற்றவில்லை ஒரே வரியில் சொல்லி இருக்கிறார்.
பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகமே இருண்டு விட்டதா நினைக்குமாம். அதுபோல எதிர்க்கட்சித் தலைவர் நினைத்துக் கொண்டு இருக்கிறார். இவர் வேண்டுமென்றால் கண்ணை மூடிக்கொண்டு இருக்கலாம். ஆனால், தமிழக மக்கள் 19 மாதத்துக்கு முன்பே விழித்து விட்டார்கள். எனவே, மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் எரிச்சல் வார்த்தைகளுக்கெல்லாம் நான் விரிவாக பதில் சொல்ல விரும்பவில்லை.
நாங்கள் சொன்ன வாக்குறுதிகள் உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கே நேரம் கிடைக்கவில்லை. ஏதோ அரசியலில் தாங்களும் இருக்கிறோம் என்று காட்டுவதற்காக நம்மை பற்றி விமர்சிக்கிறார்கள். ஆனால் எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு நாங்கள் உண்மையாக இருக்கிறோம். உணர்வுப் பூர்வமாக உழைக்கிறோம். தமிழகத்தை இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக ஆக்குவது ஒன்றுதான் என்னுடைய குறிக்கோள்.
அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னேற்றம் அடைய வேண்டும். அதற்கான திட்டங்களை தீட்டி வருவது மட்டுமல்ல, அந்தத் திட்டங்களால் தமிழகம் உயர்ந்து வருவதை ஒன்றிய அரசு வெளியிடக்கூடிய புள்ளி விவரங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் வெளியிடும் அளவீடுகளில் தமிழகத்தில் வளர்ச்சி தெரியும். இவை அனைத்தும் தமிழகம் உயர்ந்து என்பதற்கான திட்டவட்டமான சான்றுகளாக அமைந்திருக்கிறது.
திட்டத்தை அறிவித்தோம், நிதியை ஒதுக்கினோம், அத்தோடு கடமை முடிந்து விட்டது என்று இல்லாமல், ஒவ்வொரு நாளும் நான் அதைக் கண்காணிக்கிறேன். உரிய காலத்தில் அனைத்துத் திட்டங்களையும் முடிப்பது தான் அரசின் இலக்கு. எனவே, தென்காசி மாவட்டத்தினுடைய முன்னேற்றத்திற்கு நிச்சயமாக இந்த அரசு துணை நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
வங்காளதேசத்தில் இந்து வாலிபர் படுகொலை சம்பவத்தில் 12 பேர் கைது
22 Dec 2025டாக்கா, வங்காளதேசத்தில் இந்து வாலிபர் கொடூர கொலை மற்றும் உடல் எரிப்பு தொடர்பான வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் அறிவ
-
ரஷ்ய ராணுவத்திற்காக போரிட்ட இந்திய மாணவனை கைது செய்தது உக்ரைன் படை: வீடியோ வெளியீடு
22 Dec 2025கீவ், ரஷ்யாவுக்காக போரிட்ட இந்திய மாணவர் உக்ரைன் படையால் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் தன்னை
-
மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி தங்கம் விலை புதிய உச்சம்
22 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று ஒரேநாளில் 2 முறை உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,570-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.100560-க்கும் விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-12-2025.
22 Dec 2025 -
தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின்
22 Dec 2025சென்னை, தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் முதல் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து தி.மு.க.
-
தமிழகத்தில் எதிர்பார்த்ததைவிட அதிகமான வாக்காளர்கள் நீக்கம்: துணை முதல்வர் உதயநிதி பேட்டி
22 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் எதிர்பார்த்ததைவிட அதிகமான வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
10 அம்ச கோரிக்கை தொடர்பாக அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகளுடன் மூன்று அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
22 Dec 2025சென்னை, 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வரும் நிலையில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம
-
ஆட்சி மாற்றத்திற்காக வரும் சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம்: சரத்குமார் பேட்டி
22 Dec 2025நெல்லை, வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்காக பிரச்சாரம் செய்யபோவதாக நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
-
பாதுகாப்பு, அமைதியான மாநிலம் தமிழ்நாடு: த.வெ.க. கிறிஸ்துமஸ் விழாவில் ஆற்காடு நவாப் முகமது பேச்சு
22 Dec 2025சென்னை, ஒற்றுமைக்கு சிறந்த முன்னுதாரணமான மாநிலமாகவும், அமைதியான மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது என்று ஆற்காடு நவாப் கூறியுள்ளார்.
-
பொங்கல் பரிசுத் தொகுப்போடு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
22 Dec 2025சென்னை, பொங்கல் பரிசுத் தொகுப்போடு 5000 ரூபாய் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
மதச்சார்பற்ற சமூகநீதி பாதையில் பயணிப்போம் த.வெ.க. தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு
22 Dec 2025சென்னை, மதச்சார்பற்ற சமூகநீதி பாதையில் பயணிப்போம் என்று த.வெ.க. தலைவர் விஜய் பேசினார்.
-
கார் குண்டு வெடிப்பில் ரஷ்ய ராணுவ ஜெனரல் பலி
22 Dec 2025மாஸ்கோ, ரஷ்ய ராணுவத்தின் உயர் அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் பனில் சர்வரோவ், மாஸ்கோவில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
கேரளாவில் தனியார் பள்ளிகள் கிறிஸ்துமஸ் விழாவுக்கு தடை முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை
22 Dec 2025கேரளா, கேரளாவில் சில தனியார் பள்ளிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்தது தொடர்பாக கேரள முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
வீட்டுக்காவலில் வைக்கக்கோரிய மலேசிய முன்னாள் பிரதமரின் நஜீப் கோரிக்கையை நிராகரித்தது கோர்ட்
22 Dec 2025கோலாலம்பூர், சிறையில் உள்ள தன்னை வீட்டுக்காவலில் வைக்கக்கோரி நஜீப் ரசாக் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 39 ஆயிரம் விண்ணப்பங்கள் தற்போது வரை வந்துள்ளன: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
22 Dec 2025சென்னை, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு இதுவரை 39 ஆயிரத்து 821 படிவங்கள் பெயர் சேர்ப்புக்காகவும், 413 படிவங்கள் பெயர் நீக்கத்திற்காகவும் அளிக்கப்பட்டுள்ளதா
-
விஜய்யுடன் உள்ளவர்கள் சந்தர்ப்பவாதிகள்: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விமர்சனம்
22 Dec 2025கிருஷ்ணகிரி, விஜய்யுடன் இருப்பவர்கள் சந்தர்ப்பவாதிகள் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல அரசியல் தலைவர்களுக்காக தயாராகும் பிரச்சார வாகனங்கள்
22 Dec 2025சென்னை, வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் தலைவர்களுக்கு தயாராகும் பல்வேறு வசதிகளுடன் கூடிய பிரசார வாகனங்கள் தயாராகி வருகின்றன.
-
723 செவிலியர் காலி பணியிடங்கள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
22 Dec 2025சென்னை, தற்போது 723 செவிலியர் காலிப் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று போராட்ட குழுவினருடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அமைச்சர் மா.
-
எஞ்சின் கோளாறு காரணமாக டெல்லியில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
22 Dec 2025டெல்லி, எஞ்சின் கோளாறு காரணமாக டெல்லியில் அவசர அவசரமாக ஏர் இந்தியா விமானம் தரையிறக்கப்பட்டது.
-
கிரிக்கெட்டையே விட நினைத்தேன்: 2023 உலகக்கோப்பை தோல்வி குறித்து மனம் திறந்தார் ரோகித்
22 Dec 2025மும்பை, ஐ.சி.சி.
-
சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் நியூசி., பிரதமர் லக்சன் பேச்சு
22 Dec 2025புதுடெல்லி, இந்தியா - நியூசிலாந்து இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வா
-
டெல்லியில் காற்று மாசு, பனிமூட்டம்: விமானங்களின் சேவை கடும் பாதிப்பு
22 Dec 2025டெல்லி, டெல்லியில் குளிர்காலம் நிலவி வரும் சூழ்நிலை காற்று மாசு காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது.
-
காசாவில் பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் படை துப்பாக்கி சூடு
22 Dec 2025டெல் அவிவ், 3 சம்பவங்களிலும் பயங்கரவாதிகளை விரட்டியடிக்க, இஸ்ரேல் விமான படை களமிறங்கி, தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டியடித்தது.
-
அ.தி.மு.க. அவைத் தலைவர் உடல்நிலையில் முன்னேற்றம்
22 Dec 2025சென்னை, அ.திமு.க. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
-
வரும் 30-ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு: குமரியில் உள்ள பெருமாள் கோவில்களில் தீவிர ஏற்பாடு
22 Dec 2025கன்னியாகுமரி, கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள வெங்கடாஜலபதி கோவில் பெருமாள் கோவில்களில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் வைகுண்ட ஏகாதசியும் ஒன்று.


