எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை: த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு குறித்து சுமார் 50 கேள்விகளை காவல்துறையினர் எழுப்பியுள்ளனர்.
தமிழக வெற்றிக்கழகத்தை கடந்த ஆண்டு விஜய் தொடங்கினார். அந்த கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடந்தது. தொடர்ந்து த.வெ.க.வின் 2-வது மாநில மாநாட்டை, மறைந்த தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்தின் பிறந்த நாளான ஆகஸ்டு 25-ந்தேதியன்று மதுரையில் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.
இதையொட்டி மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே உள்ள பாரபத்தி பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. மாநாட்டு திடல் 506 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. பிரமாண்டமாக மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும் மாநாட்டுக்கு அனுமதியும், பாதுகாப்பும் கேட்டும், மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்திடம் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மனு அளித்தார்.
இந்த நிலையில், போக்குவரத்து சிக்கல்கள், விஜய் பயணிக்கும் வழிகள் என்ன?, மாநாட்டு இடத்தை தொண்டர்கள் அணுகுவது எவ்வாறு?, யார் தலைமையில் மாநாடு நடைபெறுகிறது? எத்தனை தொண்டர்கள் பங்கேற்கிறார்கள்? என்பன உள்ளிட்ட சுமார் 50 கேள்விகளை காவல்துறையினர் எழுப்பியுள்ளனர். இந்த கேள்விகளுக்கு அளிக்கப்படும் பதில்களின் அடிப்படையில் மாநாட்டிற்கு அனுமதி வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


