முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் கூடுதல் மனு தாக்கல் செய்தார் எடப்பாடி

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2022      அரசியல்
EPS 2022-09-19

அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 

நிலுவையில் உள்ள மனுக்களை காரணம் காட்டி பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்த கூடாது என ஓ. பன்னீர் செல்வம் கூறுவது ஏற்புடையதல்ல. சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளை காரணம் காட்டி யாரையும் செயல்பட விடாமல் ஓ. பன்னீர் செல்வம் தடுத்து வருகிறார். 

தேர்தல் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்க்காமலேயே அதன் செயல்பாடுகளுக்கு ஓ. பன்னீர் செல்வம் முட்டுக்கட்டை விதித்து வருகிறார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது வரும் திங்கட்கிழமை விசாரணை நடத்தப்படும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து