முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிசோரமில் ரூ.3 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்

வியாழக்கிழமை, 24 ஜூலை 2025      உலகம்

அய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பும், அசாம் ரைபிள்ஸ் படையினரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில், 3 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. போதை மாத்திரைகள் வைத்திருந்த மியான்மர் நாட்டவர் கைது செய்யப்பட்டார்.

உளவுத்துறை தகவலின் அடிப்படையில், மியான்மர் எல்லைக்கு அருகிலுள்ள சோட் கிராமத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது மிசோரமின் கிழக்கு சாம்பாய் மாவட்டத்திலும் தேடுதல் வேட்டை நடந்தது. இதில், ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்ததில் அவரிடம் இருந்து ரூ.3 கோடிக்கும் மேல் மதிப்புள்ள 1.11 கிலோ மெத்தம் பெட்டமைன் போதை மாத்திரைகள் பதுக்கி வைத்திருந்த தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரிடம் இருந்து மெத்தம் பெட்டமைன் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த நபர் மியான்மர் நாட்டவர் என்று அறியப்பட்ட நிலையில், அவரையும், போதைப்பொருட்களும் உள்ளூர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து