எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கொல்கத்தா : நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடு செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் அவருக்கான தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 9-ம் தேதி அதிகாலையில் பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த விவகாரத்தில் சஞ்சய் ராய் என்பவர் 10-ம் தேதி கைது செய்யப்பட்டார். மாநில போலீசார் அவரை கைது செய்தனர்.
எனினும் இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி கொல்கத்தா ஐகோர்ட்டு கடந்த ஆகஸ்டு 13-ம் தேதி உத்தரவிட்டது. இதன்படி சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து 14-ம் தேதி முதல் விசாரணையை தொடங்கினர். மறுபுறம் இந்த விவகாரத்தில், தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டும், ஆஸ்பத்திரிகளில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பரிந்துரைகளை வழங்க சிறப்புக்குழு ஒன்றை நியமித்தது.
பணியில் இருந்த பெண் டாக்டர் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இந்த கொடூர செயலை கண்டித்தும், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கேட்டும் நாடு முழுவதும் மருத்துவ சங்கங்கள் போராட்டங்கள் நடத்தின. குறிப்பாக மேற்கு வங்காளத்தில் போராட்டம், பேரணி, உண்ணாவிரதம் என பல நாட்கள் போராட்டம் நீடித்தது.
பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், சமூக அமைப்புகளும், பள்ளி-கல்லூரி மாணவர்களும் மேற்கு வங்காளத்தில் தீவிர போராட்டங்களை நடத்தினர். இதற்கிடையே இந்த கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கு சீல்டா மாவட்ட கூடுதல் மற்றும் செசன்ஸ் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த விசாரணை அனைத்தும் கடந்த 9-ம் தேதி நிறைவடைந்தது.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என சி.பி.ஐ. தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. டெல்லி நிர்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்ட சம்பவம் போல நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் சியல்டா கோர்ட் வழங்கும் தீர்ப்புக்காக நாடே எதிர்பார்த்திருந்தது.
இந்த வழக்கில் நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து கோர்ட்டின் வாசல் கதவை தட்டுவோம் என கூறியுள்ள பெண் டாக்டரின் தந்தை செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில், மரபணு பரிசோதனை அறிக்கையில், ஒருவர் மட்டுமே சம்பந்தப்பட்டிருக்கிறார் என குறிப்பிடப்படவில்லை. சம்பவத்தின்போது, 4 ஆண்கள் மற்றும் ஒரு பெண் இருந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால், நாங்கள் சற்று ஆறுதலாக உணர்வோம். எங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை, நாங்கள் தொடர்ந்து கோர்ட்டின் கதவை தட்டுவோம். நாட்டு மக்களின் ஆதரவையும் நாங்கள் கோருவோம் என்று கூறினார்.
இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் பெற்றோரும் நீதிமன்ற வளாகத்தில் இருந்தனர். நீதிபதி அனிர்பன் தாஸ் தனது தீர்ப்பில், சிபிஐ முன்வைத்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. பிஎன்எஸ் பிரிவுகள் 64, 66 மற்றும் 103(1) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி. இதற்கு அதிகபட்சமாக மரண தண்டனையும், குறைந்தபட்சமாக ஆயுள் தண்டனையும் இருக்கும் என்று அறிவித்தார். குற்றவாளி சஞ்சய் ராய்க்கான தண்டனை விவரம் நாளை (20-ம் தேதி) அறிவிக்கப்படும் என்று கோர்ட் தெரிவித்துள்ளது.
அப்போது, “நான் இதைச் செய்யவில்லை. இதைச் செய்தவர்கள், ஏன் கைது செய்யப்படவில்லை?” என்று சஞ்சய் ராய் நீதிமன்றத்தில் கூறினார். அக்டோபர் 7, 2024 அன்று இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், சீல்டாவில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் தினசரி விசாரணையை நடத்தியது. விசாரணை தொடங்கி 57 நாட்கள் நிறைவு பெற்ற நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கூட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாகவில்லை. ஒரே குற்றவாளி சஞ்சய் ராய் என்று சி.பி.ஐ. ஆரம்பத்தில் இருந்து கூறி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
சற்று குறைந்த தங்கம் விலை
12 Nov 2025சென்னை : தங்கம் விலை நேற்று சற்று குறைந்துள்ளது.
-
செவாலியர் விருது அறிவிக்கப்பட்ட தோட்டா தரணிக்கு முதல்வர் வாழ்த்து
12 Nov 2025சென்னை : செவாலியர் விருது அறிவிக்கப்பட்ட தோடா தரணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இங்கு திறமையானவர்கள் இல்லை: ஹெச் -1பி நடைமுறையில் பின்வாங்கிய அதிபர் ட்ரம்ப்
12 Nov 2025வாஷிங்டன் : வேலைவாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில் அமெரிக்காவில் திறமையானவர் இல்லை என்றும், அதனால் ஹெச் -1பி விசா
-
கனடா அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
12 Nov 2025ஒண்டாரியா : கனடா அமைச்சருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
-
ஐ.சி.சி. பேட்டர்கள் தரவரிசை: டாப் 10-ல் 3 இந்திய வீரர்கள்
12 Nov 2025துபாய் : ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியலின் புதிய பட்டியலில் ஒருநாள் பேட்டர் தரவரிசையில் டாப் 10-ல் 3 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
-
அசாமில் நிலநடுக்கம்
12 Nov 2025திஸ்பூர் : அசாமில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம் அறிவிப்பு
12 Nov 2025சென்னை : டிசம்பர் 16-ந் தேதி முதல் டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.
-
தோட்டா தரணிக்கு இ.பி.எஸ். வாழ்த்து
12 Nov 2025சென்னை : செவாலியர் விருது அறிவிக்கப்பட்ட கவிஞர் தோட்டா தரணிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
எகிப்து: விபத்தில் 2 பேர் பலி
12 Nov 2025கெய்ரோ, எகிப்து: சுற்றுலா பஸ் மீது லாரி மோதி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 39 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்: ஜிம்பாப்வே உள்ளிட்ட மேலும் 3 அணிகளை சேர்க்கிறது ஐ.சி.சி.
12 Nov 2025துபாய் : துபாயில் சமீபத்தில் நடந்த ஐ.சி.சி.
-
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: காயமடைந்தவர்களை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல்
12 Nov 2025புது டெல்லி, டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு சம்பவத்தில் 12 பேர் பலியாகினர், பலர் காயமடைந்தனர்.
-
துருக்கியில் சோகம்: ராணுவ விமானம் மலையில் மோதி விபத்து - 20 பேர் பலி
12 Nov 2025திபிலீசி, ராணுவ விமானம் மலையில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 20 பேர் உயிரிழந்தனர்.
-
த.வெ.க.வுக்கு ‘ஆட்டோ ரிக்ஷா’ சின்னம் கிடைக்குமா?
12 Nov 2025சென்னை : விஜய் கட்சிக்கு ‘ஆட்டோ ரிக்ஷா’ சின்னம் குறித்து தேர்தல் கமிஷனில் த.வெ.க. மனு அளித்துள்ளது.
-
டெல்லி கார் வெடிப்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி
12 Nov 2025டெல்லி, டெல்லி கார் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரண நிதியை டெல்லி முதல்வர் ரேகா குப்தா அறிவித்துள்ளார்.
-
இஸ்ரோ பயணத்தில் மேலும் ஒரு மைல்கல்: ககன்யான் திட்டத்திற்கான பாராசூட் சோதனை வெற்றி
12 Nov 2025சென்னை : மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான பாராசூட் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
-
அமெரிக்காவில் விமான விபத்து - 2 பேர் பலி
12 Nov 2025வாஷிங்டன், அமெரிக்காவில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்த விபத்தில் தந்தை - மகள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
-
சென்னையில் கொள்ளை சம்பவம்: அ.தி.மு.க. கடும் குற்றச்சாட்டு
12 Nov 2025சென்னை : சென்னையில் கொள்ளை சம்பம் தொடர்பாக காவல்துறை முற்றிலுமாக சீரழிந்து உள்ளதாக அ.தி.மு.க. குற்றம்சாட்டியுள்ளது.
-
கரூர் கூட்ட நெரிசலில் காயம் அடைந்த 3 பேரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை
12 Nov 2025கரூர், கரூரில் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் காயம் அடைந்தவர்கள் புதன்கிழமை காலை சி.பி.ஐ. அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜராகினர்.
-
தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய மாநில அரசுகளுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
12 Nov 2025சென்னை, தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற செயலை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
சிவகங்கை விபத்து சம்பவம்: பொதுமக்கள் சாலை மறியல்
12 Nov 2025திருப்புவனம் : சிவகங்கையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் போலீசார் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
-
தீவிரவாத செயல்களை தடுப்பதில் பா.ஜ.க. அரசு தோல்வி: அமைச்சர் மனோ தங்கராஜ்
12 Nov 2025சென்னை, தீவிரவாத செயல்களை தடுப்பதில் பா.ஜ.க. அரசு தோல்வி அடைந்துள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
-
சென்னை விமான நிலையத்தில் பயங்கரவாத தடுப்பு ஒத்திகை
12 Nov 2025சென்னை, சென்னை விமான நிலையத்தில் பயங்கரவாத தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.
-
சத்தீஷ்கரில் 6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
12 Nov 2025ராய்ப்பூர், சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த என்கவுன்டரில் 6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
-
தலைமை தேர்தல் ஆணையத்தில் பொது சின்னம் கோரி ம.நீ.ம விண்ணப்பம்
12 Nov 2025சென்னை : பொது சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
-
டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி: ராமேசுவரம் கோவில் மற்றும் பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
12 Nov 2025ராமேசுவரம், ராமேசுவரம் கோவில், பாம்பன் ரயில் பாலம் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


