எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : விதிமுறையில் பி.சி.சி.ஐ. மாற்றம்: செய்துள்ளதை அடுத்து ஐ.பி.எல். அணி கேப்டன்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
18-வது ஐ.பி.எல்...
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். வெற்றிகரமாக 17 சீசன்களை நிறைவு செய்துள்ளது. இதன் 18-வது சீசன் இன்று (22-ம் தேதி) தொடங்க உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது.
பி.சி.சி.ஐ. ஆலோசனை...
இதனையொட்டி 10 அணிகளின் கேப்டன்களுடன் பி.சி.சி.ஐ. ஆலோசனை கூட்டம் மும்பையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பந்தின் மீது எச்சிலை தேய்ப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. அத்துடன் இம்பேக்ட் வீரர் விதிமுறை இன்னும் 2 ஆண்டுகள் (2027-ம் ஆண்டு வரை) தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.
விளையாட தடை...
முன்னதாக கடந்த சீசன்களில் ஒரு அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை என்றால் முதல் முறை கேப்டனுக்கு அபராதமும், 2-வது முறையாக இதே தவறை செய்தால் கேப்டன் மட்டுமின்றி அணியின் சக வீரர்களுக்கு அபராதமும் 3-வது முறையாக செய்தால் கேப்டனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்படும் என்ற விதிமுறை அமலில் இருந்தது. அதன் காரணமாக டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் கடந்த சீசனில் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கபட்டது. அதேபோல் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிர் வரும் சீசனின் முதல் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
விதிமுறையில் மாற்றம்...
இந்நிலையில் இந்த விதிமுறையில் சில மாற்றங்களை செய்து பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. அதன்படி இனி வரும் காலங்களில் மெதுவாக பந்து வீசிய புகாரில் சிக்கினால் கேப்டன்களுக்கு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படாது. மாறாக முதல் முறை சிக்கினால் போட்டி கட்டணத்தில் இருந்து 25-75 சதவீதம் அபராதமும், 2-வது முறை அபராதம் மற்றும் கேப்டனுக்கு 4 தகுதி இழப்பு புள்ளிகளும், இதேபோல் மேலும் தொடர்ந்து சிக்கினால் தகுதி இழப்பு புள்ளிகளும் போட்டி கட்டணம் முழுவதும் அபராதமாக விதிக்கப்பட உள்ளது. இந்த முடிவை பி.சி.சி.ஐ. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடுத்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


