எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
நெல்லை : ஜி.எஸ்.டியால் சிறு, குறு தொழில் சீரழிந்துவிட்டதாக தெரிவித்த ராகுல் காந்தி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு நிதி வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டதாக நெல்லை பிரசாரக் கூட்டத்தில் குற்றச்சாட்டினார்.
நெல்லையில் நடைபெற்ற பிரம்மாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல்காந்தி, இன்டியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ராபர்ட் புரூஸ் (நெல்லை), கனிமொழி (தூத்துக்குடி), ராணிஸ்ரீகுமார் (தென்காசி), சு.வெங்கடேசன் (மதுரை), மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), நவாஸ்கனி (ராமநாதபுரம்), கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை), விஜய் வசந்த் (கன்னியாகுமரி) ஆகியோரை ஆதரித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியாவில் தற்போது பெரும் சித்தாந்த போர் நடக்கிறது. ஒரு பக்கம் பெரியார் போதித்த சமூகநீதி, சமத்துவம், விடுதலை இருக்கிறது. மற்றொரு பக்கம் மோடியை போன்றவர்கள் கொண்டாடும் வெறுப்பும், துவேசமும் இருக்கிறது. இந்தியாவில் பல்வேறு கலாச்சாரங்கள் உள்ளன. ஒன்றை விட மற்றொன்று எந்த விதத்திலும் தாழ்ந்தது அல்ல. தமிழ் வெறும் மொழி அல்ல; அது ஒரு வாழ்க்கை முறையாக இருக்கிறது. தமிழ் மீது தொடுக்கப்படும் தாக்குதலை, தமிழர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகவே பார்க்கிறேன். தமிழ், வங்காளம் போன்ற நாட்டில் பேசப்படும் மொழிகள் இல்லாமல் இந்தியா இருக்க முடியாது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி தர மறுத்துவிட்டது. தமிழக விவசாயிகள் டெல்லி சென்று போராடிய போது அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. மத்திய அரசு, தமிழகத்திற்கு எதையும் செய்யவில்லை. நாட்டின் 25 பெரும் பணக்காரர்கள் 70 சதவீத மக்களின் பணத்தை வைத்துள்ளனர். கோடீஸ்வரர்களின் 16 லட்சம் கோடி கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்துள்ளார். நாட்டில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை; பணக்காரர்களின் கடனே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஆட்சியில் இரண்டு, மூன்று தொழிலதிபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சிறு, குறு தொழில் அனைத்தும் ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பால் சீரழிந்துள்ளது.
அனைத்து துறைமுகங்கள், மின்சார தயாரிப்பு நிறுவனங்களை அதானி வசம் ஒப்படைக்கிறார். நாட்டின் அனைத்து அமைப்புகள், முகமைகள் ஆர்.எஸ்.எஸ் கொண்டு நிரப்பப்பட்டுள்ளது. 30 லட்சம் அரசு பணிகள் காலியாக உள்ள நிலையில், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அதை நிரப்புவோம். வேலை வாய்ப்பு பயிற்சி திட்டம் மூலம் தகுதி உள்ள ஒவ்வொரு இளைஞருக்கும் ஒரு லட்சம் நிதி உதவியுடன் பயிற்சி தர திட்டமிட்டுள்ளோம்.
மாநில அரசுகள் விரும்பினால் நீட் தேர்வு தொடரும். இதில் மாநில அரசே முடிவு செய்யும். தமிழ்நாட்டு மக்களே தங்களுடைய கல்வி முறை எப்படி இருக்க வேண்டும், தேர்வு முறை எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யலாம். தமிழ்நாட்டு பெண்களும் சரி, இந்தியாவின் பெண்களும் சரி, தேசத்தின் எதிர்காலத்தை அவர்களே பார்த்துக்கொள்கிறார்கள். இந்தியாவில் வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு சிறப்பான திட்டத்தை இன்டியா கூட்டணி வைத்துள்ளது. வறுமையின் பிடியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மீனவர்களின் முன்னேற்றம் மற்றும் அவர்களின் தொழிலை முன்னேற்ற தனி தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளோம். விவசாயிகள் எவ்வளவு முக்கியமோ மீனவர்களும் நாட்டுக்கு மிகவும் முக்கியம். மீனவர்களின் படகுகளுக்கு டீசல், காப்பீடு, கடன் அட்டை உள்ளிட்டவை வழங்கப்படும். இந்திய மீனவர்களின் நலனை பிரதமர் மோடி முற்றிலும் மறந்து விட்டார்.
ஏற்கனவே சொன்னது போல, இது ஒரு தத்துவப் போர். நாட்டின் அரசியல் சாசனத்தை காக்கும் இந்தப் போரில் நாம் வெல்வோம் என்பதை உறுதியாகச் சொல்கிறேன். நானும், காங்கிரஸ் கட்சியும் தமிழ்நாட்டோடு எப்போதும் இருப்போம். மோடி மட்டுமல்ல உலகில் எவராலும் தமிழ்நாட்டின் கலாசாரம், பண்பாட்டை தொட்டுக் கூட பார்க்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 11 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
சென்னை சட்டம் - ஒழுங்கு தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுடன் காவல் ஆணையர் ஆலோசனை
17 May 2025சென்னை : சென்னையில் சட்டம் - ஒழுங்கு நிலை தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுடன் காவல் ஆணையர் அருண் ஆலோசனை மேற்கொண்டார்.
-
ஏமன் துறைமுகங்கள் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்
17 May 2025சனா, ஏமன் துறைமுகங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
-
இந்திய தாக்குதலை முதன்முறையாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் பிரதமர்
17 May 2025இஸ்லாமாபாத், ஆபரேஷன் சிந்தூரின்போது தங்கள் நாட்டின் முக்கிய விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது பற்றி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முதன்முறையாக வெள
-
அரபிக்கடல் பகுதியில் மே 22ல் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி
17 May 2025சென்னை, அரபிக்கடல் பகுதியில் வரும் 22 ம் தேதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது.
-
பள்ளி புத்தகம் கொண்டு வரவேண்டாம்: மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த கேரளா அரசு
17 May 2025கேரளா : கேரளாவில் முதல் 2 வாரங்களுக்கு மாணவர்கள் புத்தகங்கள் கொண்டு செல்ல தேவையில்லை என்று அந்த மாநில அரசு அறிவிததுள்ளது.
-
காங்கிரஸ் பரிந்துரை நிராகரிப்பு: சசி தரூரை தேர்வு செய்த மத்திய அரசு
17 May 2025புதுடெல்லி, பாகிஸ்தான் மோதல் தொடர்பாக வெளிநாட்டு அரசுகளுக்கு விளக்கமளிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கு காங்கிரஸ் பரிந்துரைத்த 4 எம்.பி.களைத் தவிர்த்து, மத்திய அரசு சசி
-
தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் 1.8 லட்சத்தை தாண்டிய மாணவர் சேர்க்கை
17 May 2025சென்னை, அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை 1.8 லட்சத்தை தாண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: தமிழகத்துக்கு நீர்வரத்து அதிகரிப்பு
17 May 2025பெங்களூரு, கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
-
நாட்டின் பிரதிநிதியாக குழுவை வழிநடத்துவதில் பெருமை : தி.மு.க. எம்.பி. கனிமொழி
17 May 2025சென்னை : நாட்டின் பிரதிநிதயாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குழுவை வழிநடத்துவதில் பெருமை என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
-
இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட்
17 May 2025ஸ்ரீஹரிகோட்டா, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பூமி கண்காணிப்புக்காக 1,696.24 கிலோ எடை கொண்ட இ.ஒ.எஸ்-09 என்ற செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது.
-
காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வழிபாடு
17 May 2025காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று (மே 17) நடைபெற்றது.
-
பேருந்தில் இருந்து முதியவரை இறக்கி விட்டு தாக்கிய ஓட்டுநர் - நடத்துநர் பணியிடை நீக்கம்
17 May 2025சென்னை : சென்னை மாநகர பேருந்தில் இருந்து முதியவரை இறக்கி விட்டு தாக்கிய ஓட்டுநர், நடத்துநர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-05-2025
17 May 2025 -
வாகாவில் பறக்க விடப்பட்டுள்ள புதிய இந்திய தேசிய கொடி
17 May 2025சண்டிகர் : வாகாவில் பறக்க விடப்பட்டுள்ள புதிய இந்திய தேசிய கொடி பறக்கவிடப்பட்டது.
-
இங்கிலாந்தில் ராணுவ தளத்தில் பயங்கர தீ விபத்து: 3 பேர் பலி
17 May 2025லண்டன் : இங்கிலாந்தில் ராணுவ தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆகஸ்ட் மாத டிக்கெட் வெளியீடு
17 May 2025திருமலை : திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆகஸ்ட் மாதம் டிக்கெட் வெளியீடு செய்யப்பட்டது.
-
இமயமலையேற்றத்தின்போது இந்தியர் மயங்கி விழுந்து பலி
17 May 2025காத்மண்டு : இமயமலையேற்றத்தின்போது இந்தியர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
-
காஸாவில் 2 நாட்களில் மட்டும் 300 பேர் பலி
17 May 2025காஸா : காஸாவில் ஹமாஸ் படையினரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களில் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
-
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இந்தியா ஏ அணி அறிவிப்பு
17 May 2025மும்பை : இங்கிலாந்துக்கு லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்தியா ஏ அணியை பி.சி.சி.ஐ. நேற்று (மே 16) அறிவித்துள்ளது.
-
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: 9 பேர் பலி
17 May 2025ரஷ்யா : உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ஒடிசாவில் மின்னல் தாக்கி 9 பேர் பலி
17 May 2025புவனேஸ்வர் : ஒடிசாவில் மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மாணவர்களின் மொழித்திறன்களை மேம்படுத்த 'லெவல் அப்' திட்டம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
17 May 2025சென்னை, மாணவர்களின் கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகியவற்றின் அடிப்படைத் திறன்களை மேம்படுத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
-
பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் வாழ்த்து
17 May 2025சென்னை, ரொமேனியாவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் சூப்பர்பெட் செஸ் கிளாசிக் 2025 பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “
-
பாலஸ்தீனியர்களை நிரந்தரமாக லிபியாவில் குடியமர்த்த திட்டம் : சொல்கிறார் அதிபர் ட்ரம்ப்
17 May 2025வாஷிங்டன் : பாலஸ்தீனியர்களை நிரந்தரமாக லிபியாவில் குடியமர்த்த டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
-
இது காவி நாடல்ல; திராவிட நாடு: தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் திட்டவட்டம்
17 May 2025சென்னை, இது காவி நாடல்ல; திராவிட நாடு என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இடஒதுக்கீடு, பன்முகத்தன்மையை சீர்கெடுக்கும் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும்