எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி, சென்னை வரும் பயணிகளுக்கு உதவவும், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உதவவும், சென்னை பெருநகர காவல்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசூர் என்ற இடத்தில் 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில் மோதிக் கொண்ட விபத்தில், ரயில் பெட்டிகள் சேதமடைந்து, உயிர் சேதம் ஏற்பட்டதுடன், பலர் காயமடைந்தனர். இதில் காயமடைந்து சென்னை வரும் பயணிகளுக்கு உதவ சென்ட்ரல், விமான நிலையத்தில் காவல் துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், பேரிடர் மீட்பு கட்டுப்பாட்டறையில் (எழிலகம்), அரசு அதிகாரிகள் குழுவினருடன் பணியாற்ற, சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் குழு இணைக்கப்பட்டுள்ளது. மேற்படி பயணிகளுக்கு உதவும் வகையில், சென்னையிலுள்ள பேரிடர் மீட்பு மையம் உதவி எண். 94458 69843, ரயில்வே உதவி எண்.90035 11919 மற்றும் ஒடிசா உதவி மையம் எண்.94422 35375 ஆகிய உதவி மைய எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில்...
விபத்துக்குள்ளான ரயிலில் பயணம் செய்த தமிழகம் மற்றும் இதர மாநிலங்களைச் சேர்ந்த பயணிகள் விமானம் மற்றும் இதர இரயில்கள் மூலம் சென்னை வருவதால், சென்னை விமான நிலையம் மற்றும் டாக்டர் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில், அமைக்கப்பட்டுள்ள சிறப்பு உதவி மையத்தில், ரயில்வே மற்றும் தமிழக ரயில்வே காவல்துறை (GRP) உடன் இணைந்து சென்னை பெருநகர காவல் ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் 24 மணி நேரம் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
ரயிலில் பயணம் செய்து, சென்னை, டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சென்ட்ரல் நிலையம் திரும்பும் பயணிகளுக்கு உதவுவதற்காக, சென்னை பெருநகர காவல், பூக்கடை காவல் துணை ஆணையாளர் ஷ்ரேயா குப்தா, (செல் எண்.94982 33333), தலைமையில், பூக்கடை உதவி ஆணையாளர் பாலகிருஷ்ணபிரபு (செல் எண்.94440 33599) மற்றும் சிறப்பு உதவி மைய வழிகாட்டும் அதிகாரி (Liaison Officer)/C-1 பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர் தளவாய்சாமி (செல் எண்.98409 76307) மற்றும் காவல் குழுவினர், சென்ட்ரல் இரயில் நிலையத்தில் தயார் நிலையில் இருப்பர். மேலும் காவல் குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் இருப்பர்.
காயமடைந்த பயணிகளுக்கு உடனடியாக சிகிச்சைக்கு அளிக்க இராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் RGGGH), உதவி ஆய்வாளர் ரமேஷ் (செல் எண்.94442 06868), சிறப்பு உதவி ஆய்வாளர் ஆனந்தி (செல் எண்.94981 32395) தலைமையில் காவல் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சென்ட்ரல் இரயில் நிலையத்தில் உதவி தேவைப்படும் பயணிகள் 044-2342454 மற்றும் 94981 00211 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம். டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சென்ட்ரல் இரயில் நிலைய கட்டுப்பாட்டறை எண்.044-25330952 மற்றும் 044-25330952 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.
விமான நிலையத்தில்....
ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலில் பயணம் செய்த பயணிகள், சென்னை விமான நிலையத்தில் வருகை தரும்போது, அங்குள்ள காவல் சிறப்பு கட்டுப்பாட்டறை குழுவினர் மூலம் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். இதற்காக, சென்னை விமான நிலையத்தில் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் உதவி எண்.94981 00151 அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையம் திரும்பிய பயணிகளுக்கு, சிகிச்சை அளிக்கவும், படுகாயமடைந்து சென்னை திரும்பியவர்களை ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவமனை அழைத்து செல்லவும், அவ்வாறு ஆம்புலன்ஸ் வாகனம் செல்லும்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் Green corridor வழித்தடத்தில் விரைவாக அழைத்துச் செல்லவும் போக்குவரத்து காவல் அதிகாரிகள் தலைமையில் காவல் வாகனம் மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் தாங்கள் செல்லும் இடங்களுக்கு டாக்சி மற்றும் ஆட்டோக்களில் எந்த இடையூறும் இல்லாமல் பயணிக்கவும், பயணிகளிடம் இருந்து ஆட்டோ மற்றும் டாக்சிகளில் அதிக கட்டணம் வசூலிக்காததை உறுதி செய்யவும், போக்குவரத்து காவல் அதிகாரிகள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உரிய உதவிகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேற்படி விபத்துக்குள்ளான இரயிலில் பயணம் செய்த பயணிகளுக்கு உதவி தேவைப்படும் வகையில், சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டறை எண்.044-23452359, தமிழக காவல் கட்டுப்பாட்டறை எண்.100, அவசர உதவி எண்.112 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு உதவிகள் பெறவும், குறைகள் இருப்பின் தெரிவிக்கவும், பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சிக்கன் சாசேஜ்![]() 2 days 12 hours ago |
பிரட் குலாப் ஜாமுன்![]() 6 days 6 hours ago |
சில்லி கார்லிக் சீஸ் பிரெட்![]() 1 week 3 days ago |
-
ஆர் யூ ஒகே பேபி - விமர்சனம்
25 Sep 2023லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கி நடித்துள்ள ஆர் யூ ஒகே பேபி திரைப்படம் சொல்லுவதெல்லாம் உண்மை என்ற டிவி நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது.
-
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகல்: அ.தி.மு.க - பா.ஜ.க. கூட்டணி முறிந்தது: இ.பி.எஸ். தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் அறிவிப்பு
25 Sep 2023சென்னை, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் சமீப கால கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அ.தி.மு.க.
-
டிசம்பர் மாதத்திற்கான ரூ. 300 தரிசன டிக்கெட் பதிவு துவக்கம் : திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
25 Sep 2023திருப்பதி : டிசம்பர் 1 முதல் 20-ம் தேதி வரை தரிசனம் செய்வதற்கான ரூ. 300 டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியுள்ளது.
-
ஐகோர்ட்டில் சொத்து விவரங்களை தாக்கல் செய்தார் நடிகர் விஷால் 29-ம் தேதிக்கு விசாரணை தள்ளிவைப்பு
25 Sep 2023சென்னை : லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நேற்று தனது சொத்து விபரங்களை நடிகர் விஷால் தாக்கல் செய்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் 25-09-2023.
25 Sep 2023 -
உலகிலேயே 2-வது மிக பெரிய இந்து கோவில் : அமெரிக்காவில் வரும் 8-ம் தேதி திறப்பு
25 Sep 2023வாஷிங்டன் : இந்தியாவிலுள்ள போசசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருசோத்தம் சுவாமிநாராயன் சன்ஸ்தா எனும் இந்து மத அமைப்பினால் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு வரும் அந்நாட்டிலேயே மிக பெர
-
இந்தியாவை துல்லியமாகக் காட்டும் எக்ஸ்-ரே தான் சாதிவாரி கணக்கெடுப்பு : பிலாஸ்பூரில் ராகுல் காந்தி பேச்சு
25 Sep 2023பிலாஸ்பூர்(சத்தீஸ்கர்) : இந்தியாவை துல்லியமாகக் காட்டும் எக்ஸ்-ரே வாக சாதிவாரி கணக்கெடுப்பு இருக்கும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
குறுவை நெற்பயிர் கருகியதால் மனமுடைந்து உயிரிழந்த விவசாயியின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் அரசு வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
25 Sep 2023சென்னை, குறுவை நெற்பயிர்கள் நீரின்றி கருகியதால் மனமுடைந்து உயிரிழந்த விவசாயி ராஜ்குமாரின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரணமாக அரசு வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 4 பேர் இடமாற்றம் : தலைமை செயலாளர் உத்தரவு
25 Sep 2023சென்னை : தமிழகத்தில் நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச்செயலாளர் ஷிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
-
ஜெர்மனியில் களைகட்டிய உலகின் மிக பெரிய பீர் திருவிழா
25 Sep 2023ஜெர்மனி : உலகின் மிக பெரிய பீர் திருவிழா ஜெர்மனியின் முனிச் நகரில் களைகட்ட தொடங்கியது.
-
கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 6,605 கனஅடி நீர் திறப்பு
25 Sep 2023சேலம், கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரத்து 605 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் இறைவன்
25 Sep 2023இந்த வாரம் வெளியாகவிருக்கும் இறைவன் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது.
-
அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி முறிவு மகிழ்ச்சியளிக்கிறது : சென்னையில் சீமான் பேட்டி
25 Sep 2023சென்னை : அதிமுக- பாஜக கூட்டணி பிரிந்துள்ளதை வரவேற்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
-
மின் கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி 20 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தம் : ஈரோட்டில் ரூ. 500 கோடி வர்த்தகம் பாதிப்பு
25 Sep 2023ஈரோடு : மின் நிலைக்கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஈரோட்டில் உள்ள 20 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நேற்று தங்களது உற்பத்தியை நிறுத்தி போராட்டத்தை நிறுத்தினர்.
-
அ.தி.மு.க .- பா.ஜ.க. கூட்டணி முறிவு குறித்து தேசிய தலைமை பேசும்: கோவையில் அண்ணாமலை பேட்டி
25 Sep 2023கோவை, அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி முறிவு தொடர்பாக தேசிய தலைமை பேசும் என்று தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
-
படப்பிடிப்பை தொடங்கி வைத்த இளையராஜா
25 Sep 2023Viswa Dream World நிறுவனம் சார்பில் R விஜயலக்ஷ்மி மற்றும் செல்லம்மாள் - குருசாமி G தயாரிப்பில், ரஜித் கண்ணா இயக்கத்தில் சாக்ஷி அகர்வால் மற
-
ஐமா விமர்சனம்
25 Sep 2023அறிமுக இயக்குநர் ராகுல் ஆர். கிருஷ்ணா இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ஐமா.
-
கபில் ரிட்டன்ஸ் பாடல் வெளியீடு
25 Sep 2023தனலட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் கபில் ரிட்டன்ஸ் படத்தை பேராசிரியர்.ஸ்ரீனி சௌந்தரராஜன் இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
-
மிலாடி நபி: புதுவையில் 28-ம் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவு
25 Sep 2023புதுச்சேரி : மிலாடி நபியை முன்னிட்டு புதுச்சேரியில் வரும் 28-ம் தேதி அனைத்து மதுக்கடைகளையும் மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கான பேச்சுவார்த்தை: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தி.மு.க.வுடன் தொடங்கியது
25 Sep 2023சென்னை : பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பேச்சு வார்த்தையை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தி.மு.க.வுடன் தொடங்கி உள்ளது.
-
வசூலை குவிக்கும் மார்க் ஆண்டனி
25 Sep 2023ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் ரிலீசான மார்க் ஆண்டனி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
-
டீமன் விமர்சனம்
25 Sep 2023ஒரு இளைஞனுக்கு தனியாக படம் இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்த நிலையில், ஒரு வாடகை வீட்டில் குடியேறுகிறான்.
-
விநாயகர் சிலை கரைப்பு: சென்னை மெரினா கடற்கரையில் 70 டன் கழிவுகள் அகற்றம்
25 Sep 2023சென்னை : சென்னை மெரினா கடற்கரையில் விநாயகர் சிலை கரைக்கப்பட்ட நிகழ்வை தொடர்ந்து, கரையோரங்களில் தேங்கிய 70 டன் கழிவுகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியுள்ளனர்.
-
மன்சூர் அலிகான் நடிக்கும் சரக்கு
25 Sep 2023மன்சூர் அலிகானின் சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது.
-
அக்.13 ல் வெளியாகும் சுல்தான் ஆப் டெல்லி
25 Sep 2023அசென்ஷன் பை அர்னாப் ரே என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள வெப் தொடர் சுல்தான் ஆப் டெல்லி.