எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தனது வங்கி கணக்கில் டெபாசிட் ஆன 9 ஆயிரம் கோடி ரூபாயை கண்டு சென்னையில் கார் ஓட்டுனர் ஒருவர் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார். இதையடுத்து வங்கி அதிகாரிகள் அவரை தொடர்பு கொண்டு பணத்தை திரும்ப பெற நடவடிக்கை மேற்கொண்டனர்.
பழனி அருகே உள்ள நெய்க்காரன் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். கால்டாக்சி டிரைவர். இவர் தனது நண்பர்களுடன் சென்னை கோடம்பாக்கத்தில் அறை எடுத்து தங்கி இருந்தார். இவர் கடந்த 9-ம் தேதி மதியம் 3 மணியளவில் காரை சாலையோரம் நிறுத்தி விட்டு அதில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரது வங்கி கணக்கில் ரூ. 9 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டதாக அவரது செல்போனில் குறுந்தகவல் வந்தது. அதில் நிறைய பூஜ்ஜியங்கள் இருந்ததால் அந்த தொகை எவ்வளவு என்பதை அவரால் கணக்கிட முடியவில்லை.
அவரது வங்கி கணக்கில் ஏற்கனவே ரூ. 105 மட்டுமே இருந்தது. அவர் அந்த குறுந்தகவலை ஆய்வு செய்த போது அது தான் கணக்கு வைத்திருந்த தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் இருந்து வந்ததை உறுதி செய்தார். அதன் பிறகு கணக்கிட்டபோது ரூ. 9 ஆயிரம் கோடி பணம் வந்தது தெரிய வந்தது. இதனால் அவர் இன்ப அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அந்த பணத்தில் இருந்து ரூ. 21 ஆயிரத்தை தனது நண்பரின் வங்கி கணக்குக்கு அனுப்பினார். இதற்கிடையே சுமார் 30 நிமிடங்களில் அந்த பணம் வங்கியில் இருந்து திரும்ப பெறப்பட்டது. ஆனால் ரூ. 21 ஆயிரம் பணத்தை வேறு கணக்குக்கு ராஜ்குமார் அனுப்பி இருந்ததை வங்கி அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதையடுத்து தூத்துக்குடியை சேர்ந்த வங்கி கிளை அதிகாரிகள் ராஜ்குமாரை தொடர்பு கொண்டு பணத்தை தவறுதலாக உங்களது வங்கி கணக்கில் செலுத்தியாகவும் அதனால் மீண்டும் எடுத்துக் கொண்டதாகவும் கூறி ரூ. 21 ஆயிரம் பணத்தை செலவு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர். அதை வங்கியில் ஒப்படைக்குமாறும் கூறினார்கள்.
இதற்கிடையில் வங்கியில் ரூ. 9 ஆயிரம் கோடி வந்ததால் பயந்து போன ராஜ்குமார் வக்கீல் ஒருவருடன் தி.நகரில் உள்ள வங்கி கிளைக்கு சென்றார். அங்கு ராஜ்குமார் தரப்பிலும், வங்கி தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருதரப்பினரும் சமாதானமாக செல்லலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
தி.நகரில் உள்ள வங்கி கிளையில் எங்களுக்குள் சமரசம் ஏற்பட்டது. நான் எனது நண்பருக்கு அனுப்பிய ரூ. 21 ஆயிரம் பணத்தை திருப்பி தர வேண்டாம் என்று வங்கி அதிகாரிகள் கூறினார்கள். மேலும் வங்கி சார்பில் எனக்கு கார் கடனும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
14 Feb 2026சென்னை, அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரியில் தே.ஜ.க. கூட்டணி 24 தொகுதிகளை வெல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க.
-
தங்கம் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரிப்பு..!
14 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து விற்பனையானது.
-
திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம் த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
14 Feb 2026சென்னை, அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு புதிதாக 41,492 பேர் சேர்ப்பு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளது.
-
தே.ஜ. கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்: காரைக்காலில் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.
-
அசாமில் ரூ.100 கோடியில் 4.2 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட அவசர கால தரையிறங்கும் சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
14 Feb 2026திப்ருகர், அசாம், திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் ரூ.100 கோடி மதிப்பிலான 4.2 கி.மீ கொண்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.&n
-
திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிப்ரவரி 21 முதல் 26-ம் தேதி வரை இ.பி.எஸ். தேர்தல் சுற்றுப்பயணம்
14 Feb 2026சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மீண்டும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
-
1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பினேன்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு
14 Feb 2026டெல்லி, 1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் தான் உயிர் தப்பியதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவுதினம்: வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த பிரதமர்
14 Feb 2026புல்வாமா, புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
-
வார ராசிபலன்
14 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Feb 2026- திருவண்ணாமலை அரிபிரம்மாதியர் அடிமுடி தேடியருளிய லீலை, லிங்கோத்பவ தரிசனம்.
- மூங்கிலணை காமாட்சியம்மன் பெருந்திருவிழா
- காளஹஸ்தி, ஶ்ரீசைலம், திருவைக்காவூர், திருக்கோகர்ணம் கோவில்களில
-
இன்றைய நாள் எப்படி?
14 Feb 2026


