எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அடிலெய்டு : அடிலெய்டு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 337 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்திய அணி 2-வது இன்னிங்சில் 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் 128 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
அணியில் மாற்றம்...
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்- கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்திய அணியில் 3 மாற்றமாக தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரெல், வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ரோகித் சர்மா, சுப்மன் கில், அஸ்வின் இடம் பிடித்தனர்.
இந்தியா பேட்டிங்...
இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 44.1 ஓவர்களில் 180 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை அள்ளினார். பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 33 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 86 ரன்களுடன் நல்ல நிலையில் இருந்தது. லபுஸ்சேன் 20 ரன்களுடனும் , மெக்ஸ்வினி 38 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
ஆஸி.க்கு நெருக்கடி...
இந்நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மெக்ஸ்வினியின் விக்கெட்டை பறிகொடுத்தது. அவர் பும்ராவின் பந்துவீச்சில் 39 ரன்களில் வீழ்ந்தார். இதனையடுத்து களமிறங்கிய ஸ்டீவ் சுமித்தும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அவரையும் 2 ரன்களில் பும்ரா அவுட்டாக்கினார். பும்ரா சிறப்பாக பந்துவீசி 2-வது நாளின் ஆரம்பத்திலேயே ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி கொடுத்தார்.
டிராவிஸ் ஹெட் சதம்...
இருப்பினும் அடுத்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட், லபுஸ்சேனுடன் ஜோடி சேர்ந்து அணியை மீட்டெடுத்தனர். சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த லபுஸ்சேன் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் டிராவிஸ் ஹெட்டும் அரைசதம் அடித்து அசத்தினார். அரைசதம் அடித்த பின் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடினார். அவருக்கு மறுமுனையில் இருந்து பெரிய அளவில் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றாலும் அவர் சிறப்பாக விளையாடி அணி 300 ரன்களை எட்ட உதவினார். 111 பந்துகளில் சதம் அடித்து அசத்திய ஹெட் 140 ரன்களில் ஆட்டமிழந்தார். முடிவில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 337 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 157 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா தரப்பில் சிராஜ் மற்றும் பும்ரா தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்தியா திணறல்....
இதனையடுத்து, 157 பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல் 7 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24 ரன்கள் எடுத்தும், விராட் கோலி 11 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். ஷுப்மன் கில் 28 ரன்கள், கேப்டன் ரோஹித் சர்மா 6 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர். ஆஸ்திரேலியா தரப்பில் கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் ஸ்காட் போலாண்ட் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மிட்செல் ஸ்டார்க் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 128 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. ரிஷப் பந்த் 28 ரன்களுடனும், நிதீஷ் குமார் ரெட்டி 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 29 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹெட் - சிராஜ் வாக்குவாதம்
ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்சின்போது இந்திய வேகப்பந்து வீசிய 82-வது ஓவரின் 3-வது பந்தை டிராவிஸ் ஹெட் சிக்சருக்கு பறக்க விட்டார். அதற்கு அடுத்த 4-வது பந்திலேயே சிராஜ் அவரை கிளீன் போல்டாக்கி பதிலடி கொடுத்தார். மேலும் டிராவிஸ் ஹெட்டை நோக்கி ஆக்ரோஷமாக கத்தியதுடன் 'போ' என்ற வகையில் சைகையும் காண்பித்தார். இதனால் இருவருக்குமிடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது.
சிராஜ் அதிவேக பந்துவீச்சு ?
இந்த போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தபோது 25-வது ஓவரை இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வீசினார். அந்த ஓவரில் அவர் வீசிய 5-வது பந்து 181.6 கி.மீ. வேகத்தில் வீசப்பட்டதாக காட்டப்பட்டது. இது சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் சிராஜ் கிரிக்கெட்டில் அதி வேகமாக பந்து வீசியதாக தகவல்கள் பரவின. ஆனால் உண்மை நிலவரம் என்னவெனில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பந்தின் வேகம் அவ்வாறு காட்டப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை அதிவேகமாக பந்து வீசியவர்களின் சாதனை பட்டியலில் 161.3 கி.மீ. வேகத்துடன் சோயப் அக்தர் உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-01-2025.
13 Jan 2025 -
பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு: லாஸ் ஏஞ்சல்ஸில் 15 சதவீதம் தீ மட்டுமே கட்டுக்குள் வந்துள்ளது
13 Jan 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் காட்டுத்தீயில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை 15 சதவீதம் தீ மட்டுமே
-
சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சேவை புரிந்தோருக்கு தமிழக கவர்னர் விருதுகள் அறிவிப்பு
13 Jan 2025சென்னை: சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் சேவை புரிந்தோருக்கான விருதுகளை கவர்னர் மாளிகை அறிவித்துள்ளது.
-
துபாய் கார் பந்தயத்தில் வெற்றி: நடிகர் அஜித்குமாருக்கு துணை முதல்வர் வாழ்த்து
13 Jan 2025சென்னை : துபாயில் நடந்த கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள
-
சென்னையிலிருந்து சிறப்பு பேருந்தில் 6.40 லட்சம் பேர் பயணம்
13 Jan 2025சென்னை : கடந்த 3 நாட்களில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு 6 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
-
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
13 Jan 2025சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
-
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு பாலியல் தொல்லை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
13 Jan 2025சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இதுவரை 12 பேர் வேட்புமனு தாக்கல்
13 Jan 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு அங்கு இதுவரை 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
13 Jan 2025சென்னை : சென்னையில் தங்கம் விலை நேற்று மீண்டும் உயர்ந்து விற்பனையானது.
-
சனாதன தர்மத்தை மீட்டவர்: வள்ளலாருககு கவர்னர் புகழாரம்
13 Jan 2025கிருஷ்ணகிரி: சனாதன தர்மத்தை மீட்டவர் வள்ளலார் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
-
இளைஞர்களுக்கு மாதம் ரூ.8,500: டெல்லியில் காங். தேர்தல் வாக்குறுதி
13 Jan 2025புதுடெல்லி: டெல்லியை சேர்ந்த படித்த, வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.8,500 வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  
-
பாக்.கில் சுரங்க விபத்து: 11 பேர் பலி
13 Jan 2025பலூசிஸ்தான் : பாகிஸ்தானில் சுரங்க விபத்தில் ஏற்பட்ட வாயுவெடிப்பில் சிக்கி பலியான தொழிலாளர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
-
தொடர் கனமழை - நிலச்சரிவு: பிரேசிலில் 10 பேர் பலி
13 Jan 2025பிரேசிலியா : பிரேசிலில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலியாகி உள்ளனர்.
-
மகா கும்பமேளாவால் உத்தரப்பிரதேச அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி வருவாய்
13 Jan 2025லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நேற்று தொடங்கியிருக்கும் மகா கும்பமேளாவால் உ.பி.க்கு ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 6 கேரள மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை அறிவிப்பு
13 Jan 2025திருவனந்தபுரம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரளாவின் 6 மாவட்டங்களுக்கு இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் நாட்டின் 40 சதவீத மின்சார வாகனங்கள் உற்பத்தி அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்
13 Jan 2025சென்னை: நாட்டின் 40 சதவீத மின்சார வாகனங்கள் தமிழ்நாட்டில் தான் உற்பத்தியாகிறது என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார் .
-
மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு
13 Jan 2025மேட்டூர் : மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 115.03 அடியில் இருந்து 114.74 அடியாக சரிந்துள்ளது.
-
கார் பந்தயத்தில் வெற்றி: நடிகர் அஜித்திற்கு இ.பி.எஸ். வாழ்த்து
13 Jan 2025சென்னை: கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற நடிகர் அஜித்திற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார் .
-
இன்று பொங்கல் பண்டிகை: தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
13 Jan 2025சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
போக்சோ வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கைது
13 Jan 2025மதுரை: 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், பா.ஜ.க. மாநில நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
-
காஷ்மீரில் ரூ.2,700 கோடியில் கட்டப்பட்டுள்ள சோனாமார்க் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
13 Jan 2025ஜம்மு: ஜம்மு - காஷ்மீரின் கந்தேர்பால் மாவட்டத்தில் உள்ள காகங்கீர் மற்றும் சோனாமார்க்கை இணைக்கும் வகையில் 'இசட்' வடிவ சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
-
காலத்தால் அழியாத ஆன்மீக பாரம்பரியம்: மகா கும்பமேளா குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி
13 Jan 2025புதுடெல்லி: மகா கும்பமேளா, இந்தியாவின் காலத்தால் அழியாத ஆன்மீக பாரம்பரியத்தை உள்ளடக்கியது என பிரதமர் தெரிவித்துள்ளார்.;
-
உ.பி. மகா கும்பமேளா கோலாகல தொடக்கம்: லட்சக்கணக்கானோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்
13 Jan 2025பிரயாக்ராஜ்: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கோலாகலமாக தொடங்கியது. திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடினர்.
-
தமிழக காவலர்கள் 3,186 பேருக்கு பொங்கல் பதக்கங்கள் அறிவிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
13 Jan 2025சென்னை: 2025 பொங்கல் திருநாளையொட்டி 3,186 தமிழக காவல் துறை மற்றும் சீருடை அலுவலர்கள்/பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்
-
போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுமா? - இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்
13 Jan 2025கெய்ரோ : இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம், பணயக் கைதிகள் விடுதலை தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.