எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கோர்ட் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது சட்டமில்லை என அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருப்பரங்குன்றம் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். மேல்முறையீடு செய்வது அடிப்படை உரிமை. கோர்ட் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சட்டம் இல்லை. அதற்கு சட்டமே வழிவகுத்து இருக்கிறது. உரிமை பெறுவதற்கு சுப்ரீம் கோர்ட் வரை செல்லலாம் என்று சட்டம் கூறுகிறது. அதனால் சுப்ரீம் கோர்ட்டை நாடி இருக்கிறோம்.
த.வெ.க. அரசியல் கட்சியாக இன்னும் அங்கீகாரமே பெறவில்லை. அரசியல் கட்சியாக இருந்தால் நிச்சயம் கருத்து கூறுவார்கள். ஒரே இரவில் ஆத்தூர் தொகுதியில் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறி 6 ஆயிரம் பேரையும், இறந்தவர்கள் என்று 16 ஆயிரம் பேரையும் என மொத்தம் 22 ஆயிரம் வாக்காளர்களை நீக்கிவிட்டனர். அதுபற்றி தேர்தல் ஆணையத்திடம் புகார் அனுப்பி இருக்கிறேன். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முறையாக நடைபெறவில்லை. எனவே மத்திய அரசு இதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


