எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தற்சமயத்தில் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக கருதப்படுகிறார். தற்சமயம் பார்மின்றி தவித்து வருகிறார். அவர் மீண்டும் பழைய பார்மிற்கு திரும்புவார் என்று எதிர்பார்ப்புடன் அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே விராட் கோலி எப்போது ஓய்வு பெறுவார்? என்பதே பலரது கேள்வியாக இருந்து வருகிறது. இந்நிலையில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்று ஜோதிடர் ஒருவரை அழைத்து விராட் கோலியின் எதிர்காலம் குறித்த சில கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதற்கு பதில் அளித்த ஜோதிடர் கூறுகையில் : சமீப காலமாகவே என்னிடம் விராட் கோலி எவ்வளவு காலம் விளையாடுவார்? என்று கேள்வி முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்த கேள்விக்கு நான் கூறும் பதில் ஒன்றுதான் : மக்கள் விராட் கோலி விளையாடுவதை பார்ப்பதற்கு ஆவலாக காத்திருக்கின்றனர். என்னை பொறுத்தவரை விராட் கோலி 2027 ஆம் ஆண்டு வரை நிச்சயம் விளையாடுவார். அதிலும் குறிப்பாக எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் தொடரில் அவரது ஆட்டம் மிகச்சிறப்பாக இருக்கும். இனிவரும் சில ஆண்டுகள்தான் விராட் கோலி தனது உச்சகட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அதனால் நீங்கள் அனைவரும் எதிர்பார்த்தபடியே உங்களது நட்சத்திர வீரர் அசத்துவார்" என்று கூறினார்.
____________________________________________________________________________________________
அல்ஜாரி ஜோசப் விளையாட தடை
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதலாவது இன்னிங்ஸில் 4 வது ஓவரின் போது இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோர்டன் காக்ஸ் பேட்டிங் செய்துகொண்டிருந்தார். அப்போது அல்ஜாரி ஜோசப் பவுலிங் செய்யவந்தபோது இரண்டு பேர் ஸ்லிபில் இருந்தனர். அல்ஜாரி ஜோசப் முதல் பந்தை வெளியே வீசினார். பேட்டர் அதை அடிக்கவில்லை. அடுத்த பந்தின் போது ஸ்லிப் இருந்த வீரரை பாய்ண்ட் திசையில் நிற்க வைத்துள்ளார் கேப்டன் ஹோப். இதனால், கேப்டனுக்கும், அல்ஜாரி ஜோசப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஒவர் முடிந்த பின் ஜோசப் மைதானத்தைவிட்டு வெளியேறினார். பயிற்சியாளர் டேரன் ஷமி பவுண்டரி எல்லையில் இருந்து குரல் கொடுத்த போதும், அல்ஜாரி ஜோசப் கண்டுகொள்ளாமல் வெளியே சென்றார்.
அல்ஜாரி ஜோசப் மைதானத்தை விட்டு வெளியேறியதால், மாற்றுவீரர் யாரும் களமிறங்க முடியாத சூழலால் அடுத்த ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணியினர் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய கட்டாயத்தில் விளையாடினர். இதனால், பார்வையாளர்கள், நடுவர்கள் மத்தியில் குழப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், கேப்டனுடன் வாக்குவாதம் செய்துவிட்டு காரணம் சொல்லாமல், மைதானத்தை விட்டு வெளியேறிய அல்ஜாரி ஜோசப்புக்கு 2 போட்டிகளில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.
____________________________________________________________________________________________
சாதனையை நழுவ விட்ட ரிஸ்வான்
அடிலெய்டில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை முதலில் பேட் செய்ய அழைத்த பாகிஸ்தான் அற்புதமான வேகப்பந்து வீச்சில் ஆஸ்திரேலியாவை 35 ஓவர்களில் 163 ரன்களுக்குச் சுருட்டியது. இதில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் இரண்டாவது முறையாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் சர்வதேசப் போட்டியில் ஆகக்குறைந்த ரன் எண்ணிக்கைக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.
இந்த இலக்கை வெற்றிகரமாக விரட்டினால் கடந்த மெல்போர்ன் போட்டியில் நெருக்கமாகத் தோற்றதற்குப் பதிலடி கொடுத்து தொடரில் சமநிலையை பாகிஸ்தான் எய்த முடியும். பாகிஸ்தான் கேப்டனும் விக்கெட் கீப்பருமான முகமது ரிஸ்வான், 6 கேட்ச்களை எடுத்து ஆடம் கில்கிறிஸ்ட், மார்க் பவுச்சர், டி காக், சர்பராஸ் அகமது உள்ளிட்ட விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். கூடுதலாக ஒரு கேட்சைப் பிடித்திருந்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் 7 கேட்ச்கள் பிடித்தவர் என்ற புதிய விக்கெட் கீப்பிங் உலக சாதனை புரிந்திருப்பார் ரிஸ்வான். அதற்கான வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. ஆனால், ஆடம் ஜாம்பா கொடுத்த கேட்சை நழுவ விட்டதால் உலக சாதனை வாய்ப்பைக் கோட்டை விட்டார் ரிஸ்வான்.
____________________________________________________________________________________________
ஆப்கானிஸ்தான் வீரர் ஓய்வு
ஆப்கானிஸ்தான் அணியின் முன்னணி கிரிக்கெட் வீரர் முகமது நபி (வயது 39). இவர் ஆப்கானிஸ்தான் அணிக்காக தற்போது வரை 3 டெஸ்ட், 165 ஒருநாள் மற்றும் 128 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். இவர் கடந்த 2019ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடி வருகிறார். இந்நிலையில், அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து முகமது நபி ஓய்வு பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகி நஸீப் கான் இதை உறுதிப்படுத்தியுள்ளார். டி20 போட்டிகளில் நபி தொடர்ந்து விளையாடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகி நஸீப் கான் கூறியதாவது, ஆமாம், நபி ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் தனது விருப்பத்தை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் ஓய்வு பெறுவதாக சில மாதங்களுக்கு முன்பு இதை எங்களிடம் தெரிவித்தார். டி20யில் அவர் விளையாடுவார் என நான் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
____________________________________________________________________________________________
தந்தையானார் டிராவிஸ் ஹெட்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட்டின் மனைவி ஜெஸ்ஸிகா டேவிட்டுக்கு கடந்த நவம்பர் 4 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், அதிரடி தொடக்க ஆட்டக்காரருமான டிராவிஸ் ஹெட் மற்றும் ஜெஸ்ஸிகா டேவிட் ஹெட் தம்பதிக்கு கடந்த திங்கள்கிழமை ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தைக்கு ஹாரிஸன் ஜார்ஜ் ஹெட் எனப் பெயர் சூட்டியுள்ளனர்.
இந்தத் தம்பதிக்கு 2022 ஆம் ஆண்டு மிலா என்ற அழகான பெண் குழந்தை பிறந்தது. அதன்பின்னர் 2023 ஆம் ஆண்டு ஜெஸ்ஸிகா டேவிட்டை டிராவிஸ் ஹெட் திருமணம் செய்துகொண்டார். டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலியா மட்டுமின்றி இந்தியாவிலும் மிகவும் பிரபலமானவர். அதிரடி ஆட்டத்துக்கு பெயர் போன ஹெட் பிக்-பாஸ் மற்றும் ஐபிஎல் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். ஹெட் ஐபிஎல்லில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
அண்டை மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் நிறுத்தம் எதிரொலி: 22 கோடி ரூபாய் வரை இழப்பு
18 Nov 2025சென்னை: அண்டை மாநிலங்களுக்கு இயக்கும் ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை
18 Nov 2025தென்காசி: கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-18-11-2025
18 Nov 2025 -
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிராகரிப்பா?
18 Nov 2025சென்னை, கோவை, மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக தகவல் வெளியானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-18-11-2025
18 Nov 2025 -
வாக்காளர் அட்டையில் 'இனிசியல்' இல்லையா? - வாக்காளர்களுக்கு வந்தது புது சிக்கல்
18 Nov 2025சென்னை : வாக்காளர் அட்டையில் 'இனிசியல்' இல்லையா? வாக்காளர்களுக்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
மருத்துவர் பரிந்துரைக்க வேண்டும்: இனி இருமல் மருந்து வாங்க வருகிறது புதிய கட்டுப்பாடு
18 Nov 2025புதுடெல்லி, மருத்துவர் பரிந்துறையின்றி இனி இருமல் மருந்து வாங்க முடியாது புதிய கட்டுப்பாடு அமழுக்கு வருகிறது.
-
மேட்டூர் அணையில் நீர் திறப்பு குறைப்பு
18 Nov 2025மேட்டூர் : மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
-
சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை சட்டமன்ற தி.மு.க. தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு : கோவையில் வெற்றி பெற செந்தில் பாலாஜிக்கு அறிவுறுத்தல்
18 Nov 2025சென்னை : தி.மு.க. தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
-
இந்தோனேசியா: நிலச்சரிவில் 18 பேர் பலி
18 Nov 2025ஜாவா: இந்தோனேசியாவில் நிலச்சரிவில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ஐதராபாத் அணி கேப்டன் அறிவிப்பு
18 Nov 2025ஐதராபாத்: வரும் ஐ.பி.எல். சீசனிலும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ்தான் செயல்படுவார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
என்னுடைய கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் தேவை: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய கர்நாடக சிறுவன்
18 Nov 2025பெங்களூரு: கிராமத்தில் அடிப்படை வசதிகள் கோரி பிரதமர் மோடிக்கு சிறுவன் கடிதம் எழுதியுள்ளது தற்போது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்காவிடம் இருந்து இந்தியா சமையல் கியாஸ் வாங்க ஒப்பந்தம் வர்த்தகத்துறை செயலாளர் தகவல்
18 Nov 2025புதுடெல்லி: அமெரிக்காவிடம் இருந்து சமையல் கியாஸ் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
-
நீலகிரி: யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட விடுதிகள் இடிப்பு
18 Nov 2025நீலகிரி: நீலகிரியில் யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட விடுதிகள் ஐகோர்ட் உத்தரவின்படி இடிக்கப்பட்டது.
-
ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வை விரைவில் எதிர்பார்க்கலாம் செங்கோட்டையன் நம்பிக்கை
18 Nov 2025மதுரை: ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வை விரைவில் எதிர்பார்க்கலாம் என்றும் அ.தி.மு.க.வில் இணைவது தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
-
சபரிமலை கோவிலில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் : பாதுகாப்பிற்கு கூடுதல் போலீசார் குவிப்பு
18 Nov 2025சபரிமலை : வருடாந்திர மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு நிகழ்ச்சிக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.
-
வருகிற 25-ம் தேதி வரை சென்னையில் வாக்காளர் உதவி மையங்கள் செயல்படும்
18 Nov 2025சென்னை: சென்னையில் வாக்காளர் உதவி மையங்கள் வருகிற 25-ந் தேதி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
100 மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட மானியம்: அமைச்சர் பன்னீர் செல்வம் தகவல்
18 Nov 2025சென்னை: மதிப்பு கூட்டும் மையங்கள் அமைத்திட மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
-
டெல்லி சம்பவத்தில் தொடரும் விசாரணை: இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை போன்று நடத்தும் சதி திட்டம் அம்பலம்
18 Nov 2025புதுடெல்லி: இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் நடத்தி ட்ரோன் தாக்குதல்களை போல் தாக்குதல் நடத்த டெல்லி வெடிகுணடு தாக்குதலுக்கு முன் பயங்கர சதி திட்டம் திட்டியது தற்போது விசாரணையில
-
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள்: வருவாய்த்துறை ஊழியர்கள் முழுமையாக புறக்கணிப்பு பொதுத்தேர்தல் துறை செயலாளருக்கு கடிதம்
18 Nov 2025சென்னை: தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளை வருவாய்த்துறை ஊழியர்கள் புறக்கணித்தனர்.
-
சென்னை பெருநகரத்திற்கான அடுத்த 25 ஆண்டுகளுக்கான பொது போக்குவரத்து திட்டங்கள் வெளியீடு
18 Nov 2025சென்னை: சென்னையில் அடுத்த 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்து திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஐ.பி.எல். தொடரின் 19-வது சீசன்: 10 அணிகளின் பயிற்சியாளர்கள் விவரம்
18 Nov 2025மும்பை: ஐ.பி.எல். தொடரின் 19-வது சீசனில் இடம் பெறவுள்ள 10 அணிகளின் பயிற்சியாளர்கள் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. சி.எஸ்.கே.
-
வரும் ஜனவரிக்குள் வருமான வரி கணக்கு படிவங்கள் வெளியிடப்படும் நேரடி வரிகள் வாரியம் தகவல்
18 Nov 2025புதுடெல்லி: வருமான வரி கணக்கு படிவங்கள் ஜனவரிக்குள் வெளியிடப்படும் என்று நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
-
அதிபர் ஜெலன்ஸ்கி சுற்றுப்பயணம்: பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்குகிறது உக்ரைன்
18 Nov 2025பாரீஸ் : பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்கள் வாங்க உக்ரைன் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
ஆந்திராவில் நக்சலைட் தளபதி சுட்டுக்கொலை
18 Nov 2025ஐதராபாத்: ஆந்திராவில் நக்சலைட் அமைப்பின் முக்கிய தளபதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.


