முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்திற்கான வரி பகிர்வில் மத்திய அரசு ஓரவஞ்சனை : அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு

புதன்கிழமை, 12 ஜூன் 2024      தமிழகம்
EVa-Velu 2023 04 01

Source: provided

சென்னை : ஜி.எஸ்.டி. வந்த பிறகு தமிழகத்திற்கான வரி பகிர்வில் மத்திய அரசு தொடர்ந்து ஓரவஞ்சனையுடன் செயல்படுவதாக அமைச்சர் எ.வ.வேலு குற்றம் சாட்டியுள்ளார்.  

இது தொடர்பாக சென்னை வேப்பேரியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

ஜி.எஸ்.டி. வந்தது முதல் நிதி பங்கீடு செய்வதில் மத்திய அரசாங்கம் தொடர்ந்து ஓரவஞ்சனையாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே வரி செலுத்துவதில் 2-வது இடத்தில் உள்ள மாநிலம் தமிழகம்தான். 

ஆனால் உத்தர பிரதேசத்திற்கு 26,000 கோடி ரூபாயும், தமிழகத்திற்கு  5,600 கோடி ரூபாயும்  மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்ற நிலைதான் தற்போது இருக்கிறது. 

இருப்பினும் ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை வைத்துள்ள தமிழக மக்கள், மத்திய அரசாங்கம் இப்படி வஞ்சிக்கிறது என்பதை உணர்ந்த காரணத்தினால்தான் பா.ஜ.க. ஆட்சியை அகற்றும் உணர்வில் இண்டியா  கூட்டணிக்கு வாக்களித்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். 

நாடாளுமன்றத்தில் மாநில உரிமைகளுக்காக இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் குரல் எழுப்புவார்கள். இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து