எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரோம், வாடிகனில் ஏழைகளுக்கான இசை நிகழ்ச்சியில் புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு கச்சேரிகளை அரங்கேற்றினர். இதில் போப் லியோ பங்கேற்றார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வாடிகன் நகரில் ‘ஏழைகளுடன் இசை நிகழ்ச்சி’ என்ற பெயரில் இசைத் திருவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் போப் லியோ பங்கேற்று, இசை நிகழ்ச்சியை கண்டுகளித்தார். முன்னதாக போப் பிரான்சிஸ் முயற்சியால் முதன்முதலில் தொடங்கப்பட்ட ஏழைகளுக்கான இசை நிகழ்ச்சி, தற்போது 6-வது ஆண்டாக உற்சாகமாக கொண்டாடப்பட்டுள்ளது.
கனடாவை சேர்ந்த மைக்கேல் பப்லே உள்ளிட்ட புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இசைக்கச்சேரிகளை அரங்கேற்றினர். வீடற்ற மக்கள், புலம்பெயர்ந்தோர், சிறப்பு அனுமதி பெற்ற சிறைக் கைதிகள் உள்ளிட்டோருக்கு இசை அனுபவத்தை வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இசை நிகழ்ச்சி குறித்து போப் லியோ பேசுகையில், “இது ஒரு சாதாரண இசை நிகழ்வு அல்ல. அதை விட மிகச்சிறந்த செயல். ஆன்மீக இசை ஆன்மாவை உயர்த்தக் கூடியது. மனித கண்ணியம் என்பது பொருளாதாரத்தை சார்ந்தது அல்ல. நாம் அனைவரும் கடவுளால் நேசிக்கப்படும் குழந்தைகள்” என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


