எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜூன் 20 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நிறைவடையும் வரை நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் டிம் சௌதியை, இங்கிலாந்து அணியின் சிறப்பு ஆலோசகராக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று (மே 15) நியமித்துள்ளது.
நியூசிலாந்து அணிக்காக அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள டிம் சௌதி, கடந்த ஆண்டு டிசம்பரில் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இங்கிலாந்து அணி ஜிம்பாப்வேவுக்கு எதிராக அடுத்த வாரம் டெஸ்ட் போட்டி ஒன்றில் விளையாடவுள்ளது. அந்த போட்டியிலிருந்து டிம் சௌதி இங்கிலாந்து அணியுடன் இணையவுள்ளார். 36 வயதாகும் டிம் சௌதி நியூசிலாந்து அணிக்காக 107 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 391 விக்கெட்டுகளையும், 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 221 விக்கெட்டுகளையும், 126 டி20 போட்டிகளில் விளையாடி 164 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆர்.சி.பி. யில் வெளிநாட்டு வீரர்கள்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவியது. கடந்த 8ஆம் தேதி தரம்சாலாவில் பஞ்சாப்- டெல்லி அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதால், பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் உடனடியாக நிறுத்தப்பட்டது. வெளிநாட்டு வீரர்கள் பத்திரமாக சொந்த நாடு திரும்பினர்.
பின்னர் இந்தியா- பாகிஸ்தான் இடையில் கடந்த 10ஆம் தேதி சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வருகிற 17ஆம் தேதி மீண்டும் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆர்.சி.பி. அணியில் இடம் பிடித்திருந்த பில் சால்ட், டிம் டேவிட், பெத்தேல் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் மீண்டும் அணியில் இணைந்துள்ளனர்.
மொயீன் அலி திடீர் விலகல்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவியது. கடந்த 8ஆம் தேதி தரம்சாலாவில் பஞ்சாப்- டெல்லி அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதால், பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் உடனடியாக நிறுத்தப்பட்டது. வெளிநாட்டு வீரர்கள் பத்திரமாக சொந்த நாடு திரும்பினர். சண்டை நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து வருகிற 17ஆம் தேதி மீண்டும் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்காக இந்தியா திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் மொயீன் அலி, சொந்த காரணத்திற்காக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே டெல்லி அணியின் மெக்கர்க் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியுள்ளார்.
கோப்பை வென்ற போலோக்னா
இத்தாலியில் உள்ள ஸ்டேடியோ ஒலிம்பிக்கோ திடலில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஏசி மிலனை போலோக்னா அணி 1-0 என வீழ்த்தி கோப்பையை வென்றது. டான் அசானே என்டோய் கடைசி 3 போட்டிகளில் விளையாடமல் இருந்தார். காயத்திலிருந்து மீண்டுவந்த இவர் இந்தப் போட்டியில் 53ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் 1974-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக பொலோனியா அணி இத்தாலியன் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல் 10 நிமிஷத்தில் இரண்டு அணியின் கோல் கீப்பர்களும் அசத்தலாக பந்தினை தடுத்தார்கள். முதல்பாதியின் கடைசியில் போலோக்னா அணியின் கேப்டனுக்கு மூக்குடைந்து ரத்தம் வழிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் போட்டியில் ஏசி மிலன் பந்தினை 54 சதவிகிதம் தனது கட்டுக்குள் வைத்திருந்தாலும் இலக்கை நோக்கி 2 முறை மட்டுமே கோல் அடிக்க முயற்சித்தது. அதையும் போலோக்னா அணி தடுத்துவிட்டது. போலோக்னா அணி 5 முறை இலக்கை நோக்கி அடிக்கப்பட்ட பந்தில் 1 முறை சரியாக சென்று கோலாக மாறியது. ஏசி மிலனின் 22 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை கைப்பற்றும் கனவினை போலாக்னா அணி முறியடித்தது.
பட்லருக்கு பதில் மெண்டிஸ் ?
ஐ.பி.எல். போட்டிகள் இந்தியா -பாகிஸ்தான் மோதலால் ஒத்திவைக்கப்பட்டன. அதனால் வெளிநாட்டு வீரர்கள் தங்களது சொந்த நாட்டுக்கு திரும்பினார்கள். மீண்டும் ஐ.பி.எல். போட்டிகள் மே.17ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. ஐ.பி.எல். போட்டிகள் தேதி மாற்றப்பட்டதால் வெளிநாட்டு வீரர்களுக்கு ஏற்கனவே இருக்கும் போட்டிகளை இழக்க வேண்டி இருக்கும்.
இதன் காரணமாக பி.சி.சி.ஐ. ஐ.பி.எல். அணிகளுக்கு யாரை வேண்டுமானாலும் மீதமுள்ள போட்டிகளுக்கு தேர்வு செய்யலாம் எனப் புதிய விதியைக் கொண்டு வந்துள்ளது. இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் - பேட்டர் குசால் மெண்டிஸ் மீதமுள்ள ஐ.பி.எல். போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வருமென எதிர்பார்க்கப்படுகிறது. ஜாஸ் பட்லர் இந்த சீசனில் 11 போட்டிகளில் 500 ரன்கள் குவித்திருந்தார். குஜ்ராத் அணியில் டாப் 3 வீரர்களான ஷுப்மன் கில், சாய் சுதர்சன், பட்லர் மூவருமே 500க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார். தற்போது, பட்லர் இல்லாமல் இந்த வெற்றிக் கூட்டணி மாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அசையாமல் நின்ற பெயர்ஸ்டோ
இங்கிலாந்து வீரர் ஜானி பெயர்ஸ்டோ 10 நொடிகள் அசையாமல் நின்ற விடியோ வைரலாகி வருகிறது. 35 வயதாகும் ஜானி பெயர்ஸ்டோ தற்போது கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிஷன் 1-இல் விளையாடி வருகிறார். இந்தத் தொடரில் யார்க்ஷ்ரி அணிக்காக கேப்டன் பொறுப்பிலிருக்கும் ஜானி பெயர்ஸ்டோ ஒரு பந்தினை அடித்துவிட்டு அசையாமல் 9.51 நொடிகள் நிற்பார். இரண்டு பந்துகளுக்கு தொடர்ச்சியாக இப்படி நிற்கும் விடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனை ரோட்ஸே கவுண்டி சாம்பியன்ஷிப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
முன்னதாக ஆஸி. உடனான டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்துவிட்டு கிரிஸில் காலை வைத்துவிட்டு நடந்து சென்றார். கீப்பர் பந்தினை பிடித்து ஸ்டம்பில் அடித்ததும் நடுவர் அவுட் கொடுத்தார். இது மிகப்பெரிய சர்ச்சையானது. விதியின்படி அது அவுட்டாக இருந்தாலும் பலரும் இதைக் கடுமையாக விமர்சித்தார்கள். ஜானி பெயர்ஸ்டோ இதனை ஒரு பாடமாக எடுத்துகொண்டு இப்படி செய்து வருகிறார். கிரிக்கெட் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் மீம்ஸ்களாக குவித்து வருகிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 3 weeks ago |
-
தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்பம் மேலும் உயரும் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
21 Jun 2025சென்னை : சென்னை மற்றும் பல பகுதிகளில் 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என வென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
21 Jun 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூன் 21) பவுனுக்கு ரூ.200 என உயர்ந்து விற்பனையானது. இதனால் ஒரு பவுன் தங்கம் ரூ.73,880-க்கு விற்பனை ஆகிறது.
-
ஈரானின் முக்கிய தளபதி கொலை: இஸ்ரேல் அறிவிப்பு
21 Jun 2025தெஹ்ரான், ஈரானின் புரட்சிகர காவல்படை ட்ரோன் படைப் பிரிவின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
-
நமது கலாச்சாரம், பண்பாட்டின் அடையாளம் முருகப்பெருமான்: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேட்டி
21 Jun 2025மதுரை, மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது.
-
புதுப்பொலிவு கண்ட வள்ளுவர் கோட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
21 Jun 2025சென்னை, வள்ளுவர் கோட்டம் புதுப்பொலிவு கண்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
-
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை: ராஜ்நாத் சிங்
21 Jun 2025டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை என்றும் இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர் ராஜ்நாத்
-
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வாழ்த்துக்கள் : எடப்பாடி பழனிசாமி பேட்டி
21 Jun 2025சென்னை : ஒவ்வொரு அமைப்பும், அவரவர் விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயகத்தின் உரிமை. அந்த அடிப்படையில், தான் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துகிறார்கள்.
-
அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்: இஸ்ரேல், ஈரானுக்கு ஐ.நா. வலியுறுத்தல்
21 Jun 2025ஜெனீவா : இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரில் அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியுள்ளார்.
-
தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் வந்தே தீரும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
21 Jun 2025சென்னை : சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறை சார்பில் சர்வதேச யோகா
-
அகமதாபாத் விமான விபத்து எதிரொலி: 3 முக்கிய அதிகாரிகளை நீக்க ஏர் இந்தியாவுக்கு அறிவுறுத்தல்
21 Jun 2025புதுடெல்லி, அகமதாபாத் விமான விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு நடத்தி வரும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ), விமானக் குழுவினரை திட்டமிடுவது, இயக்குவது
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் புதிய சாதனை
21 Jun 2025லண்டன் : தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் சதம் விளாசிய முதல் வெளிநாட்டு வீரர் என்ற வரலாற்று சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.
-
உலகத்தை இணைத்த யோகா: விசாகப்பட்டினம் யோகா தினம் நிகழ்வில் பிரதமர் மோடி பேச்சு
21 Jun 2025விசாகப்பட்டினம், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நேற்று (ஜூன் 21) ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் மாபெரும் அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
-
சிற்றுந்துகள் திட்டத்தால் 1 கோடி மக்கள் பயணம்: தமிழ்நாடு அரசு பெருமிதம்
21 Jun 2025சென்னை, மினி பேருந்து திட்டத்தால் இதுவரை பஸ் வசதி கிடைக்காத 90 ஆயிரம் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏறத்தாழ 1 கோடி மக்கள் பயணம் செய்து அளவில்லாத மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள
-
வால்பாறை அருகே பயங்கரம்: சிறுத்தை தூக்கி சென்ற சிறுமி சடலமாக மீட்பு
21 Jun 2025வால்பாறை : வால்பாறை அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தாய் கண் முன்னே, சிறுத்தை வெள்ளிக்கிழமை மாலை கவ்விச் சென்ற நிலையில், நேற்று சிறுமி சடலமாக மீட்கப
-
இங்கி.க்கு எதிரான முதல் டெஸ்ட்: வலுவான நிலையில் இந்திய அணி 471 ரன்கள் குவிப்பு - 3 பேர் சதம்
21 Jun 2025லீட்ஸ் ந்தியா - இங்கிலாந்து இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்சில் நேற்று தொடங்கியது.
-
யோகா, உலகிற்கு பாரதம் அளித்த கொடை; 51 தண்டால் எடுத்து அசத்திய கவர்னர் ரவி
21 Jun 2025மதுரை : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மதுரையில் யோகா பயிற்சியில் ஈடுபட்ட கவர்னர் ரவி, 51 தண்டால் எடுத்து பார்வையாளர்களை அசத்தினார். கவர்னருக்கு வயது 73.
-
பீகாரில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.1,100 ஆக உயர்வு: நிதிஷ்
21 Jun 2025பீகார், பீகாரில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.400-ல் இருந்து ரூ.1
-
ட்ரம்ப் நினைத்தால் போரை முடிவுக்கு கொண்டுவரலாம்: ஈரான் அதிபரின் ஆலோசகர் கருத்து
21 Jun 2025தெஹ்ரான், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நினைத்தால், ஒரே ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் மோதலை நிறுத்த முடியும் என ஈரான் தெர
-
சமையலின் ஆஸ்கார் விருது: தமிழருக்கு கனிமொழி எம்.பி. பாராட்டு
21 Jun 2025சென்னை : சிறந்த சமையல் கலைஞருக்கான விருதைத் தமிழ்நாட்டை சேர்ந்த செப் விஜயகுமார் வென்றுள்ள நிலையில் அவருக்கு கனிமொழி எம்.பி. பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
டெஸ்ட் போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களை கடந்து சுப்மன் கில் புதிய சாதனை
21 Jun 2025லண்டன் : டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் 2000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
-
போர் நடைபெறும் ஈரானில் இருந்து நேபாளம், இலங்கை மக்களையும் வெளியேற்ற இந்திய அரசு முடிவு
21 Jun 2025புதுடெல்லி, நேபாளம் மற்றும் இலங்கை அரசாங்கங்களின் வேண்டுகோளின் பேரில் அந்நாடுகளின் குடிமக்களை ஈரானில் இருந்து வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று இந்தியா தெரிவி
-
போர் பதற்றம் சூழ்ந்த ஈரானிலிருந்து இந்தியர்கள் 1000 பேரை அழைத்து வர ஏற்பாடு
21 Jun 2025புதுடெல்லி : போர் பதற்றம் சூழ்ந்த ஈரானிலிருந்து மேலும் 1000 இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
இந்தியா - பாக். போரை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் கிடைக்காது: ட்ரம்ப் ஆதங்கம்
21 Jun 2025வாஷிங்டன் : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
21 Jun 2025மேட்டூர் : கர்நாடக மாநிலத்தில் காவிரியில் நீர் பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் மழை பெய்து வருகிறது.
-
திருப்பதியில் வார விடுமுறையை முன்னிட்டு அலைமோதும் கூட்டம்
21 Jun 2025திருப்பதி : திருப்பதியில் வார விடுமுறையை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அலைமோதுவதால் தரிசனம் நேரம் 24 மணி நேரமாக அதிகரித்துள்ளது.