முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ல் இடைத்தேர்தல் : விழுப்புரத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் - வேட்பு மனு தாக்கல் வரும் 14-ம் தேதி தொடக்கம்

திங்கட்கிழமை, 10 ஜூன் 2024      தமிழகம்
Election 2024-02-07

Source: provided

சென்னை : விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதை அடுத்து விழுப்புர மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாக தமிழக  தலைமை தேர்தல் ஆணையர் சாகு தெரிவித்துள்ளார்.

உடல்நலக்குறைவால்...

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து 8ம் தேதி விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. பொதுவாகவே ஒரு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. உயிரிழந்தாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும்.

மத்தியில் அமைச்சரவை....

அந்த வகையில் இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில் ஒரே கட்டமாக கடந்த 19ம் தேதி தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெற்றது. முடிவுகள் அறிவிக்கப்பட்டு பிரதமர் நரேந்திர மோடி மோடி தலைமையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுள்ளது.

ஆணையம் அறிவிப்பு...

இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ளது. அதில் ஜூலை 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தாக்கல் ஜூன் 14-ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுதாக்கலுக்கான கடைசி நாள் ஜூன் 21-ம் தேதி ஆகும். மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24-ம் தேதி நடைபெறுகிறது. மனுக்களை வாபஸ் பெற ஜூன் 26 -ம் தேதி கடைசி நாள் ஆகும். அன்று தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்குப்பதிவு ஜூலை 10 -ம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜூலை 13ஆம் தேதி நடைபெறுகிறது.விக்கிரவாண்டி உட்பட நாடுமுழுவதும் மொத்தம் 13 பேரவை தொகுதிகளில் ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. 

நடத்தை விதிகள்... 

இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இடைத்தேர்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்திற்கு புதிய திட்டங்கள் அறிவிக்க கூடாது என்றும் கூறியுள்ள அவர், ஏற்கனவே செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு தடை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தல் விவரம்:

1) வேட்பு மனு தாக்கல் - ஜூன் 14-ம் தேதி.

2) மனுதாக்கல் கடைசி நாள் - ஜூன் 21-ம் தேதி.

3) மனுக்கள் மீது பரிசீலனை - ஜூன் 24-ம் தேதி.

4) மனுக்கள் வாபஸ் -  ஜூன் 26 கடைசி நாள்.

5) இறுதி வேட்பாளர் பட்டியல்- ஜூன் 26-ல் வெளியீடு

6) வாக்குப்பதிவு - ஜூலை 10 -ம் தேதி.

7) வாக்கு எண்ணிக்கை - ஜூலை 13-ம் தேதி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து