எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : பள்ளிக்கல்வித்துறையில் அன்பில் மகேஷ் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்தார்.
மதுரை திருப்பரங்குன்றம் சாலை பசுமலையில் உள்ள மாதா அமீர்தானந்தமயி மடத்தில் இலவச மருத்துவ முகாம், இலவச கண் பரிசோதனை முகாம் மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கம் மற்றும் மாதா அமிர்தானந்தமயி மடத்தினர் சார்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஸ்டார் ரோட்டரி சங்கத் தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். மாதா அமிர்தானந்தமயி மடம் சுவாமிஜி சச்சிதானந்த ஆசி உரை வழங்கினார். நிகழ்வில் ஆடிட்டர் சேது மாதவா, மதுரையின் அட்சயப் பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு, ரோட்டரி பொருளாளர் கன்னியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.இதில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். இந்த மருத்துவ முகாமினை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.
பின்னர் முன்னாள் அமைசச்ரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது-
2023-ல் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் மனோ தங்கராஜ் உடன் மகாவிஷ்ணு நெருக்கமான தொடர்பிலிருந்து உள்ளார்.அதனால் தான் ஆங்காங்கே தன்னம்பிக்கை நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது என்று செய்திகள் கசிந்து வருகிறது. தலைமை ஆசிரியை இடமாற்றம் செய்து நிர்வாகக் குளறுபடிகளில் இருந்து இவர்கள் தப்பித்துக் கொள்ளலாம் என்று இந்த அரசு நினைக்கிறது.அதனால் ஆசிரியர்கள் கோபத்தில் உள்ளனர். பள்ளிக் கல்வித் துறையில் அன்பில் மகேஷ் பொறுப்பேற்ற முதல் பல சர்ச்சைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது புதிதாக அறிக்கைகள் வெளியிடுவதும் பின்னர் அது சர்ச்சைக்கு உள்ளானதும் வாபஸ் பெறுவதுமாக நடைபெறுகிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உதயநிதிக்கு நெருக்கமானவர் என்பதால் அவர் பாதுகாப்பு சூழ்நிலை தான் உள்ளார். பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் தான் பாதுகாப்பாக சூழ்நிலையில் இல்லை. அரசு பள்ளியில் தனிநபர் எப்படி சர்ச்சைக்குரிய கருத்துக்களை சொல்ல முடியும் பள்ளிக்கல்வித்துறை யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
உதயநிதி மதுரைக்கு அறிவிக்கப்படாத முதல்வராக வருகிறார். மதுரையே அல்லோல்லாபட்டு உள்ளது.முதலமைச்சருக்கு ஒரு படி மேல் ஆடம்பரங்கள் அமைச்சர்களால் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிமுக கட்சி நிகழ்ச்சிக்கு கட்சிக்கொடி ஊண்றுவதற்கு காவல்துறையினரால் ஆயிரம் நிபந்தனைகள் விஜய் மாநாட்டிற்கு 21 கேள்விகள் கேட்கப்படுகின்றன. இவர்களால் மதுரை விமான நிலையத்திலிருந்து விவசாயக் கல்லூரி வரை கொடிகள் வைக்கப்பட்டுள்ளது.இதற்கு யார் அனுமதி தந்தார்கள் எங்கு வாங்கினார்கள் என்பது விசாரணையில் தான் தெரியும்.
அம்மாவின் முயற்சிகளால் மதுரைக்கு எய்ம்ஸ் கொண்டுவரப்பட்டது இன்னும் கட்டிடம் கூட எழுப்பாத அந்த இடத்தினை அறிவிக்கப்படாத முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிடுவாரா மதுரையில் பத்தாயிரம் பேருக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சியாக பார்க்கவில்லை பட்டாபிஷேகம் நடத்துகின்ற நிகழ்ச்சியாக தான் பார்க்கிறேன் தொகுதிக்கு ஆயிரம் பேர் என பத்தாயிரம் பேருக்கு பட்டா வழங்குகிறார்களா அல்லது ஒரே தொகுதியில் பத்தாயிரம் பேருக்கு பட்டா வழங்குகிறார்களா என்று தெரியவில்லை. மதுரையில் அன்னை மீனாட்சிக்கு மட்டும் தான் பட்டாபிஷேகம் முடியாட்சி நடைபெறும். ஆனால் இங்கு இளவரசருக்கு முடிசூட்டும் விழாவிற்கு அமைச்சர்கள் கடந்த 10 தினங்களாக ஒட்டுமொத்த அரசு அதிகாரிகளும் மாநகராட்சி நிர்வாகம் மாவட்ட நிர்வாகம் வேலை பார்த்துக் கொண்டுள்ளனர். இதனால் எந்த மனுக்களும் கொடுக்க முடியவில்லை ஸ்தம்பித்து போய் உள்ளது. உதயநிதியின் மதுரை வருகை மதுரைக்கு வளர்ச்சியா அல்லது வேடிக்கை காட்டுவதற்காக வருகிறாரா வீழ்ச்சியா என்பது மீனாட்சி அம்மனுக்கு வெளிச்சம் மதுரை மக்களுக்கே வெளிச்சம் அவரவர் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக தந்தை அமரிக்காவில் இருக்கும் போது தனையன்னுக்கு முடி சூட்டு விழா நடைபெறுகிறது. மதுரையில் எந்த வளர்ச்சி திட்டங்களும் நடைபெறவில்லை அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களும் முடக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை இதற்கெல்லாம் அறிவிக்கப்படாத முதல்வர் பதிலளிப்பாரா ?.
பள்ளி என்பது மாணவர்களின் மாற்றம் முன்னேற்றத்திற்குரிய இடம் விருப்பப்பட்ட கருத்துக்களை பொதுவெளியில் பேசலாம் அரசு பள்ளிகளில் பேசுவது என்பது தவறு எங்களுடைய எடப்பாடியார் சர்ச்சை கருத்துக்களை பள்ளிகளில் பேசுவதற்க்கு யார் அனுமதி அளித்தார்கள் என்று தான் கேள்வி எழுப்பி உள்ளார். புத்தகத் திருவிழாவில் சாமி பாட்டு போட்டு பள்ளி குழந்தைகள் சாமி ஆடுவது என்பது எப்படி உள்ளது எங்கே போகிறது இந்த நாடு இளைய சமுதாயத்தை எங்கே கொண்டு போக நினைக்கிறார்கள். போதை நடமாட்டத்தில் பாதுகாப்பில்லை மாணவர்களுக்கு பாதுகாப்பில்லை அதற்கு முதல் இந்த அரசு முதல் முன் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-09-2025.
17 Sep 2025 -
கொடிக்கம்பம் அகற்றும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
17 Sep 2025சென்னை, கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Sep 2025சென்னை, தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் 21 மாவட்டங்களில் இன்று (செப்.18-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: மீண்டும் ஒரு உரிமைப் போரை நடத்தி நாட்டை பாதுகாப்போம் கரூர் தி.மு.க. முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
17 Sep 2025கரூர்: தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று தெரிவித்துள்ள தி.மு.க.
-
சற்று குறைந்த தங்கம் விலை
17 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை நேற்று சவரன் ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ,82,160க்கு விற்பனையானது.
-
அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது: துணை பிரதமர்
17 Sep 2025தோஹா: இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது என்றும் இருதரப்பு விவகாரங்களில் 3-ம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்க பாகிஸ்தான் தயார் என்றும்
-
மயிலாடுதுறை ஆணவக்கொலை: பெண்ணின் தாய் உள்ளிட்ட 4 பேர் சிறையில் அடைப்பு
17 Sep 2025மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஆணவக் கொலை வழக்கில் பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு சாபக்கேடு: சித்தராமையா பேச்சு
17 Sep 2025பெங்களூரு, யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: அமித்ஷாவிடம் இ.பி.எஸ். நேரில் வலியுறுத்தல்
17 Sep 2025சென்னை, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
இனி விருப்ப ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு
17 Sep 2025புதுடெல்லி, 20 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
17 Sep 2025சென்னை, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம்: டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
17 Sep 2025புதுடெல்லி, வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம் என்று டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்கருத்து தெரிவித்துள்ளது.
-
75-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் வாழ்த்து
17 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பி்றந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
-
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
17 Sep 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 8,641 கன அடியாகக் குறைந்தது.
-
பிரதமர் மோடி பிறந்த நாளில் 12 ஆண்டுகளாக இலவச டீ வழங்கும் வியாபாரி..!
17 Sep 2025சென்னை, பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக டீயை வியாபாரி வழங்கினார்.
-
திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? ரஜினி அதிரடி பதில்
17 Sep 2025சென்னை: திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்ற கேள்விக்கு நடிகர் ரஜினி பதில் அளித்துள்ளார்.
-
பெரியார் 147-வது பிறந்தநாள்: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
17 Sep 2025சென்னை, பெரியாரின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
-
2025-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.22.08 லட்சம் கோடியாக அதிகரிப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா தகவல்
17 Sep 2025அமராவதி, ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும் என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி.
-
பிரதமர் நரேந்திரமோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
17 Sep 2025ரோம், பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி அரசு முடிவு
17 Sep 2025டெல்லி: எந்தவித தூண்டுதலும் இல்லாமல் மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
-
திருப்பதி பிரம்மோற்சவ விழா: பாதுகாப்பு பணிக்கு 4,200 போலீசார் குவிப்பு
17 Sep 2025திருப்பதி, திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 4,200 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
இந்திய தயாரிப்பு பொருட்களை மட்டும் மக்கள் வாங்க வேண்டும்: பிரதமர் நரேந்திரமோடி கோரிக்கை
17 Sep 2025போபால், நீங்கள் வாங்கும் எந்தவொரு பொருளும் இந்திய தயாரிப்பு பொருளாக இருக்க வேண்டும் என 140 கோடி இந்தியர்களிடமும் பிரதமர் மோடி வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
-
தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவு பேரொளி பெரியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
17 Sep 2025சென்னை, தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார் என அவரது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு
17 Sep 2025சென்னை: விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
அறிவுச்சூரியன் தந்தை பெரியார்: துணை முதல்வர் உதயநிதி புகழாரம்
17 Sep 2025சென்னை: உலகம் முழுவதற்குமான கொள்கைகளை வகுத்தளித்த அறிவுச்சூரியன் தந்தை பெரியார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.