எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : மீண்டும் ஐ.பி.எல். தொடங்கியுள்ள நிலையில், பிளே ஆப் சுற்றில் விளையாடப்போகும் அணி எது என்பது குறித்த அலசல்கள் அதிகரித்துள்ளன.
மீண்டும் ஐ.பி.எல்....
ரசிகர்களை மகிழ்வித்து வந்த 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த தொடர் இந்தியா - பாகிஸ்தான் ஏற்பட்ட போர்ப்பதற்றம் காரணமாக ஒரு வார காலம் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது இந்தியா- பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்த நிலையில் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நேற்று மீண்டும் தொடங்கியது.
கடும் போட்டி...
நடப்பு தொடரில் இதுவரை எந்த அணியும் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெறவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. 4 பிளே-ஆப் இடங்களுக்கு 7 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதன்படி பிளே-ஆப் சுற்றை எட்டுவதற்கு வாய்ப்புள்ள அணிகள் எவை என்பதை பார்க்கலாம்.!
1. குஜராத் டைட்டன்ஸ்:
இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 16 புள்ளிகள் பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மீதமுள்ள 3 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றாலே குஜராத் எளிதாக பிளே ஆப் சுற்றை எட்டிவிடும். 3 போட்டிகளிலும் தோல்வியடைந்தால் கூட மற்ற அணிகளின் முடிவுகள் சாதகமாக அமைந்தால் அந்த அணிக்கு வாய்ப்பு உண்டு.
2. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
குஜராத் அணி போலவே 16 புள்ளிகள் பெற்றுள்ள பெங்களூரு அணி ரன் ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 3 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றாலே அந்த அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்து விடும். 3 போட்டிகளிலும் தோல்வியடைந்தாலும் அந்த அணிக்கு வாய்ப்புள்ளது. அதற்கு மற்ற அணிகளின் முடிவு அதற்கு சாதகமாக அமைய வேண்டும்.
3. பஞ்சாப் கிங்ஸ்:
11 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி மற்றும் மழையால் ஒரு போட்டி ரத்தான நிலையில் 15 புள்ளிகள் பெற்றுள்ள பஞ்சாப் 3-வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 3 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடும். மாறாக ஒன்றில் வெற்றி பெற்றாலே அந்த அணி ஏறக்குறைய பிளே ஆப் சுற்று வாய்ப்பை எட்டிவிட வாய்ப்புள்ளது. மாறாக 3 போட்டிகளிலும் தோல்வியடைந்தால் வெளியேற நேரிடும்.
4. மும்பை இந்தியன்ஸ்:
12 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி கண்டுள்ள மும்பை அணி 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றை உறுதி செய்து விடும். மாறாக ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். அந்த அணியின் ரன் ரேட் (+1.156) வலுவானதாக இருப்பது கூடுதல் அம்சமாகும். இருப்பினும் 2 போட்டிகளிலும் தோல்வியடைந்த அந்த அணி லீக் சுற்றோடு வெளியேற வேண்டியதுதான்.
5. டெல்லி கேப்பிடல்ஸ்:
11 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் 13 புள்ளிகளுடன் (ஒரு போட்டி மழையால் ரத்து) 5-வது இடத்தில் உள்ளது. எஞ்சிய 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் எந்த வித சிக்கலுமின்றி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். மாறாக 2-ல் மட்டும் வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டி இருக்கும்.
6. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி 12 போட்டிகளில் விளையாடி 11 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது. மீதமுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் அந்த அணியால் 15 புள்ளிகள் மட்டுமே பெற முடியும். அப்போதும் மற்ற அணிகளின் முடிவுக்காக கொல்கத்தா காத்திருக்க வேண்டியிருக்கும். இதனால் கொல்கத்தா அணியின் பிளே-ஆப் வாய்ப்பு ஏறக்குறைய மங்கிவிட்டது.
7. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்:-
11 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 6 தோல்வி கண்டுள்ள லக்னோ அணி 10 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்று வாய்ப்பை நினைத்து பார்க்க முடியும். அப்போதும் மற்ற அணிகளின் முடிவு லக்னோவுக்கு சாதகமாக அமைய வேண்டும். அத்துடன் ரன் ரேட்டையும் லக்னோ வலுப்படுத்த வேண்டும். இப்படி எல்லா சூழ்நிலைகளும் அந்த அணிக்கு சாதகமாக அமைந்தால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். இல்லையெனில் வெளியேற வேண்டியதுதான். இதனால் எதிர்வரும் போட்டிகள் அனைத்தும் மிக முக்கியமான போட்டிகளாக கருதப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 5 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
சென்னை சட்டம் - ஒழுங்கு தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுடன் காவல் ஆணையர் ஆலோசனை
17 May 2025சென்னை : சென்னையில் சட்டம் - ஒழுங்கு நிலை தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுடன் காவல் ஆணையர் அருண் ஆலோசனை மேற்கொண்டார்.
-
ஏமன் துறைமுகங்கள் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்
17 May 2025சனா, ஏமன் துறைமுகங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
-
அரபிக்கடல் பகுதியில் மே 22ல் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி
17 May 2025சென்னை, அரபிக்கடல் பகுதியில் வரும் 22 ம் தேதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது.
-
இந்திய தாக்குதலை முதன்முறையாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் பிரதமர்
17 May 2025இஸ்லாமாபாத், ஆபரேஷன் சிந்தூரின்போது தங்கள் நாட்டின் முக்கிய விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது பற்றி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முதன்முறையாக வெள
-
பள்ளி புத்தகம் கொண்டு வரவேண்டாம்: மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த கேரளா அரசு
17 May 2025கேரளா : கேரளாவில் முதல் 2 வாரங்களுக்கு மாணவர்கள் புத்தகங்கள் கொண்டு செல்ல தேவையில்லை என்று அந்த மாநில அரசு அறிவிததுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-05-2025
17 May 2025 -
தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் 1.8 லட்சத்தை தாண்டிய மாணவர் சேர்க்கை
17 May 2025சென்னை, அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை 1.8 லட்சத்தை தாண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
காங்கிரஸ் பரிந்துரை நிராகரிப்பு: சசி தரூரை தேர்வு செய்த மத்திய அரசு
17 May 2025புதுடெல்லி, பாகிஸ்தான் மோதல் தொடர்பாக வெளிநாட்டு அரசுகளுக்கு விளக்கமளிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கு காங்கிரஸ் பரிந்துரைத்த 4 எம்.பி.களைத் தவிர்த்து, மத்திய அரசு சசி
-
இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட்
17 May 2025ஸ்ரீஹரிகோட்டா, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பூமி கண்காணிப்புக்காக 1,696.24 கிலோ எடை கொண்ட இ.ஒ.எஸ்-09 என்ற செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது.
-
நாட்டின் பிரதிநிதியாக குழுவை வழிநடத்துவதில் பெருமை : தி.மு.க. எம்.பி. கனிமொழி
17 May 2025சென்னை : நாட்டின் பிரதிநிதயாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குழுவை வழிநடத்துவதில் பெருமை என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
-
வாகாவில் பறக்க விடப்பட்டுள்ள புதிய இந்திய தேசிய கொடி
17 May 2025சண்டிகர் : வாகாவில் பறக்க விடப்பட்டுள்ள புதிய இந்திய தேசிய கொடி பறக்கவிடப்பட்டது.
-
காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வழிபாடு
17 May 2025காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று (மே 17) நடைபெற்றது.
-
பேருந்தில் இருந்து முதியவரை இறக்கி விட்டு தாக்கிய ஓட்டுநர் - நடத்துநர் பணியிடை நீக்கம்
17 May 2025சென்னை : சென்னை மாநகர பேருந்தில் இருந்து முதியவரை இறக்கி விட்டு தாக்கிய ஓட்டுநர், நடத்துநர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு
-
காஸாவில் 2 நாட்களில் மட்டும் 300 பேர் பலி
17 May 2025காஸா : காஸாவில் ஹமாஸ் படையினரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களில் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
-
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆகஸ்ட் மாத டிக்கெட் வெளியீடு
17 May 2025திருமலை : திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆகஸ்ட் மாதம் டிக்கெட் வெளியீடு செய்யப்பட்டது.
-
பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் வாழ்த்து
17 May 2025சென்னை, ரொமேனியாவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் சூப்பர்பெட் செஸ் கிளாசிக் 2025 பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “
-
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: தமிழகத்துக்கு நீர்வரத்து அதிகரிப்பு
17 May 2025பெங்களூரு, கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
17 May 2025சேலம் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டு மெல்ல உயரத் தொடங்கியது.
-
ஜூன் 14-ல் வி.சி.க. பேரணி
17 May 2025திருச்சி : திருச்சியில் வி.சி.க. சார்பில் மதச்சார்பின்மை காப்போம் பேரணி வருகிற 14-ம் தேதி நடைபெறுகிறது.
-
ஒடிசாவில் மின்னல் தாக்கி 9 பேர் பலி
17 May 2025புவனேஸ்வர் : ஒடிசாவில் மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
இமயமலையேற்றத்தின்போது இந்தியர் மயங்கி விழுந்து பலி
17 May 2025காத்மண்டு : இமயமலையேற்றத்தின்போது இந்தியர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
-
இங்கிலாந்தில் ராணுவ தளத்தில் பயங்கர தீ விபத்து: 3 பேர் பலி
17 May 2025லண்டன் : இங்கிலாந்தில் ராணுவ தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: 9 பேர் பலி
17 May 2025ரஷ்யா : உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
8 மாதங்களில் 42 கி. எடையை குறைத்த நடிகர் அஜித்குமார்
17 May 2025சென்னை : நடிகர் அஜித்குமார் 8 மாதங்களில் 42 கிலோ எடையைக் குறைத்துள்ளார்.
-
மாணவர்களின் மொழித்திறன்களை மேம்படுத்த 'லெவல் அப்' திட்டம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
17 May 2025சென்னை, மாணவர்களின் கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகியவற்றின் அடிப்படைத் திறன்களை மேம்படுத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.