முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூன் 2024      ஆன்மிகம்
Tiruchendur 2024-01-30

Source: provided

திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று விடுமுறை நாளையொட்டி ஏராளமான பக்தர்கள் திரண்டு நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்கி வருகிறது. மேலும் சூரனை வதம் செய்த இடமாகவும், குரு ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. 

இந்த நிலையில், வார விடுமுறை தினமான நேற்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தனர். அவர்கள் காலையில் இருந்தே கடலில் புனித நீராடி, நீண்ட  வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 

ஒரு புறம் மாலையும், கழுத்துமாக வந்து திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள், மறுபுறம் மொட்டையடித்து காணிக்கை செலுத்தும் பக்தர்கள் என கோவில் வளாகமே பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. 

பக்தர்களின் வருகையால்கோவில் வளாகம், கடற்கரைப் பகுதி, நாழி கிணறு, முக்கிய சாலைகள் முழுவதும் பக்தர்களால் நிறைந்து காணப்பட்டது.  பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. மேலும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து