எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : பள்ளிக்கல்வித்துறையில் அன்பில் மகேஷ் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்தார்.
மதுரை திருப்பரங்குன்றம் சாலை பசுமலையில் உள்ள மாதா அமீர்தானந்தமயி மடத்தில் இலவச மருத்துவ முகாம், இலவச கண் பரிசோதனை முகாம் மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கம் மற்றும் மாதா அமிர்தானந்தமயி மடத்தினர் சார்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஸ்டார் ரோட்டரி சங்கத் தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். மாதா அமிர்தானந்தமயி மடம் சுவாமிஜி சச்சிதானந்த ஆசி உரை வழங்கினார். நிகழ்வில் ஆடிட்டர் சேது மாதவா, மதுரையின் அட்சயப் பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு, ரோட்டரி பொருளாளர் கன்னியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.இதில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். இந்த மருத்துவ முகாமினை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.
பின்னர் முன்னாள் அமைசச்ரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது-
2023-ல் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் மனோ தங்கராஜ் உடன் மகாவிஷ்ணு நெருக்கமான தொடர்பிலிருந்து உள்ளார்.அதனால் தான் ஆங்காங்கே தன்னம்பிக்கை நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது என்று செய்திகள் கசிந்து வருகிறது. தலைமை ஆசிரியை இடமாற்றம் செய்து நிர்வாகக் குளறுபடிகளில் இருந்து இவர்கள் தப்பித்துக் கொள்ளலாம் என்று இந்த அரசு நினைக்கிறது.அதனால் ஆசிரியர்கள் கோபத்தில் உள்ளனர். பள்ளிக் கல்வித் துறையில் அன்பில் மகேஷ் பொறுப்பேற்ற முதல் பல சர்ச்சைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது புதிதாக அறிக்கைகள் வெளியிடுவதும் பின்னர் அது சர்ச்சைக்கு உள்ளானதும் வாபஸ் பெறுவதுமாக நடைபெறுகிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உதயநிதிக்கு நெருக்கமானவர் என்பதால் அவர் பாதுகாப்பு சூழ்நிலை தான் உள்ளார். பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் தான் பாதுகாப்பாக சூழ்நிலையில் இல்லை. அரசு பள்ளியில் தனிநபர் எப்படி சர்ச்சைக்குரிய கருத்துக்களை சொல்ல முடியும் பள்ளிக்கல்வித்துறை யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
உதயநிதி மதுரைக்கு அறிவிக்கப்படாத முதல்வராக வருகிறார். மதுரையே அல்லோல்லாபட்டு உள்ளது.முதலமைச்சருக்கு ஒரு படி மேல் ஆடம்பரங்கள் அமைச்சர்களால் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிமுக கட்சி நிகழ்ச்சிக்கு கட்சிக்கொடி ஊண்றுவதற்கு காவல்துறையினரால் ஆயிரம் நிபந்தனைகள் விஜய் மாநாட்டிற்கு 21 கேள்விகள் கேட்கப்படுகின்றன. இவர்களால் மதுரை விமான நிலையத்திலிருந்து விவசாயக் கல்லூரி வரை கொடிகள் வைக்கப்பட்டுள்ளது.இதற்கு யார் அனுமதி தந்தார்கள் எங்கு வாங்கினார்கள் என்பது விசாரணையில் தான் தெரியும்.
அம்மாவின் முயற்சிகளால் மதுரைக்கு எய்ம்ஸ் கொண்டுவரப்பட்டது இன்னும் கட்டிடம் கூட எழுப்பாத அந்த இடத்தினை அறிவிக்கப்படாத முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிடுவாரா மதுரையில் பத்தாயிரம் பேருக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சியாக பார்க்கவில்லை பட்டாபிஷேகம் நடத்துகின்ற நிகழ்ச்சியாக தான் பார்க்கிறேன் தொகுதிக்கு ஆயிரம் பேர் என பத்தாயிரம் பேருக்கு பட்டா வழங்குகிறார்களா அல்லது ஒரே தொகுதியில் பத்தாயிரம் பேருக்கு பட்டா வழங்குகிறார்களா என்று தெரியவில்லை. மதுரையில் அன்னை மீனாட்சிக்கு மட்டும் தான் பட்டாபிஷேகம் முடியாட்சி நடைபெறும். ஆனால் இங்கு இளவரசருக்கு முடிசூட்டும் விழாவிற்கு அமைச்சர்கள் கடந்த 10 தினங்களாக ஒட்டுமொத்த அரசு அதிகாரிகளும் மாநகராட்சி நிர்வாகம் மாவட்ட நிர்வாகம் வேலை பார்த்துக் கொண்டுள்ளனர். இதனால் எந்த மனுக்களும் கொடுக்க முடியவில்லை ஸ்தம்பித்து போய் உள்ளது. உதயநிதியின் மதுரை வருகை மதுரைக்கு வளர்ச்சியா அல்லது வேடிக்கை காட்டுவதற்காக வருகிறாரா வீழ்ச்சியா என்பது மீனாட்சி அம்மனுக்கு வெளிச்சம் மதுரை மக்களுக்கே வெளிச்சம் அவரவர் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக தந்தை அமரிக்காவில் இருக்கும் போது தனையன்னுக்கு முடி சூட்டு விழா நடைபெறுகிறது. மதுரையில் எந்த வளர்ச்சி திட்டங்களும் நடைபெறவில்லை அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களும் முடக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை இதற்கெல்லாம் அறிவிக்கப்படாத முதல்வர் பதிலளிப்பாரா ?.
பள்ளி என்பது மாணவர்களின் மாற்றம் முன்னேற்றத்திற்குரிய இடம் விருப்பப்பட்ட கருத்துக்களை பொதுவெளியில் பேசலாம் அரசு பள்ளிகளில் பேசுவது என்பது தவறு எங்களுடைய எடப்பாடியார் சர்ச்சை கருத்துக்களை பள்ளிகளில் பேசுவதற்க்கு யார் அனுமதி அளித்தார்கள் என்று தான் கேள்வி எழுப்பி உள்ளார். புத்தகத் திருவிழாவில் சாமி பாட்டு போட்டு பள்ளி குழந்தைகள் சாமி ஆடுவது என்பது எப்படி உள்ளது எங்கே போகிறது இந்த நாடு இளைய சமுதாயத்தை எங்கே கொண்டு போக நினைக்கிறார்கள். போதை நடமாட்டத்தில் பாதுகாப்பில்லை மாணவர்களுக்கு பாதுகாப்பில்லை அதற்கு முதல் இந்த அரசு முதல் முன் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025 -
தங்கம் விலை சற்று சரிவு
21 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று மாலை (அக். 21) சவரனுக்கு ரூ.1,440 குறைந்து விற்பனையானது. காலையில் அதிரடியாக சவரனுக்கு ரூ.
-
வட தமிழகத்தை நோக்கி நகர்கிறது புயல் சின்னம் : 15 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
21 Oct 2025சென்னை, வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக தீவிரமாகும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், புயல் சின்னம் வட தமிழகத்தை நோக்கி நகர்வதாக தெரிவ
-
நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளுங்கள் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
21 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளுங்கள் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளா
-
சட்டசபை தேர்தலுக்கான மனுதாக்கல் நிறைவு: விரைவில் பீகார் தேர்தல் பிரச்சார களத்தில் பிரதமர் மோடி, ராகுல்..!
21 Oct 2025பாட்னா, சட்டசபை தேர்தலுக்கான மனுதாக்கல் முடிந்த நிலையில் விரைவில் பீகார் தேர்தல் பிரச்சார களத்தை பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் முற்றுகையிடவுள்ளனர்.
-
கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
21 Oct 2025புதுடெல்லி : வட கிழக்குப் பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக கணித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் பாலக்காடு, கோழிக்கோடு உள்பட 10 மாவட்டங
-
விருதுநகரில் மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி : அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
21 Oct 2025விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழையால் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அரசு சார்பில் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ந
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்வு
21 Oct 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
போர்க்கால அடிப்படையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: தமிழக அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
21 Oct 2025சென்னை, போர்க்கால அடிப்படையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அ.தி.மு.க.
-
வைகை அணையில் உபரி நீர் வெளியேற்றம்: 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை : ஆற்றுக்குள் இறங்க, குளிக்க தடை
21 Oct 2025ஆண்டிபட்டி : வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததால் 5 மாவட்ட கரையோர மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து 8 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
21 Oct 2025சென்னை, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை உள்ளிட்ட 8 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக முதல்
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரூ.790 கோடிக்கு மது விற்பனை
21 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரூ.790 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
-
மழை வெள்ள முன்னேற்பாடு பணிகள்: சென்னையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு
21 Oct 2025சென்னை : சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள முன்னேற்பாட்டு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
நடப்பு ஆண்டில் 7-வது முறையாக நிரம்பியது: மேட்டூர் அணையில் இருந்து 34 அயிரம் கன அடி நீர் திறப்பு
21 Oct 2025மேட்டூர் : காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, நடப்பாண்டில் மேட்டூர் அணை 7-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
-
நமது ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிப்போம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
21 Oct 2025புதுடெல்லி, நமது ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிப்போம் என நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
-
காவலர் வீரவணக்க நாள்: முதல் முறையாக காவலர் நினைவுச் சின்னத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
21 Oct 2025சென்னை, காவலர் வீரவணக்க நாளையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் காவலர் நினைவு சின்னம் முன்பாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
-
மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கை: கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
21 Oct 2025மதுரை, மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கை தொடர்ந்து கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.
-
ஊட்டி மலை ரயில் ரத்து
21 Oct 2025மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் ரத்துசெய்யப்பட்டது. இதனால் சற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
-
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவோம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் கடிதம்
21 Oct 2025புதுடெல்லி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
-
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு
21 Oct 2025சென்னை, செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
-
பரூக் அப்துல்லா பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
21 Oct 2025சென்னை : காஷ்மீரின் உரிமைகளுக்காக போராடி வரும் பரூக் அப்துல்லா பிறந்த நாள் வாழ்த்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாட்டம்: டெல்லியில் 15 மடங்கு அதிகரித்த காற்று மாசு
21 Oct 2025புதுடெல்லி : டெல்லியில் இந்த ஆண்டு பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து மக்கள் 'பட்டாசு தீபாவளி'யை கொண்டாடியதன் எதிரொலியாக, உலக சுகாதார நிறுவனம் நிர்
-
பாக். தலைவர்கள் தீபாவளி வாழ்த்து
21 Oct 2025இஸ்லாமாபாத், பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் பாகிஸ்தானிலும் உலகெங்கிலும் உள்ள இந்துக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்
-
ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் பரவல் எதிரொலி: கேரளாவில் இருந்து பன்றிகள் கொண்டு வர தமிழகத்தில் தடை
21 Oct 2025கோவை, கேரள மாநிலம் திருச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் பரவல் உள்ளது.
-
தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் த.வெ.க.வை காப்பாற்ற முடியாது - ஆர்.பி.உதயகுமார் தகவல்
21 Oct 2025சென்னை : தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் த.வெ.க.வை காப்பாற்ற முடியது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.