முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் துணைநிலை கவர்னருக்கு அதிகாரம்: எதிர்க்கட்சிகள் கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2024      இந்தியா
Umar-Abdullah 2023-10-27

Source: provided

புதுடெல்லி : காஷ்மீரில் துணைநிலை கவர்னருக்கு மத்திய அரசு கூடுதல் அதிகாரம் வழங்கியதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

ஒன்றுபட்ட காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு விலக்கப்பட்டு அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதில் லடாக் யூனியன் பிரதேசத்துக்கு சட்டசபை இல்லாத நிலையில், சட்டசபை கொண்டிருக்கும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் காஷ்மீரில் போலீஸ், சட்டம்-ஒழுங்கு, ஐ.ஏ.எஸ்-ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸ் அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகம் சார்ந்த முடிவுகள் எடுக்க துணை நிலை கவர்னருக்கு கூடுதல் அதிகாரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கி இருக்கிறது. 

மேலும் மாநில அரசு வக்கீல், சட்ட அதிகாரிகள் நியமனம், ஊழல் தடுப்பு பிரிவு தொடர்பான விவகாரங்களில் முடிவுகளை எடுக்கவும் துணைநிலை கவர்னருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019-ல் திருத்தங்களை செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காஷ்மீர் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இதுதொடர்பாக காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் விகார் ரசூல் தனது டுவிட்டர் பக்கத்தில், 

காஷ்மீரில் சரியான ஜனநாயக நடைமுறை மற்றும் மாநில அந்தஸ்து வழங்குவதற்கு முன்னரே ஜனநாயக படுகொலை செய்யப்பட்டிருப்பது தெளிவாகிறது. போலீஸ், சட்டம், ஒழுங்கு, அதிகாரிகள் பணியிடமாற்றம் உள்ளிட்டவற்றில் அதிக அதிகாரம் துணைநிலை கவர்னருக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது என குறிப்பிட்டு உள்ளார்.

 மத்திய அரசின் இந்த அறிவிப்பு மூலம் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு உடனடியாக வழங்காது என்பது தெளிவாவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வரும், தேசிய மாநாடு கட்சி துணைத் தலைவருமான உமர் அப்துல்லா, மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூலம் காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முதல்வர், ஒரு உதவியாளரை நியமிக்கக்கூட துணைநிலை கவர்னரை கெஞ்ச வேண்டும். அதிகாரமற்ற, ரப்பர் ஸ்டாம்ப் முதல்வரை  விட காஷ்மீர் மக்கள் தகுதியானவர்கள் என சாடியுள்ளார்.

மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், மற்றொரு முன்னாள் முதல்வருமான மெகபூபாவின் மகளும், ஊடக ஆலோசருமான இல்திஜா முப்தி தனது டுவிட்டர் பக்கத்தில், 

காஷ்மீரில் தேர்தல் நடத்த இந்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இங்கு பா.ஜ.க. அல்லாத அரசு அமையும் என மத்திய அரசுக்கு தெரிந்து இருக்கிறது. 

இதனால்தான் மக்களால் தேர்வு செய்யப்படாத துணைநிலை கவர்னருக்கு அதிக அதிகாரங்களை வழங்கி அவர் மூலம் காஷ்மீரை ஆள அரசு நினைக்கிறது என குற்றஞ்சாட்டியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து