முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகாவில் ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலை: பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2023      இந்தியா
Modi-2022 12 20

Source: provided

பெங்களூரு : கர்நாடகாவிற்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடி துமகூருவில் எச்.ஏ.எல். நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள பசுமை கள ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைக்கிறார். 

கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நெருங்கி வருகிறது. வருகிற மே முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று (திங்கட்கிழமை) கர்நாடகம் வருகிறார். அவர் துமகூருவில் எச்.ஏ.எல். நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இந்த விழாவில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். பெங்களூருவில் இருந்து 70 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்த ஹெலிகாப்டர் தொழிற்சாலை அமைப்பதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த தொழிற்சாலையில் 20 ஆண்டுகளில் 3 டன் முதல் 15 டன் எடை வரை கொண்ட ஆயிரம் ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து