எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஃபெஞ்சல் புயல் பாதித்த விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ரேஷன் கார்டுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துளளார். மேலும் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும், பயிர் சேதத்திற்கும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயலின் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ள மாவட்ட மக்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரண உதவிகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் நவம்பர் 30 முதல் வீசத் தொடங்கிய ஃபெஞ்சல் புயலின் காரணமாக பரவலான மற்றும் கடுமையான மழைப்பொழிவு தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் பெறப்பட்டது. குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழையின் அளவு வழக்கத்தைவிட மிக அதிகமாக இருந்தது.
இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் மழைப் பொழிவு ஏற்பட்டு, பொது மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதோடு, தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் பெரும்பகுதி விளைநிலங்களை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது. அத்துடன், மேற்படி மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள், பாலங்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள், பொதுக் கட்டிடங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளும் மற்றும் பொது மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.
அங்கு ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தையும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளையும் நேரில் ஆய்வு செய்திட நேற்றையதினம் தமிழ்நாடு முதல்வர் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, பொது மக்கள் மற்றும் அலுவலர்களிடம் பாதிப்பு விவரங்களையும், மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்து, தேவையான அறிவுரைகளை வழங்கினார்.
துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களும் இம்மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேற்றும் நேரடியாக சென்று நிவாரண நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து துரிதப்படுத்தி வருகின்றார்கள். இந்நிலையில், நேற்று (3-12-2024) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு வரும் துணை முதல்வர் மற்றும் அமைச்சர் பெருமக்களை காணொலி வாயிலாகத் தொடர்பு கொண்டு தற்போதைய நிலையைக் கேட்டறிந்தார்.
பின்னர், ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு முதல்வர் தலைமையில் நேற்று (3-12-2024) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பின்வரும் நிவாரண உதவிகள் வழங்குவதென்று முடிவு செய்யப்பட்டது:
புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக 5 லட்சம் ரூபாய் வழங்கிடவும், சேதமடைந்த குடிசைகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கிடவும், முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கு முன்னுரிமை அளித்திடவும், மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 17 ஆயிரம் வழங்கிடவும், பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் (Perennial crops and trees) சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 22,500/- வழங்கிடவும், மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8,500/-ஆக வழங்கிடவும், எருது , பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.37,500/-ஆக வழங்கிடவும், வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.4,000/- வழங்கிடவும், கோழி உயிரிழப்பு நிவாரணமாக ரூ.100/- வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது,
அதி கனமழையின் காரணமாக கடுமையான மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கிடவும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சான்றிதழ்கள், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்தி புதிய சான்றிதழ்கள் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதிப்புக்குள்ளான குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கிடவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நிவாரணம் வழங்குவது தொடர்பாக தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்ட கலெக்டர்கள் தங்கள் மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவரங்களை அரசுக்கு அனுப்பி வைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 23 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-07-2025.
22 Jul 2025 -
ஜென்ம நட்சத்திரம் விமர்சனம்
22 Jul 2025மணிவர்மன் இயக்கத்தில் தமன் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஜென்ம நட்சத்திரம்.
-
மணமகளுக்கு தங்கத்துடன் இலவச பட்டுச்சேலை: இ.பி.எஸ்., வாக்குறுதி
22 Jul 2025கும்பகோணம் : ''தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்துடன் மணமகளுக்கு இலவசமாக பட்டுச்சேலை வழங்கப்படும்'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வாக்குறுதி அளித்துள்ளார்.
-
கெவி திரை விமர்சனம்
22 Jul 2025அடிப்படை வசதி இல்லாத ஒரு மலை கிராமத்தில் நாயகன் ஆதவன் தனது கர்ப்பினி மனைவியுடன் வாழ்ந்து வருகிறான். அவனுக்கும் அங்குள்ள வனத்துறை அதிகாரிகளுக்கும் பிரச்சனை உருவாகிறது.
-
சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க உத்தரவு
22 Jul 2025சென்னை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, நான்கு வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்கும்படி, மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவி
-
ஜனாதிபதியுடன் மாநிலங்களவை துணை தலைவர் நாராயண் சந்திப்பு
22 Jul 2025டெல்லி : குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.
-
கூட்டணியில் இணைய இ.பி.எஸ். அழைப்பு: விஜய், சீமான் நிராகரிப்பு
22 Jul 2025சென்னை, கூட்டணியில் இணையுமாறு எடப்பாடி பழனிசாமி விடுத்த அழைப்பை த.வெ.க. தலைவர் விஜய்யும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் நிராகரித்துள்ளனர்.
-
அன்புமணியின் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் 25-ம் தேதி தொடக்கம்
22 Jul 2025சென்னை : பா.ம.க. நிறுவனர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை அன்புமணி ராமதாஸ் வருகிற 25-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
-
வெற்றி நடிக்கும் சென்னை பைல்ஸ் - முதல் பக்கம்
22 Jul 2025சின்னத்தம்பி புரொடக்சன் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரிப்பில் வெற்றி நடிப்பில் அனீஸ் அஸ்ரப் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சென்னை பைல்ஸ் - முதல் பக்கம்.
-
ஆகஸ்ட் 1-ல் வெளியாகும் அக்யூஸ்ட்
22 Jul 2025உதயா, அஜ்மல், யோகிபாபு, ஜான்விகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் அக்யூஸ்ட்.
-
மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: மேல்முறையீடு செய்ய அரசு முடிவு
22 Jul 2025மும்பை, மும்பை குண்டுவெடிப்பு வழக்கு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.
-
தனிநபர் வருமானத்தில் தமிழகத்திற்கு 2-ம் இடம் : மத்திய அரசு தகவல்
22 Jul 2025புதுடெல்லி : தனிநபர் ஆண்டு வருமானத்தில் தமிழகம் 2-ம் இடம் பிடித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
வங்கதேச விமானம் விபத்து: உயிரிழப்பு 27 ஆக அதிகரிப்பு
22 Jul 2025டாக்கா : வங்காளதேச விமான விபத்தில் சிக்கி விமானி மற்றும் மாணவர்கள் உள்பட பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. இதில் 25 பேர் குழந்தைகள் ஆவர்.
-
குரூப்-4 தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு
22 Jul 2025சென்னை : குரூப்-4 தேர்வர்கள் விடைக்குறிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது.
-
மீண்டும் ரூ.74 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை
22 Jul 2025சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,285-க்கு விற்பனையானது.
-
குரூப் 4 மறுதேர்வு நடத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
22 Jul 2025சென்னை : குளறுபடிகளின் உச்சமாக இருக்கும் குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
வரும் 26-ம் தேி ரூ.380 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
22 Jul 2025தூத்துக்குடி, வரும் 26-ம் தேி ரூ.380 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
-
ரெட் ப்ளவர் படத்தின் இசை வெளியீட்டு விழா
22 Jul 2025ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிக்க, விக்னேஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “ரெட் ப்ளவர்”.
-
லோகேஷ் கனகராஜ் வழங்கும் Mr.பாரத்
22 Jul 2025பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்க, Passion ஸ்டூடியோஸ், ஜி ஸ்க்வாட், தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் பாரத் & நிரஞ்சனின் “Mr.பாரத்” படத்தின் படப்பிடிப
-
வரும் 26-ம் தேதி வரை 4 மாவட்டங்களில் கனமழை : வானிலை மையம் தகவல்
22 Jul 2025சென்னை : வரும் 26-ம் தேதி வரை நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
குரூப்-4 தேர்வு விடைத்தாள் பெட்டிகள் பிரிக்கப்பட்டதாக வெளியான செய்தி: டி.என்.பி.எஸ்.சி. மறுப்பு
22 Jul 2025சென்னை, குரூப்-4 விடைத்தாள் பெட்டிகள் பிரிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு டி.என்.பி.எஸ்.சி. மறுப்பு தெரிவித்துள்ளது.
-
முறியடிக்கப்படாத சாதனை
22 Jul 2025இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பி.டி உஷா, 61, இருக்கிறார். இவர் தடகள வீராங்கனை ஆவர். பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி அசத்தி உள்ளார்.
-
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் குறித்து ஆலோசனை: மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப்பணிகளைத் தொடர்கிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
22 Jul 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், “மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன் என முதல்வர்
-
மெட்ரோ ரயிலில் பயணிக்க ஆக.1-ம் தேதி முதல் தேசிய பொது போக்குவரத்து அட்டை அறிமுகம்
22 Jul 2025சென்னை : மெட்ரோ ரயிலில் பயணிக்க 1-ம் தேதி முதல் தேசிய பொது போக்குவரத்து அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
-
கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயித்த விவகாரம்: ஜனாதிபதியின் 14 கேள்விகளுக்கு ஒருவாரத்தில் பதிலளிக்க வேண்டும்: மத்திய, அனைத்து மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
22 Jul 2025புதுடெல்லி, மசோதாக்கள் தொடர்பாக முடிவெடுக்க கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயித்த விவகாரத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்முவின் கேள்விகளுக்கு மத்திய மற்றும் அனைத்து மாநில அரச