எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : இரு சக்கர வாகனங்களில் 3 பேர் பயணிக்க அனுமதி இல்லை என்று மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் கட்கரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இரு சக்கர வாகனங்களில் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையும் மூன்றாவது நபராக ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி இளமாறன் கரீமின் கோரிக்கைக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கமளித்துள்ளார்.
இரு சக்கர வாகனங்களில் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையும் பெற்றொருடன் ஏற்றிச் செல்ல அனுமதிக்கும் வகையில் மோட்டார் வாகனச் சட்டத்தில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு திருத்தம் செய்ய மத்திய அரசை அணுகலாமா என்று கேரள அரசு ஆலோசித்து வருகிறது. போக்குவரத்து விதிமீறல்களை தானாக கண்டறியும் வகையில், மாநிலம் முழுவதும் 726 கேமராக்கள் பொருத்தப்பட்டு, ‘பாதுகாப்பான கேரளா’ என்ற மாநில அரசின் திட்டம் தொடங்கப்பட்டதை அடுத்து, இந்தக் கோரிக்கையை பலரும் முன்வைத்து வருகின்றனர்.
இது குறித்து கடந்த மாதம் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு, கேரள எம்.பி இளமாறன் கரீம் கடிதம் எழுதியிருந்தார். அதில், “நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் இரு சக்கர வாகனங்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். கார் வாங்குவது அனைவருக்கு சாத்தியமற்றது. எனவே இரு சக்கர வாகனங்களில் மூன்று பேர் அமர்ந்து செல்லும் வகையில் சட்ட திருத்தம் செய்ய அனுமதிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இந்த கோரிக்கையை முற்றிலுமாக நிராகரித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது, “மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் கீழ், இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை ஏற்றிச் செல்ல முடியாது. உலகம் முழுவதும் இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் இரண்டு பேர் பயணிக்கும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுநர் தவிர்த்து ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை அதில் ஏற்றிச் செல்ல அனுமதிப்பது புத்திசாலித்தனமாக இருக்காது” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து
15 Dec 202512 அணிகள் இடையிலான 5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்து வந்தது.
-
அஸ்வின் பதிவிட்ட வார்த்தை விளையாட்டு
15 Dec 2025சென்னை, அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய்யின் மகனான ‘ஜேசன் சஞ்சய்’ புகைப்படத்துடன் ‘பல்பு ஹோல்டர்’ படத்தை இணைத்து என்ன?
-
டெல்லியில் லயோனல் மெஸ்ஸி
15 Dec 2025புதுடெல்லி, மெஸ்ஸி 3-வது நாள் சுற்றுப்பயணமாக நேற்று டெல்லி சென்றார். அங்குள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 16-12-2025
16 Dec 2025


