எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பாட்னா : பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை இழிவுபடுத்திய ராகுல் காந்திக்கு எதிராக நாடு தழுவிய பிரசாரத்தை பாஜக மேற்கொள்ளும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் அவருக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து, அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து, டெல்லியில் ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பிரதமர் மோடி - தொழிலதிபர் அதானி இடையே உள்ள தொடர்பு குறித்து பாராளுமன்றத்தில் தான் கேள்வி எழுப்பியதை சுட்டிக்காட்டினார். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை பாதுகாக்க தனது குரலை ஒடுக்கும் நோக்கில் அரசு செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
ராகுல் காந்தியின் செய்தியாளர் சந்திப்பை அடுத்து, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் பாட்னாவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ''ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதற்கும் அதானி விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. மற்றவர்களைப் பற்றி குறிப்பாக பிற்படுத்தப்பட்ட சமூகத்தைப் பற்றி இழிவாகப் பேசிய ராகுல் காந்தி, அதில் இருந்து கவனத்தை திசை திருப்ப முயல்கிறார். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவாகப் பேசிய ராகுல் காந்தி, அதற்கு மன்னிப்பு கேட்க மறுத்ததை அடுத்தே அவருக்கு சூரத் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்ட இந்த வழக்கில் இத்தகைய சூழல் உருவாவதைத் தடுக்க காங்கிரஸ் வழக்கறிஞர்கள் ஏன் முயலவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் பவன் கெரா கைது செய்யப்பட்டபோது அவரை விடுவிப்பதில் காட்டிய ஆர்வத்தை அக்கட்சியின் வழக்கறிஞர்கள் இதில் ஏன் காட்டவில்லை எனத் தெரியவில்லை.
பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த முதல் நபர் ராகுல் காந்தி கிடையாது. இதுவரை 32 பேர் இத்தகைய பதவி இழப்பை எதிர்கொண்டு இருக்கிறார்கள். பாஜகவைச் சேர்ந்த 6 பேர் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியை இழந்திருக்கிறார்கள். லாலு பிரசாத் யாதவ் பதவியை இழந்திருக்கிறார். ராகுல் காந்திக்கு எதிராக இன்னமும் 7 அவதூறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தகுதி நீக்க நடவடிக்கையை அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்த ராகுல் காந்தி முயல்கிறார். தன்னை ஒரு தியாகியாக சித்தரித்துக் கொள்கிறார். விரைவில் நடைபெற உள்ள கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் ஆதாயம் பெறும் நோக்கிலேயே அவர் இவ்வாறு நடந்து கொள்கிறார். பிற்படுத்தப்பட்ட சமூகத்தை இழிவுபடுத்திய ராகுலின் செயலை பாஜக, மக்கள் முன் எடுத்துவைக்கும். பிற்படுத்தப்பட்ட சமூகத்தை அவர் எவ்வாறு வேண்டுமென்றே அவமதித்துள்ளார் என்பதை நாங்கள் அம்பலப்படுத்துவோம். இதற்காக நாடு தழுவிய பிரசாரத்தை பாஜக முன்னெடுக்கும்'' என்று ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மட்டர் பன்னீர் மசாலா2 days 12 hours ago |
கோபி மஞ்சூரியன்![]() 5 days 11 hours ago |
சிம்பிள் சிக்கன் கறி![]() 1 week 2 days ago |
-
காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்
05 Jun 2023முத்தையா இயக்கத்தில் ஆர்யா சித்தி இத்னானி, ஆடுகளம் நரேன், மதுசூதன ராவ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி தற்போது வெளியாகி இருக்கும் படம் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்
-
மாமன்னன் இசை வெளியீட்டு விழா
05 Jun 2023மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சமீபத்தில் நடைபெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 05-06-2023.
05 Jun 2023 -
நவீன காலத்திற்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்ற வேண்டும் : துணைவேந்தர்கள் மாநாட்டில் கவர்னர் உரை
05 Jun 2023ஊட்டி : நவீன காலத்துக்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றி அமைக்க வேண்டும்.
-
வீரன் விமர்சனம்
05 Jun 2023மரகத நாணயம் இயக்குனர் சரவணன் இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் சூப்பர் ஹீரோ படமாக உருவாகியுள்ள படம் வீரன். கதை,
-
500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
05 Jun 2023சென்னை : 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.
-
சரத்குமார் நடிக்கும் போர் தொழில்
05 Jun 2023விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘போர் தொழில்’. இதில் அசோக் செல்வன், ஆர். சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
-
இதுவரை 2.29 லட்சம் பேர் விண்ணப்பம்: பொறியியல் மாணவர் தேர்வுக்கான ரேண்டம் எண்கள் இன்று ஒதுக்கீடு : வரும் 20-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு பணி
05 Jun 2023சென்னை : தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு இதுவரை 2.29 லட்சம் பேர் விண்ணப்பத்துள்ள நிலையில், மாணவர் தேர்வுக்கான ரேண்டம் எண்கள் இன்று ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
-
பாலம் தவறாக வடிவமைக்கப்பட்டுள்ளது: குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: பீகார் முதல்வர் நிதிஷ்
05 Jun 2023பாட்னா : பீகாரில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக விளக்கமளித்த முதல்வர் நிதிஷ் குமார், பாலம் தவறாக வடிவமைக்கப்பட்டுள்ளது, குற்றவாளிகள் மீது உ
-
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 11-ம் தேதி சேலம் பயணம் : ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
05 Jun 2023சேலம் : சேலம் மாவட்டத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள்கள் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், விழா ஏற்பாடுகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்
-
ஒடிசா ரயில் விபத்திற்கு பிறகு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது
05 Jun 2023சென்னை : ஒடிசா ரயில் விபத்திற்கு பிறகு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கியது.
-
கடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு 12-ம் தேதிக்கு தள்ளிவைப்பு : ஆலோசனைக்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
05 Jun 2023சென்னை : கடுமையான வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
-
துரிதம் விமர்சனம்
05 Jun 2023வெங்கடேசன் இயக்கத்தில் ஜெகன், ஈடன் உள்ளிட்டோர் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் துரிதம்.
-
பிரமாண்டமாக வெளியான ஸ்பைடர்-மேன்
05 Jun 2023இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக, அனைவராலும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படும் படம் மற்றும் ஸ்பைடர்மேன் வரிசையைச் சார்ந்த ஹாலிவுட் திரைப்படம் SPIDER-MAN:ACROSS THE S
-
தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
05 Jun 2023சென்னை : தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
பழம்பெரும் இந்தி நடிகை சுலோச்சனா லட்கர் காலமானார்: பிரதமர் நரேந்திரமோடி இரங்கல்
05 Jun 2023மும்பை : பழம்பெரும் இந்தி நடிகை சுலோச்சனா லட்கர் காலமானார். அவருக்கு வயது 94. அவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ரெயில் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்கிறோமா? - ஒடிசா அரசு விளக்கம்
05 Jun 2023புவனேஸ்வர் : பாலசோர் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்கும் எந்த எண்ணமும் ஒடிசா அரசுக்கு இல்லை என்றும், மீட்பு நடவடிக்கைகள் அனைத்தும் பொதுமக்கள் முன்
-
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருகிறோம்: ரணில் விக்ரமசிங்கே
05 Jun 2023கொழும்பு : இலங்கையில் பணவீக்கம் குறைந்து வருகிறது.
-
இந்த வாரம் வெளியாகும் டக்கர்
05 Jun 2023பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரிப்பில், கார்த்திக் ஜி கிரிஷ் எழுத்து இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள டக்கர் படம் ஜூன் 9 அன்று தமிழ
-
ஒடிசா ரயில் விபத்து: தமிழர்கள் 6 பேரை இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
05 Jun 2023சென்னை : ஒடிசா ரயில் விபத்தில் பாதுகாப்பாக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த அந்த 6 பேரிடம் இதுவரை பேச முடியவில்லை.
-
உன்னால் என்னால் விமர்சனம்
05 Jun 2023சோனியா அகர்வால், ராஜேஷ், ஆர். சுந்தர்ராஜன், ரவிமரியா, ஆகியோருடன் புதுமுகங்கள் ஜெகா , ஏ.
-
பாதுகாப்பு உபகரணங்களை இணைந்து தயாரிக்க இந்தியா, அமெரிக்கா ஒப்புதல்
05 Jun 2023புதுடெல்லி : பாதுகாப்பு உபகரண கூட்டு உற்பத்திக்கு இந்தியாவும், அமெரிக்காவும் ஒப்புதல் அளித்துள்ளன.
-
அமித்ஷாவுடன் மல்யுத்த வீராங்கனைகள் சந்திப்பு : பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
05 Jun 2023புதுடெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
-
கார் விபத்தில் மலையாள நடிகர் கொல்லம் சுதி பலி : திரையுலகினர் இரங்கல்
05 Jun 2023கொச்சி : மலையாள நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கொல்லம் சுதி நேற்று அதிகாலை நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 39.
-
ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை அடையாளம் காணப்பட்ட உடல்கள் 151: தலைமைச்செயலாளர்
05 Jun 2023பாலாசோர் : ஒடிசாவின் பாலாசோர் மாவட்டத்தில் நிகழ்ந்த மூன்று ரயில் விபத்தில் இதுவரை 151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.