முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருங்காலங்களில் மதுரையில் இன்னும் அதிக வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும் : அமைச்சர் கே.என். நேரு உறுதி

சனிக்கிழமை, 27 மே 2023      தமிழகம்
KN-Nehru 2023 04 01

Source: provided

மதுரை : வரும் காலங்களில் இன்னும் அதிக வளர்ச்சி திட்டங்கள் மதுரையில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார். 

 மதுரை நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒபுளாபடித்துறை பாலம் திறப்பு விழா, அலங்கா நல்லூர், வாடிப்பட்டி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி, திருமங்கலம், திருப்பரங் குன்றம், சேடப்பட்டி, மேலூர், கொட்டாம்பட்டி ஒன்றியங்களில் கட்டப்பட்டு உள்ள 1191 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்ட தொடக்க விழா ஆகியவை நேற்று மதுரையில் நடந்தது. 

அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு இந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்படி மதுரை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது. அதன்படி ரூ. 188 கோடி மதிப்பீட்டில் சாலை பணிகள், ரூ. 2.18 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால், ரூ. 21.4 கோடி மதிப்பில் கல்வி வேளாண்மை திட்டப்பணிகள் நடை பெற்றுள்ளது. 

ரூ.15 கோடி மதிப்பில் தெருவிளக்குகள் எல்.இ.டி. பல்புகளாக மாற்றப்பட்டு உள்ளது. ரூ.347.8 கோடி மதிப்பில் குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.58.2 கோடி மதிப்பில் நீர்நிலைகள் மேம்பாட்டு பணிகள் நடைபெறுகிறது. ரூ.5 கோடி மதிப்பில் மின் மயானம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. 

ரூ. 2.88 கோடி மதிப்பில் பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ரூ.14.7 கோடி மதிப்பில் புதிய சந்தைகள் உருவாக்கப்பட்டுளது. ரூ.6.9 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. ரூ. 2.50 லட்சம் மதிப்பில் அறிவுசார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. 

ரூ.2.37 கோடி மதிப்பில் பள்ளி கட்டிட பராமரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளன. இதர மாநகராட்சியின் வளர்ச்சி திட்டப் பணிகள் ரூ.54.8 கோடியில் நடந்து வருகிறது. மதுரை மாநகராட்சிக்கு இந்த அரசு ஒரு ஆண்டில் மட்டும் ரூ.217.10 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. 

மேலும் மதுரை மாவட்ட நகராட்சியான மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டியில் ரூ.27.25 கோடி செல வில் சாலை பணிகள் நடந்து வருகின்றன. மேலும் நகராட்சிகளுக்கு திடக்கழிவு வாகனங்கள், எல்.இ.டி. விளக்குகள் வாங்கப்பட்டு உள்ளன. மேலும் பல கோடி ரூபாய் மதிப்பில் பூங்காக்கள், மயானங்கள், புதிய பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

திருமங்கலத்தில் நவீன பஸ் நிலையம் அமைக்க அதிக நிதி ஒதுக்க வேண்டும் என மாவட்ட செயலாளர் மணிமாறன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கிறேன். மதுரை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளுக்கு ரூ. 107.46 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. மாநகராட்சியில் ரூ.717 கோடி மதிப்பிலும், நகராட்சிக்கு ரூ.95 கோடி மதிப்பிலும், குடிநீர் வடிகால் வாரிய திட்டத்திற்கு ரூ.2008 கோடி என மதுரை மாவட்டத்திற்கு மட்டும் ரூ. 2928 கோடியே 30 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. வரும் காலங்களில் இன்னும் அதிக வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து