முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடாளுமன்றத்திலிருந்து நேபாள பிரதமர் வெளியேறிய போது தீக்குளித்தவர் பலி

புதன்கிழமை, 25 ஜனவரி 2023      உலகம்
Nepal 2023 01 25

நாடாளுமன்றத்திலிருந்து பிரதமர் பிரசண்டா வெளியேறிய போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் டீசலை ஊற்றி தீக்குளித்தார். 

நேபாளம் நாட்டின் புதிய பிரதமராக கடந்த டிசம்பர் மாதம் சி.பி.என். மாவோயிஸ்ட் கட்சியை சேர்ந்த புஷ்ப கமல் தாஹால் என்ற பிரசண்டா தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், நேபாள நாடாளுமன்றத்திலிருந்து நேற்று முன்தினம் பிற்பகலில் பிரதமர் பிரசண்டா வெளியேறிய போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் டீசலை ஊற்றி தீக்குளித்தார். 

உடனடியாக அந்த பகுதியிலிருந்து பிரதமர் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், தீக்குளித்து நபரை மீட்டு பாதுகாப்புப் படையினர் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர்.  தற்கொலைக்கு முயன்ற நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 

காவல்துறையின் விசாரணையில் தீக்குளித்த நபர், இல்லம் மாவட்டத்தை சேர்ந்த பிரேம் பிரசாத் ஆச்சார்யா( 37) எனத் தெரிய வந்துள்ளது. மேலும், பிரதமர் வெளியேறும் நேரத்தில் அவர் தீக்குளித்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து