முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2024      இந்தியா
Rahul-Gandhi-2023-04-13

லக்னோ, ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு ஆகஸ்ட் 23-ஆம் தேதி அடுத்த விசாரணை நடத்தப்படும் என்று சுல்தான்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீதான அவதூறு கருத்துகள் தொடர்பான வழக்கில் ராகுல் காந்தி மீது பாஜகவைச் சேர்ந்த விஜய் மிஸ்ரா சார்பில் வழக்கு தொடரப்பட்டு உ.பி.யில் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. பாஜக சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ராகுல் மறுத்துள்ளார். அரசியல் காரணங்களுக்காகவும், தன் பெயரைக் கெடுக்கும் நோக்கத்திற்காகவும் புனையப்பட்ட வழக்கு என்று அவர் கூறினார்.

கடந்த ஜூலை 26-ல் ராகுல் காந்தி இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜரானார். இதையடுத்து ஆகஸ்ட் 12-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெறவிருந்தது. எம்பி, எம்எல்ஏ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி சுபம் வர்மா விடுப்பில் இருப்பதால் நேற்று விசாரணை நடைபெறவில்லை. மீண்டும் ஆகஸ்ட் 23ஆம் தேதி அடுத்த விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து