எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழகத்தில் 3-வது அணி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறினார்.
மாநிலங்களவை எம்.பியாக பொறுப்பேற்க உள்ள கமல்ஹாசனை வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஆகஸ்ட் மாதம் தனது பிறந்தநாள் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவும் கமல்ஹாசனுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது:- தி.மு.க. தலைமையில் கூட்டணி வலுவாக உள்ளது. தி.மு.க.வை எதிர்ப்பவர்கள் இன்னும் ஒரு கூட்டணி வடிவத்தையே பெறவில்லை. அதி.மு.க.வும், பாஜகவும் இன்னும் முரன்பாடாக தான் பேசிக்கொண்டிருக்கின்றனர். மற்ற கட்சிகள் எந்த கூட்டணியிலும் சேரவில்லை; கூட்டணியை உருவாக்குகிற முயற்சியிலும் ஈடுபடவில்லை.
தி.மு.க.வை எதிர்க்கக்கூடிய சக்திகள் சிதறி கிடக்கிறார்கள். முதல்-அமைச்சர் சொல்வது போல ஓரணியில் தமிழ்நாடு என்ற அடிப்படையில் தி.மு.க. கூட்டணி வலுப்பெற்று வருகிறது. தி.மு.க. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். ஒரு கட்சி நெருக்கடிகளை சந்தித்து தான் வளர்ச்சி பெற முடியும்.
தமிழகத்தில் 3-வது அணி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மத்தியிலும், மாநிலத்திலும் 3-வது அணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தியதில்லை. 3-வது அணி உருவாக்கப்பட்டிருந்தாலும் அது வெற்றி பெறவில்லை. 2026 தேர்தல் இரு துருவ போட்டியாகதான் இருக்கும். வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணியா? அதி.மு.க. கூட்டணியா? என்பதே மக்களின் மனநிலையாக உள்ளது. தி.மு.க., அதி.மு.க.வை தாண்டி ஏற்படும் எந்த கூட்டணியும் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


