எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இங்கிலாந்தின் பிரபல ஆல்ரவுண்டர் சாம் கரண் தனது முதல் டி20 சதத்தினை நிறைவு செய்துள்ளார். லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சர்ரே, ஹேம்ஸ்ரி அணிகள் மோதின. டாஸ் வென்ற சர்ரே பௌலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஹேம்ஸ்ரி அணி 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபடசமாக டாபி ஆல்பர்ட் 66 (45), ஜேம்ஸ் வின்ஸ் 23(11), லியாம் டாவ்ஸன் 19 (9) அடித்தார்கள்.அடுத்து ஆடிய சர்ரே அணியில் 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் விழுந்த சமயத்தில் சாம் கரண் இறங்கினார்.
13-வது ஓவரில் தனது அரைசத்ததினை நிறைவு செய்த சாம் கரண் 58 பந்துகளில் தனது முதல் சத்தினை (102)அடித்து அசத்தினார். இதில் 7 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் அடங்கும். சிக்ஸர் அடித்து சதத்தினை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. 19.1 ஓவரில் 188/5 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது சர்ரே அணி. சாம் கரண் இதுவர 191 இன்னிங்ஸில் விளையாடி 3323 ரன்கள் அடித்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 133.29. 18 அரைசதம், 1 சதம் விளாசியுள்ளார். ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக செயல்பட்ட சாம் கரண் தொடக்க வீரராக களமிறங்கி சரியாக விளையாடவில்லை. சிஎஸ்கே அணியில் நம்,4,5,6இல் களமிறங்கி சிறப்பாக விளையாடியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான வீரராக இருந்தார் சாம் கரண்.
அமைச்சர் உதயநிதி உதவி
தமிழ்நாட்டை சேர்ந்த தேசிய சைக்கிள் பந்தய வீரர் பிரதீப் சங்கருக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்காக ரூ,16 லட்சம் மதிப்பிலான சர்வதேச தரத்திலான சைக்கிளையும், வில்வித்தை வீராங்கனை கண்மணிக்கு ரூ,2.8 லட்சம் மதிப்பிலான வில்வித்தை உபகரணத்தையும், உலக பார்வையற்றோருக்கான கிரிக்கெட் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மகாராஜாவுக்கு அமெரிக்காவில் உயர்தர பயிற்சி பெற ரூ,1.20 லட்சத்திற்கான காசோலையையும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் இந்த உதவி அளிக்கப்பட்டது.
ஐ.சி.சி.க்கு ரூ.167 கோடி இழப்பு
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை அமெரிக்காவில் நடத்தியால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு ரூ. 167 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 9-வது டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஜூன் 2 முதல் 29 ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்றது. அமெரிக்காவில் நியூயார்க், டெக்சாஸ், புளோரிடா ஆகிய 3 மாகாணங்களில் போட்டிகள் நடைபெற்றன. இந்த தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் மோதல் நியூயார்க் நகரில் அரங்கேறியது.அமெரிக்காவில் கிரிக்கெட் போட்டியை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் அங்கு போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரை அமெரிக்காவில் நடத்தியதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி-க்கு 20 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் ரூ.167 கோடி இருக்கும். நாளை வெள்ளிக்கிழமை கொழும்புவில் நடைபெறும் ஐ.சி.சி வருடாந்திர மாநாட்டில் இந்த இழப்பு தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. இதே மாநாட்டில் மற்றொரு விவகாரம் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது. அதாவது, பி.சி.சி.ஐ செயலாளராக இருக்கும் ஜெய் ஷாவை ஐ.சி.சி தலைவர் பதவிக்கு நியமனம் செய்வது பற்றி விவாதிக்கப்பட உள்ளது. இதனால், இந்தக் கூட்டம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜடேஜா கிரிக்கெட் பயணம்?
உலக அளவில் தலைசிறந்த ஆல்-ரவுண்டர்களில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜாவும் ஒருவர் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் அதிரடி காட்டி வருகிறார். ஆனால், சமீப காலமாக ரவீந்திர ஜடேஜாவின் பார்ம் சரியில்லை. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சொதப்பி வருகிறார். பீல்டிங்கிலும் தடுமாறி வருகிறார் என்பது இந்திய அணிக்கு கவலை அளிக்கக்கூடிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத ரவீந்திர ஜடேஜா, இந்திய டி20 அணியில் இருந்து ஓய்வு அறிவித்துவிட்டார்.
இந்நிலையில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் அறிவிக்கப்பட்டது. இதில் ரவீந்திர ஜடேஜா பெயர் இடம்பெறவில்லை. அக்சர் பட்டேல் சிறப்பாக பேட்டிங் செய்வதால் ஜடேஜாவின் இடத்தைப் பிடித்துள்ளார். வாஷிங்டன் சுந்தரும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். எனவே இவர்கள் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. டி20 போட்டியில் ஜடேஜா ஓய்வை அறிவித்து விட்டதால், இனி ஒருநாள் போட்டிகளில் அவருக்கு இடம் கிடைப்பது கஷ்டம்தான். ரவிச்சந்திரன் அஸ்வின் போல டெஸ்ட் போட்டிகளில் மட்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது.
இங்கி., 416 ரன்கள் குவிப்பு
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹமில் நேற்று முன்தினம் (ஜூலை 18) தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆலி போப் 121 ரன்கள் (15 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர்) எடுத்தார். அவரைத் தொடர்ந்து, அதிகபட்சமாக பென் டக்கெட் 71 ரன்களும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 69 ரன்களும் எடுத்தனர்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் அல்சாரி ஜோசப் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜேடன் சீல்ஸ், கெவின் சின்க்ளேர் மற்றும் காவெம் ஹாட்ஜ் தலா 2 விக்கெட்டுகளையும், ஷமர் ஜோசப் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். இரண்டாம் நாளான நேற்று (ஜூலை 19) மேற்கிந்தியத் தீவுகள் தனது முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
07 Jul 2025சென்னை, தமிழகத்தில் வருகிற 13-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியீடு : இந்தியா நிலை என்ன?
07 Jul 2025துபாய் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்...
-
16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது: திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
07 Jul 2025திருச்செந்தூர், 16 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
-
மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
07 Jul 2025சென்னை, மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
இலங்கை தமிழர் முகாம்களில் கட்டப்பட்ட 729 புதிய வீடுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
07 Jul 2025சென்னை, விருதுநகர் உள்ளிட்ட இடங்களில் ரூ.38 கோடியில் இலங்கை தமிழர் முகாம்களில் கட்டப்பட்ட 729 புதிய வீடுகளை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
கால்பந்து முதல் ஹால் ஆப் பேம் வரை... தல தோனி கடந்து வந்த பாதை
07 Jul 2025மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உலகின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி நேற்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-07-2025.
08 Jul 2025 -
மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட 4 அறிக்கைகள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு
07 Jul 2025சென்னை, மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட தமிழ்நாட்டில் கட்டமைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் காலநிலை- பத்தாண்டுகளுக்கான மதிப்பீடு உள்ளிட்ட 4 அறிக்கைகள் முதல்வர் மு.க.ஸ்
-
பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கான அரசு விடுதிகள் இனி ‘சமூக நீதி விடுதிகள்’ என அழைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
07 Jul 2025சென்னை, தமிழகம் முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகள் இனி ‘சமூக நீதி விடுதிகள்’ என அழைக்கப்படும் என்று
-
திருப்புவனம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றிய உத்தரவு தமிழக அரசிதழில் வெளியீடு
07 Jul 2025சென்னை, திருப்புவனம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதை அதிகாரப்பூர்வமாக தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
-
கால்பந்து முதல் ஹால் ஆப் பேம் வரை... தல தோனி கடந்து வந்த பாதை
07 Jul 2025மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உலகின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி நேற்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடி
-
பேட்ஸ்மேனாக சிந்தித்தால் ரிஸ்க் எடுக்க முடியாது: கேப்டன் சுப்மன் கில்
07 Jul 2025பர்மிங்காம் : கேப்டனாக இருந்து கொண்டு பேட்ஸ்மேனாக சிந்தித்தால் ரிஸ்க் எடுக்க முடியாது என இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
-
வெளிநாட்டு மைதானத்தில் மிகப் பெரிய டெஸ்ட் வெற்றியை பதிவு செய்த இந்திய இளம் அணி
07 Jul 2025பர்மிங்காம் : வெளிநாட்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் பெற்ற 'மிகப்பெரிய வெற்றி' என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.
-
கவுதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படம்
08 Jul 2025வேரூஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கவுள்ளார்.
-
தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சுரேஷ் ரெய்னா
08 Jul 2025புதிய பட தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் நைட் ஸ்டோரீஸ், தனது முதல் படைப்பான "புரொடக்ஷன் நம்பர் 1" மூலம் திரைப்பட உலகில் தனது கால் பதித்துள்ளது.
-
கயிலன் முன்னோட்டம் வெளியீடு
08 Jul 2025BTK பிலிம்ஸ் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கயிலன்.
-
ஜூலை 11ல் வெளியாகும் தேசிங்குராஜா- 2
08 Jul 2025இயக்குநர் எழில். கடந்த 2013 ம் ஆண்டு தேசிங்கு ராஜா படத்தை இயக்கினார். 12 வருடங்களுக்கு பிறகு தற்போது இதன் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார்.
-
நாளை வெளியாகும் சசிகுமாரின் ஃபிரீடம்
08 Jul 2025விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோள் ஜோஸ் நடிப்பில், கழுகு பட இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உருவாகியுள்ள
-
இணையத் தொடரை இயக்கும் நடிகை ரேவதி
08 Jul 2025ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’. இந்தத் தொடர் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ’குட் வைஃப்’ என்ற தொடரின் தமிழ் வடிவம்.
-
தங்கம் விலை மேலும் உயர்வு
08 Jul 2025சென்னை : இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை 18-ல் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்
08 Jul 2025சென்னை, பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க வரும் 18-ம் தேதி அன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.
-
நெல்லையப்பர் கோவிலில் ஆனித் தேரோட்டம் கோலாகலம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
08 Jul 2025திருநெல்வேலி : நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம்
08 Jul 2025திண்டிவனம், ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பா.ம.க. செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
08 Jul 2025தேவகோட்டை, கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
-
மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக புதிய இணையதளம்: மத்திய அரசு அறிவிப்பு
08 Jul 2025புதுடெல்லி, மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் சுயவிவரம் தெரிவிக்க புதிய இணையதளம் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.