முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானா முதல்வராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி: கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

வியாழக்கிழமை, 7 டிசம்பர் 2023      இந்தியா
Revanth-Reddy-2023-12-07

ஐதராபாத், தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி நேற்று பதவியேற்றார். அவருக்கு கவர்னர் தமிழிசை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றது. மொத்தம் உள்ள 119 சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 64 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. இதையடுத்து அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக ரேவந்த் ரெட்டி தேர்வு செய்யப்பட்டார். கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க ரேவந்த் ரெட்டி உரிமை கோரிய நிலையில், மாநில முதல் மந்திரியாக நேற்று பதவியேற்றார். அவருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள எல்.பி ஸ்டேடியத்தில் நேற்று பிற்பகல் 1.04 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சி  நடைபெற்றது. பதவியேற்பு நிகழ்ச்சியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தேர்லில் வெற்றி பெற்றால் தெலுங்கானா அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளும் திட்டம் அமல்படுத்தப்படும், ரூ.2 லட்சம் வரை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும், விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15,000, விவசாயத் தொழிலாளா்களுக்கு ஏக்கருக்கு ரூ.12,000 வழங்கப்படும் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை காங்கிரஸ் அளித்தது.

இதனால், அம்மாநில மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற மட்டும் சுமார் ரூ.1 லட்சம் கோடி தேவைப்படும் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே தெலுங்கானா அரசுக்கு ரூ.5 லட்சம் கோடி கடன் உள்ள நிலையில், நிதி நெருக்கடி நிலையை சமாளித்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் காங்கிரஸ் கட்சிக்கு கடும் சவால் காத்திருக்கிறது.

தெலங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி நேற்று பதவியேற்ற நிலையில் புதிய பேரவையை 15 மருத்துவர்கள் எம்எல்ஏக்களாக அலங்கரிக்கவிருக்கின்றனர். தெலங்கானா சட்டப்பேரவையில் எம்எல்ஏக்களாகப் பதவியேற்கவிருக்கும் 15 மருத்துவர்களில் மூன்று பேர் எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர்கள் ஆவர். பெரும்பாலானோர் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவர்களாக இருப்பதாகவும், சிலர் மருத்துவத் துறை சார்ந்த தொழில்களை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த 15 மருத்துவர்களில் 11 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதும், மூன்று பேர் பாரதிய ராஷ்ட்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதும், ஒருவர் பாஜகவை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து