முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானுக்கு உளவு தகவல்களை பகிர்ந்தவர் அரியானாவில் கைது

வியாழக்கிழமை, 15 மே 2025      இந்தியா
Jail

Source: provided

சண்டிகர்: பாகிஸ்தானின் உளவு அமைப்புக்கு முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டதற்காக அரியானாவின் பானிபட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பாகிஸ்தானில் உள்ள உளவு அமைப்புகள் மற்றும் சில நபர்களுடன் முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டதற்கு, அரியானா மாநிலம், பானிபட் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை அரியானா போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

24 வயதான நௌமன் இலாஹி உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர். இவர், தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராகப் பணியாற்றி வருகிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் உள்ள மொபைல்போனில் போலீசார் ஆய்வு செய்தனர். அதில், முக்கிய தகவல்களை பகிர்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், நௌமன் இலாஹி தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

கடந்த மாதம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட பதட்டத்தை தொடர்ந்து அரியானா மாநில போலீசார் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும் நேரத்தில் இல்லாஹியின் கைது நடந்துள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து