முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திடீர் வெள்ளம், நிலச்சரிவு: தென் கொரியாவில் பலி 23 ஆக உயர்வு

வியாழக்கிழமை, 24 ஜூலை 2025      உலகம்
Suicide 2023 04 29

Source: provided

தென்கொரியா:தென் கொரியா நாட்டில், கடந்த வாரம் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால், பலியானோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தென் கொரியாவின், பல்வேறு இடங்களில் கடந்த ஜூலை 16 முதல் ஜூலை 20 ஆம் தேதி வரை தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால், அந்நாட்டின் முக்கிய மாகாணங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமானோர் மாயமானதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சான்சியோங் மாகாணத்தில் மாயமான 3 பேர் மற்றும் காபியோங் மாகாணத்தில் மாயமான ஒருவர் என மொத்தம் 4 பேரது உடல்கள், தற்போது மீட்கப்பட்டுள்ளன. 

இதன்மூலம், மாயமானதாகக் கருதப்பட்ட 9 பேரில், மீதமுள்ள 5 பேரை தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மோப்ப நாய்கள், அதிநவீன இயந்திரங்கள் ஆகிய பயன்படுத்தி இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை அந்நாட்டு மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். இத்துடன், தென் கொரியாவை புரட்டியெடுத்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 21-க்கும் மேற்பட்டோர் பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து