எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஃபெஞ்சல் புயல் பாதித்த விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ரேஷன் கார்டுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துளளார். மேலும் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும், பயிர் சேதத்திற்கும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயலின் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ள மாவட்ட மக்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரண உதவிகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் நவம்பர் 30 முதல் வீசத் தொடங்கிய ஃபெஞ்சல் புயலின் காரணமாக பரவலான மற்றும் கடுமையான மழைப்பொழிவு தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் பெறப்பட்டது. குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழையின் அளவு வழக்கத்தைவிட மிக அதிகமாக இருந்தது.
இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் மழைப் பொழிவு ஏற்பட்டு, பொது மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதோடு, தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் பெரும்பகுதி விளைநிலங்களை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது. அத்துடன், மேற்படி மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள், பாலங்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள், பொதுக் கட்டிடங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளும் மற்றும் பொது மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.
அங்கு ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தையும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளையும் நேரில் ஆய்வு செய்திட நேற்றையதினம் தமிழ்நாடு முதல்வர் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, பொது மக்கள் மற்றும் அலுவலர்களிடம் பாதிப்பு விவரங்களையும், மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்து, தேவையான அறிவுரைகளை வழங்கினார்.
துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களும் இம்மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேற்றும் நேரடியாக சென்று நிவாரண நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து துரிதப்படுத்தி வருகின்றார்கள். இந்நிலையில், நேற்று (3-12-2024) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு வரும் துணை முதல்வர் மற்றும் அமைச்சர் பெருமக்களை காணொலி வாயிலாகத் தொடர்பு கொண்டு தற்போதைய நிலையைக் கேட்டறிந்தார்.
பின்னர், ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு முதல்வர் தலைமையில் நேற்று (3-12-2024) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பின்வரும் நிவாரண உதவிகள் வழங்குவதென்று முடிவு செய்யப்பட்டது:
புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக 5 லட்சம் ரூபாய் வழங்கிடவும், சேதமடைந்த குடிசைகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கிடவும், முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கு முன்னுரிமை அளித்திடவும், மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 17 ஆயிரம் வழங்கிடவும், பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் (Perennial crops and trees) சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 22,500/- வழங்கிடவும், மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8,500/-ஆக வழங்கிடவும், எருது , பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.37,500/-ஆக வழங்கிடவும், வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.4,000/- வழங்கிடவும், கோழி உயிரிழப்பு நிவாரணமாக ரூ.100/- வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது,
அதி கனமழையின் காரணமாக கடுமையான மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கிடவும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சான்றிதழ்கள், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தி புதிய சான்றிதழ்கள் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதிப்புக்குள்ளான குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கிடவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நிவாரணம் வழங்குவது தொடர்பாக தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்ட கலெக்டர்கள் தங்கள் மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவரங்களை அரசுக்கு அனுப்பி வைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
சவரன் ரூ.75,000-ஐ தாண்டி தங்கம் விலை புதிய உச்சம் : கடந்த 5 நாட்களில் ரூ.2,160 உயர்வு
23 Jul 2025சென்னை : சென்னையில் நேற்று (புதன்கிழமை) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.75,000-ஐ தாண்டி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
-
மருத்துவமனையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்போது டிஸ்சார்ஜ்? : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்
23 Jul 2025சென்னை : மருத்துவமனையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
தொடரை வென்றது இந்தியா
23 Jul 2025இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி செஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது.
-
கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னர் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா தொடங்கியது : தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு
23 Jul 2025ஜெயங்கொண்டம் : தமிழ்நாடு அரசு சார்பில் கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னர் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா தொடங்கியது.
-
புதிய துணை ஜனாதிபதி தேர்வு: தேர்தல் பணியை துவங்கிய இந்திய தேர்தல் ஆணையம்
23 Jul 2025புதுடெல்லி : துணை ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கியதாக இந்திய தேர்தல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
-
முதல்வர் வீடு திரும்புவது எப்போது? மு.க.அழகிரி பதில்
23 Jul 2025சென்னை, முதல்வர் நலமுடன் உள்ளார். இன்னும் 2, 3 நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியை யாராலும் உடைக்கவே முடியாது: எடப்பாடி பழனிசாமி பேச்சு
23 Jul 2025ஓரத்தநாடு. அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியை யாராலும் உடைக்கவே முடியாது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-07-2025.
24 Jul 2025 -
ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்கக்கோரி பார்லி.யில் எதிர்க்கட்சிகள் 3-வது நாளாக தொடர் அமளி : இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைப்பு
23 Jul 2025புதுடெல்லி : எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக பாராளுமன்றத்தின் இரு அவைகளும் 3-வது நாளாக நேற்றும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன.
-
பல சாதனைகள் படைத்த ஹர்மன்ப்ரீத்
23 Jul 2025லண்டன் : இந்திய மகளிரணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் ஒரே போட்டியில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
வரலாற்றுச் சாதனை...
-
மருத்துவமனையில் இருந்தபடியே 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் குறித்து 3 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு : பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தல்
23 Jul 2025சென்னை : மருத்துவமனையில் இருந்தபடியே நேற்று "உங்களுடன் ஸ்டாலின்" திட்டப் பணிகள் குறித்து கன்னியாகுமரி, காஞ்சிபுரம், கோவை மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டால
-
முதல்வர் வீடு திரும்புவது எப்போது? - மு.க.அழகிரி பதில்
23 Jul 2025சென்னை : முதல்வர் நலமுடன் உள்ளார். இன்னும் 2, 3 நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
-
இங்கி., எதிரான 4-வது டெஸ்ட் : சாதனைகள் படைக்க பும்ராவுக்கு வாய்ப்பு
23 Jul 2025மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் பும்ரா பல்வேறு சாதனைகளை படைக்க வாய்ப்பு உள்ளது.
-
சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு: ரஸலுக்கு சக வீரர்கள் கவுரவம்
23 Jul 2025கிங்ஸ்டன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரஸல் ஓய்வு பெற்றார். இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ரஸல் 15 பந்துகளி
-
நீலகிரி, தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
23 Jul 2025சென்னை, நீலகிரி, தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பொதுத்தேர்வு அட்டவணைகள் ஒருவாரத்தில் வெளியடப்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
23 Jul 2025திருச்சி : பள்ளி பொதுத்தேர்வு கால அட்டவணைகள் இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
-
இந்தியா - பாக். போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பலமுறை கூறியது குறித்து ராகுல்காந்தி கேள்வி
23 Jul 2025புதுடெல்லி : பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 21 ஆம் தேதி தொடங்கியது.
-
இங்கிலாந்தில் 1000 ரன்களை கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில் இணைந்தார் கே.எல்.ராகுல்
23 Jul 2025லண்டன் : இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியின் முதல்நாளான நேற்று கே.எல்.ராகுல் 59 பந்தில் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இங்கிலாந்து மண்ணில்
-
தேசிய கல்விக் கொள்கையை ஒருபோதும் ஏற்க மாட்டோம்: அமைச்சர் அன்பில் மகேஷ் மீண்டும் திட்டவட்டம்
23 Jul 2025சென்னை, தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஆயத்த பணிகள் தொடங்கி விட்டன: பார்லி.யில் மத்திய அரசு தகவல்
23 Jul 2025புதுடெல்லி, 2027-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஆயத்த பணிகள் தொடங்கி விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
குத்தகை விவசாயிகளுக்கும் பயிர்க்காப்பீடு செய்யலாம்: தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
24 Jul 2025சென்னை, குறுவை சாகுபடியில் நிலம் வைத்துள்ள உரிமையாளர்கள் மட்டுமே பயிர்க் காப்பீடு செய்யலாம் என்ற நிலையை மாற்றி, குத்தகைதாரர்களும் பயிர்க் காப்பீடு செய்ய தமிழக அரசு தற்ப
-
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிர்ப்பு: சோனியா காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம்
24 Jul 2025புதுடெல்லி, இந்திய தேர்தல் ஆணையம் பீகாரில் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில
-
இந்தியா பிரிட்டன் இடையேயான ஒப்பந்தம் பகிரப்பட்ட வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது: பிரதமர் மோடி
24 Jul 2025லண்டன், இந்தியா பிரிட்டன் இடையே கையெழுத்தான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பகிரப்பட்ட வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
ரஷ்யா: பயணிகள் விமானம் விழுந்து விபத்து: 50 பேர் பலி
24 Jul 2025மாஸ்கோ, ரஷ்யாவின் கிழக்கு அமூர் பகுதியில் காணாமல் போன பயணிகள் விமானத்தின் எரியும் பாகத்தை, மீட்பு ஹெலிகாப்டர் கண்டுபிடித்ததாக அந்நாட்டின் அவசரகால அமைச்சக தரப்பு தெரிவித
-
இந்திய சமூகத்தினரின் வரவேற்பால் அகமகிழ்ந்தேன்: பிரதமர் மோடி
24 Jul 2025லண்டன், இந்திய சமூகத்தினரின் வரவேற்பால் அகமகிழ்ந்தேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.