எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி, சென்னை வரும் பயணிகளுக்கு உதவவும், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உதவவும், சென்னை பெருநகர காவல்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசூர் என்ற இடத்தில் 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில் மோதிக் கொண்ட விபத்தில், ரயில் பெட்டிகள் சேதமடைந்து, உயிர் சேதம் ஏற்பட்டதுடன், பலர் காயமடைந்தனர். இதில் காயமடைந்து சென்னை வரும் பயணிகளுக்கு உதவ சென்ட்ரல், விமான நிலையத்தில் காவல் துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், பேரிடர் மீட்பு கட்டுப்பாட்டறையில் (எழிலகம்), அரசு அதிகாரிகள் குழுவினருடன் பணியாற்ற, சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் குழு இணைக்கப்பட்டுள்ளது. மேற்படி பயணிகளுக்கு உதவும் வகையில், சென்னையிலுள்ள பேரிடர் மீட்பு மையம் உதவி எண். 94458 69843, ரயில்வே உதவி எண்.90035 11919 மற்றும் ஒடிசா உதவி மையம் எண்.94422 35375 ஆகிய உதவி மைய எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில்...
விபத்துக்குள்ளான ரயிலில் பயணம் செய்த தமிழகம் மற்றும் இதர மாநிலங்களைச் சேர்ந்த பயணிகள் விமானம் மற்றும் இதர இரயில்கள் மூலம் சென்னை வருவதால், சென்னை விமான நிலையம் மற்றும் டாக்டர் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில், அமைக்கப்பட்டுள்ள சிறப்பு உதவி மையத்தில், ரயில்வே மற்றும் தமிழக ரயில்வே காவல்துறை (GRP) உடன் இணைந்து சென்னை பெருநகர காவல் ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் 24 மணி நேரம் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
ரயிலில் பயணம் செய்து, சென்னை, டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சென்ட்ரல் நிலையம் திரும்பும் பயணிகளுக்கு உதவுவதற்காக, சென்னை பெருநகர காவல், பூக்கடை காவல் துணை ஆணையாளர் ஷ்ரேயா குப்தா, (செல் எண்.94982 33333), தலைமையில், பூக்கடை உதவி ஆணையாளர் பாலகிருஷ்ணபிரபு (செல் எண்.94440 33599) மற்றும் சிறப்பு உதவி மைய வழிகாட்டும் அதிகாரி (Liaison Officer)/C-1 பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர் தளவாய்சாமி (செல் எண்.98409 76307) மற்றும் காவல் குழுவினர், சென்ட்ரல் இரயில் நிலையத்தில் தயார் நிலையில் இருப்பர். மேலும் காவல் குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் இருப்பர்.
காயமடைந்த பயணிகளுக்கு உடனடியாக சிகிச்சைக்கு அளிக்க இராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் RGGGH), உதவி ஆய்வாளர் ரமேஷ் (செல் எண்.94442 06868), சிறப்பு உதவி ஆய்வாளர் ஆனந்தி (செல் எண்.94981 32395) தலைமையில் காவல் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சென்ட்ரல் இரயில் நிலையத்தில் உதவி தேவைப்படும் பயணிகள் 044-2342454 மற்றும் 94981 00211 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம். டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சென்ட்ரல் இரயில் நிலைய கட்டுப்பாட்டறை எண்.044-25330952 மற்றும் 044-25330952 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.
விமான நிலையத்தில்....
ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலில் பயணம் செய்த பயணிகள், சென்னை விமான நிலையத்தில் வருகை தரும்போது, அங்குள்ள காவல் சிறப்பு கட்டுப்பாட்டறை குழுவினர் மூலம் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். இதற்காக, சென்னை விமான நிலையத்தில் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் உதவி எண்.94981 00151 அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையம் திரும்பிய பயணிகளுக்கு, சிகிச்சை அளிக்கவும், படுகாயமடைந்து சென்னை திரும்பியவர்களை ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவமனை அழைத்து செல்லவும், அவ்வாறு ஆம்புலன்ஸ் வாகனம் செல்லும்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் Green corridor வழித்தடத்தில் விரைவாக அழைத்துச் செல்லவும் போக்குவரத்து காவல் அதிகாரிகள் தலைமையில் காவல் வாகனம் மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் தாங்கள் செல்லும் இடங்களுக்கு டாக்சி மற்றும் ஆட்டோக்களில் எந்த இடையூறும் இல்லாமல் பயணிக்கவும், பயணிகளிடம் இருந்து ஆட்டோ மற்றும் டாக்சிகளில் அதிக கட்டணம் வசூலிக்காததை உறுதி செய்யவும், போக்குவரத்து காவல் அதிகாரிகள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உரிய உதவிகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேற்படி விபத்துக்குள்ளான இரயிலில் பயணம் செய்த பயணிகளுக்கு உதவி தேவைப்படும் வகையில், சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டறை எண்.044-23452359, தமிழக காவல் கட்டுப்பாட்டறை எண்.100, அவசர உதவி எண்.112 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு உதவிகள் பெறவும், குறைகள் இருப்பின் தெரிவிக்கவும், பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 days ago |
-
காவலாளி அஜித் குமார் மரணம் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் : டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு
30 Jun 2025சென்னை : காவலாளி அஜித் குமார் மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
-
சந்தேக வழக்கில் அழைத்து சென்று தாக்கியது ஏன்? கோவில் காவலர் கொலை வழக்கில் காவல் துறைக்கு ஐகோர்ட் கேள்வி
30 Jun 2025மதுரை, ‘மடப்புரம் கோவில் காவலரை சாதாரண சந்தேக வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியது ஏன்?
-
வெறும் இணைப்புதான்; பிணைப்பு இல்லை; அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி குறித்து திருமாவளவன கருத்து
30 Jun 2025சென்னை : அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே இணைப்பு இருக்கிறது, ஆனால் பிணைப்பு இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
‘கடவுளின் எதிரிகள் பழிவாங்கப்படுவார்கள்’ ஈரான் மதகுரு அமெரிக்க அதிபர், நெதன்யாகு மீது கடும் விமர்சனம்
30 Jun 2025தெஹ்ரான் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் கடவுளின் எதிரிகள் என்று அறிவித்து, அவர்களுக்கு எதிராக ஈரான் மதகுரு அயதுல
-
குட் டே திரைவிமர்சனம்
30 Jun 2025உழைத்த சம்பளத்தை கொடுக்காமல் அவமானப்படுத்தும் ஏற்றுமதி நிறுவன மேலாளர்.
-
கர்நாடாக துணை முதல்வருடன் வலுவான பிணைப்பு முதல்வர் சித்தராமையா தகவல்
30 Jun 2025பெங்களூரு, கர்நாடகாவில் முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படக்கூடும் என்ற ஊகங்கள் அதிகரித்து வரும் நிலையில், தனக்கும், துணை முதல்வர் டி.கே.
-
அமெரிக்கா: தீயணைப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை
30 Jun 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் காட்டுத்தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
வாரத்தின் தொடக்க நாளில் தங்கம் விலை சரிவு
30 Jun 2025சென்னை, ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
-
விமான விபத்து விசாரணை: மத்திய அமைச்சர் புதிய தகவல்
30 Jun 2025புதுடெல்லி : அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து, திட்டமிட்ட நாசவேலை காரணமாக ஏற்பட்டதா?
-
சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்வதற்கு சுப்ரீம் கோர்ட் தடை
30 Jun 2025புதுடில்லி : சிறுவன் கடத்தல் வழக்கில், எம்.எல்.ஏ., பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
எண்ணெய் கப்பலில் தீ விபத்து: 14 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு
30 Jun 2025அகமதாபாத், குஜராத் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமன் நோக்கி சென்ற எண்ணெய் கப்பலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
-
தெலங்கானா: தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து: 8 பேர் கருகி பலி
30 Jun 2025ஐதராபாத், ஐதராபாத்தில் உள்ள மருந்துகள் உள்பட பல்வேறு பொருட்களை தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட உலை வெடிப்பில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.&
-
சண்டை முடிந்தது சமாதானம் பிறந்தது: எலான் மஸ்கை புகழ்ந்த ட்ரம்ப்
30 Jun 2025வாஷிங்டன் : எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்த மசோதா, செனட்டில் நிறைவேறி உள்ளது. இது தொடர்பாக நிருபர்கள் கேள்விக்கு, ''எலான் மஸ்க் சிறந்த மனிதர்.
-
7 கண்டங்களில் உள்ள மலைகளில் ஏறி தமிழ்ப்பெண் முத்தமிழ்ச்செல்வி சாதனை
30 Jun 2025சென்னை, எவரஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் தமிழ்ப் பெண்ணான முத்தமிழ்ச்செல்வி, அதைத்தொடர்ந்து 2 ஆண்டுகளுக்குள் 7 கண்டங்களிலும் உள்ள உயரமான மலைகளை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத
-
இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு
30 Jun 2025வாஷிங்டன்: இந்தியா- அமெரிக்கா இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இது குறித்து ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
-
திருக்குறள் திரைவிமர்சனம்
30 Jun 2025வள்ளுவநாட்டில் வாழும் திருவள்ளுவர் இளைஞர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதோடு, திருக்குறள் நூலையும் எழுதி வருகிறார், அவரது முயற்சிக்கு உறுதுணையாக இருக்கிறார் மனைவி வாசுகி.
-
மார்கன் திரைவிமர்சனம்
30 Jun 2025பெண் ஒருவர் மர்மமாக இறந்து கிடக்கிறார். கொலை பற்றி விசாரித்து வரும் காவல் அதிகாரி விஜய் ஆண்டனி, அஜய் தீசன் என்பவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருகிறார்.
-
விஜய் சேதுபதி மகனை இயக்கும் சண்டை இயக்குனர்
30 Jun 2025விஜய் சேதுபதி மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் படம் பீனிக்ஸ்.
-
பெல்ஜியம் கார் பந்தயம்: அஜித்குமார் அணி முதலிடம்
30 Jun 2025ப்ரூசெல்ஸ் : பெல்ஜியமில் நடந்த ஜிடி3 சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் அஜித்குமார் ரேஸிங் அணி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
-
சட்டம் - ஒழுங்கு ஆய்வுக்கூட்டம் முதல்வர் தலைமையில் நடந்தது
30 Jun 2025சென்னை, சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.
-
இந்த வாரம் வெளியாகும் பறந்து போ
30 Jun 2025ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'பறந்து போ'.
-
சூடானில் தங்கச்சுரங்கம் இடிந்ததில் 11 பேர் பலி
30 Jun 2025கெய்ரோ : சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து ஏற்பட்டதில், தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
ஓஹோ எந்தன் பேபி இசை வெளியீட்டு விழா
30 Jun 2025ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் திரைப்படம் ஓஹோ எந்தன் பேபி. அசோசியேஷன் வித் குட் ஷோ.
-
3BHK டிரெய்லர் வெளியீட்டு விழா
30 Jun 2025சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா தயாரிப்பில் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் '3BHK'. ஜூலை 4 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.
-
கண்ணப்பா திரைவிமர்சனம்
30 Jun 2025கடவுள் இல்லை.