எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நெல்லை : ஜி.எஸ்.டியால் சிறு, குறு தொழில் சீரழிந்துவிட்டதாக தெரிவித்த ராகுல் காந்தி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு நிதி வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டதாக நெல்லை பிரசாரக் கூட்டத்தில் குற்றச்சாட்டினார்.
நெல்லையில் நடைபெற்ற பிரம்மாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல்காந்தி, இன்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ராபர்ட் புரூஸ் (நெல்லை), கனிமொழி (தூத்துக்குடி), ராணிஸ்ரீகுமார் (தென்காசி), சு.வெங்கடேசன் (மதுரை), மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), நவாஸ்கனி (ராமநாதபுரம்), கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை), விஜய் வசந்த் (கன்னியாகுமரி) ஆகியோரை ஆதரித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியாவில் தற்போது பெரும் சித்தாந்த போர் நடக்கிறது. ஒரு பக்கம் பெரியார் போதித்த சமூகநீதி, சமத்துவம், விடுதலை இருக்கிறது. மற்றொரு பக்கம் மோடியை போன்றவர்கள் கொண்டாடும் வெறுப்பும், துவேசமும் இருக்கிறது. இந்தியாவில் பல்வேறு கலாச்சாரங்கள் உள்ளன. ஒன்றை விட மற்றொன்று எந்த விதத்திலும் தாழ்ந்தது அல்ல. தமிழ் வெறும் மொழி அல்ல; அது ஒரு வாழ்க்கை முறையாக இருக்கிறது. தமிழ் மீது தொடுக்கப்படும் தாக்குதலை, தமிழர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகவே பார்க்கிறேன். தமிழ், வங்காளம் போன்ற நாட்டில் பேசப்படும் மொழிகள் இல்லாமல் இந்தியா இருக்க முடியாது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி தர மறுத்துவிட்டது. தமிழக விவசாயிகள் டெல்லி சென்று போராடிய போது அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. மத்திய அரசு, தமிழகத்திற்கு எதையும் செய்யவில்லை. நாட்டின் 25 பெரும் பணக்காரர்கள் 70 சதவீத மக்களின் பணத்தை வைத்துள்ளனர். கோடீஸ்வரர்களின் 16 லட்சம் கோடி கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்துள்ளார். நாட்டில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை; பணக்காரர்களின் கடனே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஆட்சியில் இரண்டு, மூன்று தொழிலதிபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சிறு, குறு தொழில் அனைத்தும் ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பால் சீரழிந்துள்ளது.
அனைத்து துறைமுகங்கள், மின்சார தயாரிப்பு நிறுவனங்களை அதானி வசம் ஒப்படைக்கிறார். நாட்டின் அனைத்து அமைப்புகள், முகமைகள் ஆர்.எஸ்.எஸ் கொண்டு நிரப்பப்பட்டுள்ளது. 30 லட்சம் அரசு பணிகள் காலியாக உள்ள நிலையில், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அதை நிரப்புவோம். வேலை வாய்ப்பு பயிற்சி திட்டம் மூலம் தகுதி உள்ள ஒவ்வொரு இளைஞருக்கும் ஒரு லட்சம் நிதி உதவியுடன் பயிற்சி தர திட்டமிட்டுள்ளோம்.
மாநில அரசுகள் விரும்பினால் நீட் தேர்வு தொடரும். இதில் மாநில அரசே முடிவு செய்யும். தமிழ்நாட்டு மக்களே தங்களுடைய கல்வி முறை எப்படி இருக்க வேண்டும், தேர்வு முறை எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யலாம். தமிழ்நாட்டு பெண்களும் சரி, இந்தியாவின் பெண்களும் சரி, தேசத்தின் எதிர்காலத்தை அவர்களே பார்த்துக்கொள்கிறார்கள். இந்தியாவில் வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு சிறப்பான திட்டத்தை இன்டியா கூட்டணி வைத்துள்ளது. வறுமையின் பிடியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மீனவர்களின் முன்னேற்றம் மற்றும் அவர்களின் தொழிலை முன்னேற்ற தனி தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளோம். விவசாயிகள் எவ்வளவு முக்கியமோ மீனவர்களும் நாட்டுக்கு மிகவும் முக்கியம். மீனவர்களின் படகுகளுக்கு டீசல், காப்பீடு, கடன் அட்டை உள்ளிட்டவை வழங்கப்படும். இந்திய மீனவர்களின் நலனை பிரதமர் மோடி முற்றிலும் மறந்து விட்டார்.
ஏற்கனவே சொன்னது போல, இது ஒரு தத்துவப் போர். நாட்டின் அரசியல் சாசனத்தை காக்கும் இந்தப் போரில் நாம் வெல்வோம் என்பதை உறுதியாகச் சொல்கிறேன். நானும், காங்கிரஸ் கட்சியும் தமிழ்நாட்டோடு எப்போதும் இருப்போம். மோடி மட்டுமல்ல உலகில் எவராலும் தமிழ்நாட்டின் கலாசாரம், பண்பாட்டை தொட்டுக் கூட பார்க்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
முதல் முறையாக பார்சல்களை அனுப்ப தனி ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
20 Nov 2025சென்னை: பார்சல்களை அனுப்ப தனி ரயில் தொடங்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு: விண்ணப்பப்பதிவு அறிவிப்பு திடீர் ‘வாபஸ்'
20 Nov 2025சென்னை: சிறப்பு ஆசிரியர் தகுதிதேர்வு விண்ணப்பப்பதிவு வாபஸ் ஆனது.
-
ரூ.823 கோடிமதிப்பிலான ஆயுதங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்கிறது அமெரிக்கா
20 Nov 2025நியூயார்க்: டாங்கி எதிர்ப்பு ஏவுகண, பீரங்கி குண்டுகள் இந்தியாவுக்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யப்படும் என்று அமெரிக்க அறிவித்துள்ளது.
-
அமெரிக்காவில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு ஏலம் போன ஓவியம்
20 Nov 2025வாஷிங்டேன்: அமெரிக்காவில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு ஓவியம் ஏலம் போனது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-11-2025.
20 Nov 2025 -
நியூயார்க் மேயரை இன்று சந்திக்கிறோர் ட்ரம்ப்
20 Nov 2025நியூயார்க்: நியூயார்க் மேயர் மம்தானியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்திக்கிறார்.
-
மாணவி கொலை வழக்கு: வாலிபருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
20 Nov 2025ராமநாதபுரம்: மாணவி கொலை வழக்கில் கைதான வாலிபருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விடுத்துள்ளது.
-
ஐதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
20 Nov 2025ஐதராபாத்: ஐதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
பீகார் தேர்தல் தோல்வி எதிரொலி: பிரசாந்த் கிஷோர் மவுன விரதம்
20 Nov 2025டெல்லி: பீகார் சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிராயச்சித்தமாக ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் நேற்று ஒருநாள் மெளன விரதம் மேற்கொண்டார்.
-
தயாநிதி மாறனுக்கு நாவடக்கம் தேவை: பா.ம.க. செய்தி தொடர்பாளர் கே.பாலு
20 Nov 2025சென்னை, தயாநிதி மாறனுக்கு நாவடக்கம் தேவை என்று பா.ம.க. செய்தி தொடர்பாளர் கே.பாலு கூறினார்.
-
ஜி-20 உச்சி மாநாடு: பிரதமர் மோடி இன்று தென்ஆப்பிரிக்கா பயணம்
20 Nov 2025புதுடெல்லி: ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள தென்ஆப்பிரிக்காவுக்கு பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார்.
-
திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய அரசியல் கட்சி உதயம்
20 Nov 2025சென்னை, திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயரில் ஒரு புதிய கட்சியை மல்லை சத்யா தொடங்கினார்.
-
தூய்மை பணியாளர்களை இழிவுபடுத்துவதா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
20 Nov 2025சென்னை: தி.மு.க. அரசு தூய்மை பணியாளர்களை தொடர்ந்து இழிவு படுத்திவருவதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்
20 Nov 2025சென்னை: தி.மு.க. அரசை கண்டித்து கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
அதிக ஆண்டுகள் முதல்வர் பதவி: டாப் 10-ல் 8-வது இடத்திற்கு முன்னேறினார் நிதிஷ்குமார்
20 Nov 2025பாட்னா, அதிக ஆண்டுகள் முதல்வர் பதவியில் நிதிஷ்குமார் டாப் 10-ல் 8-வது இடத்தை பிடித்துள்ளார்.
-
திண்டுக்கல்லில் வெடிமருந்துகள் பறிமுதல் - 2 பேரிடம் விசாரணை
20 Nov 2025திண்டுக்கல், திண்டுக்கல்லில் வெடிமருந்துகள் பறிமுதல் செய்து 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
-
ராஜபாளையம் அருகே கோவில் காவலாளிகள் கொலை வழக்கில் கைதானவர்கள் மருத்துவமனையில் அனுமதி
20 Nov 2025விருதுநகர்: ராஜபாளையம் அருக கோவில் காவலாளிகள் கொலையில் கைதான வாலிபர்களுக்கு கை, கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
-
ஆரிய சூழ்ச்சிகளை சுக்குநூறாக உடைத்தெறிவோம்: முதல்வர்
20 Nov 2025சென்னை: ஆரிய சூழ்ச்சிகளை சுக்குநூறாக உடைத்தெறிவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவில் ரூ.88 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் சவுதி அரேபியா அறிவிப்பு
20 Nov 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் ரூ.88 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்று சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.
-
சென்னையில் பராமரிப்பு பணி: 49 மின்சார ரயில் சேவைகள் ரத்து
20 Nov 2025சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் 49 மின்சார ரயில் சேவை, சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டன.
-
இந்திய வீரர்களுக்கு வரவேற்பு
20 Nov 2025இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் கொல்கத்தாவில் நடைபெற்றது.
-
பெண்கள் முன்னேறும்போது, சமூகமும் முன்னேறுகிறது: ஜனாதிபதி முர்மு பேச்சு
20 Nov 2025ராய்ப்பூர், பெண்கள் முன்னேறும்போது, சமூகமும் முன்னேறுகிறது என்று ஜனாதிபதி திரெளபதி முர்மு தெரிவித்தார்.
-
சென்னை-ஆந்திரா இடையே சிறப்பு ரயில்
20 Nov 2025சென்னை: சென்னை - ஆந்திரா இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
மசோதா விவகாரம்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு தி.மு.க. வரவேற்பு
20 Nov 2025புதுடெல்லி, மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கும விவசாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு தி.மு.க. வரவேற்பு அளித்துள்ளது.
-
எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: சரத்குமார் கோரிக்கை
20 Nov 2025சென்னை, எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவடைய பொதுமக்கள் கையில் தான் உள்ளது என்று சரத்துகுமார் கூறினார்.


