முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றத்தில் செங்கோலை வைத்து தமிழகத்தில் காலூன்ற பார்க்கும் பா.ஜ.க.: நாம் தமிழர் கட்சி சீமான் சாடல்

சனிக்கிழமை, 27 மே 2023      தமிழகம்      அரசியல்
Seeman 2023 01 22

தஞ்சாவூர், பாராளுமன்றத்தில் செங்கோலை வைத்து தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற பார்க்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

தஞ்சையில் நேற்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

தஞ்சாவூரில் 2 பேர் மது குடித்து இறந்த சம்பவத்தில் முதலில் மெத்தனால் கலந்த மதுவை குடித்ததால் இறந்தனர் என்று கூறினர். பின்னர் சயனைடு கலந்த மதுவை குடித்ததால் இறந்தனர் என்று கூறுகின்றனர்.  அவர்கள் எப்படி இறந்தார்கள் என்று இதுவரை சரியான உண்மை தகவல் இல்லை. 

பாராளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்படும் என மத்திய பா.ஜ.க. அரசு கூறுவது தேவையற்றது. அவர்கள் தமிழகத்தை குறி வைக்கிறார்கள். அதற்காக தமிழ், தமிழ்நாடு என கூறி வருகிறார்கள். அவர்களுக்கு தமிழகத்தின் மீது உண்மையான அக்கறை இருந்தால் பெரிய கோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜசோழன் சிலையை கோவிலுக்கு உள்ளே வைக்க வேண்டியது தானே? ஏன் வெளியே வைத்துள்ளார்கள். செங்கோல் வைத்து தமிழகத்தில் காலூன்ற பார்க்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து