எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மான்செஸ்டர்: மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் பாதத்தில் அடி வாங்கிய ரிஷப் பந்த் எலும்பு முறிவு காரணமாக இந்தத் தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்திய அணிக்கு இது ஒரு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
எலும்பு முறிவு...
கடந்த டெஸ்ட்டில் கையில் அடிபட்டு ஆட முடியாமல் ரிஷப் பந்த் தவித்தார். இந்த டெஸ்ட் போட்டியில் கிறிஸ் வோக்ஸ் வீசிய ஃபுல் பந்தை ரிவர்ஸ் ஷாட் ஆடும் முனைப்புடன் வலது பாதத்தில் சரியான அடி வாங்கி ரத்தம் கொட்டியதோடு கால் உடனேயே பெரிய வீக்கம் கண்டது. இந்நிலையில், ஸ்கேன் எடுத்தபோது எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவர, இந்தத் தொடரில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கேப்டன்கள் கோபம்...
இங்கு தான் தோனி போன்ற கேப்டன்கள் கடும் கோபத்துக்கு ஆளாவார்கள். ஏனெனில், காயமடைந்தால் நிச்சயம் பதிலி வீரர் அவரை அத்தனை விதத்திலும் இடமாற்றம் செய்ய முடியாது என்பதுதான் கிரிக்கெட்டின் வரலாற்று உண்மை. ரிஷப் பந்த் உண்மையில் நன்றாக ஆடிவந்தார். பொறுமையுடன் பொறுப்பாக ஆடினார். திடீரென அவர் மனதுக்குள் பூதம் புகுந்து விடுகிறது ஒன்று ரேம்ப் ஷாட் ஆடுகிறேன் என்று கீழே விழுகிறார், இல்லையெனில் ஸ்லாக் ஸ்வீப் ஆடுகிறேன் என்று ஆடுகிறார். ரிவர்ஸ் ஷாட் ஆடி ஏற்கெனவே ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் பீட்டன் ஆகியிருந்தார்.
பொறுப்புணர்வு...
அங்குதான் ஈகோவை விட வேண்டும். இன்றைக்கு மாட்டவில்லை என்றால், அந்த ஷாட்டுடன் மோதிக் கொண்டிருக்கக் கூடாது, எப்படியும் ஆடியே தீருவேன், அந்த ஷாட்டை கனெக்ட் செய்தே தீருவேன் என்று ஒருவித ஈகோ வந்து விட்டது ரிஷப் பந்த்துக்கு, அதற்குக் கொடுத்தவிலை 2 டெஸ்ட் போட்டிகளில் ஆட முடியாத நிலை. ஏற்கெனவே ஏகப்பட்ட காயங்களினால் தவித்து வரும் இந்திய அணிக்கு நாமும் சுமையாக மாறக் கூடாது என்ற பொறுப்புணர்வு எந்த ஒரு வீரருக்கும் வேண்டும்.
ஈகோ பிரச்சினை...
அந்தப் பந்தை அப்படி ஆட வேண்டிய அவசியம், அந்தத் தருணத்தில் அது தேவைப்படாத ஒரு ஷாட், ஒன்றுமில்லாத ஒரு நேர் புல்டாஸில் மட்டையில் பட்டுப் பாதத்தைத் தாக்கியது. நேர்மறையான ஒரு ஷாட்டை ஆடியிருந்தால் அது பவுண்டரிக்குக் கூட சென்றிருக்கலாம். இதுதான் பிரச்சினை, அந்த ஷாட்டை ஆடியே தீருவேன், கனெக்ட் செய்தே ஆக வேண்டும் என்று முன் கூட்டியே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவது இப்படிப்பட்ட முடிவில் தான் கொண்டு விடும்.
இஷான் கிஷன்...
இதனால் அவரது சொந்த கரியரும் பாதிக்கப்படுவதோடு, இந்திய அணியையும் கைவிட்டு விட்டார் ரிஷப் பந்த். சிந்திக்காமல் செய்த தவற்றினால் அவர் இப்போது 7-8 வாரங்களுக்கு கிரிக்கெட் ஆட முடியாது. இத்தனைக்கும் இந்திய அணியின் வைஸ் கேப்டன் ரிஷப் பந்த். அவருக்கு இன்னும் கூடுதல் பொறுப்புணர்வு தேவை என்பதே இந்தக் காயம் காட்டும் உண்மை. இப்போது, ஒருவேளை இஷான் கிஷன் மாற்று வீரராக தேர்வு செய்யப்படலாம் என்று தெரிகிறது.
பி.சி.சி.ஐ. அறிக்கை...
முன்னதாக. ரிஷப் பண்டின் காயம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) வெளியிட்டிருந்த அறிவிப்பில், ரிஷப் பண்ட், போட்டியின் மீதமுள்ள நாட்களில் விக்கெட் கீப்பிங் பணிகளைச் செய்ய மாட்டார். துருவ் ஜூரெல் விக்கெட் கீப்பராகப் பொறுப்பேற்பார். காயம் இருந்தபோதிலும், ரிஷப் பண்ட் அணியுடன் இணைந்துள்ளார். மேலும் தேவைப்பட்டால் அவர் பேட்டிங் செய்வார்" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 4 weeks ago |
-
வீடு வீடாக சென்று பொதுமக்கள் பிரச்சினைகளை கேட்க வேண்டும்: நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு
25 Jul 2025சென்னை, நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் வீடு வீடாக சென்று மக்கள் பிரச்சினைகளை கேட்க வேண்டும் என்று விஜய் உத்தரவிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-07-2025.
25 Jul 2025 -
வைகோ, கமல்ஹாசனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
25 Jul 2025சென்னை, பதவிக்காலம் நிறைவுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாராட்டியும், புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள எம்.பி.,க்களை வாழ்த்தியும் தி.மு.க.
-
வைகோ தேர்தல் பிரச்சார அட்டவணை வெளியீடு
25 Jul 2025சென்னை : தமிழகத்தில் 8 இடங்களில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. அதற்கான பிரச்சார அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
-
போக்குவரத்து துறையில் 3,200 பணியிடங்களை நிரப்ப விரைவில் எழுத்துத்தேர்வு: அமைச்சர் சிவசங்கர்
25 Jul 2025கடலூர், போக்குவரத்து துறையில் 3,200 பணியிடங்களை நிரப்ப விரைவில் எழுத்துத்தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
-
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு: 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
25 Jul 2025ராமநாதபுரம், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
-
பார்லிமென்டை சுமூகமாக நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு
25 Jul 2025புதுடில்லி, சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில், பார்லிமென்டை சமூகமாக நடத்த ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது.
-
புதிய பிரசாரத்தை தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி
25 Jul 2025புதுக்கோட்டை, 'உருட்டுகளும் திருட்டுகளும்' என்ற பெயரில் புதிய பிரசார முன்னெடுப்பை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
-
தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
25 Jul 2025சென்னை, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
-
மாலத்தீவு அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு
25 Jul 2025மாலே, 2 நாட்கள் பயணமாக மாலத்தீவு சென்ற பிரதமர் மோடி அதிபர் மொய்சுவை சந்தித்து பேசினார்.
-
ட்ரோனில் இருந்து ஏவுகணையை ஏவி சோதனை: இந்தியா சாதனை
25 Jul 2025புதுடில்லி, ட்ரோனில் இருந்து ஏவுகணையை ஏவி சோதனை செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது.
-
சமோவா நாட்டில் பயங்கர நிலநடுக்கம்
25 Jul 2025ஆப்பியா : தென்பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள சமோவா நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
தாய்லாந்து - கம்போடியா மோதல்: முகாம்களில் 1,38,000 மக்கள் தஞ்சம்
25 Jul 2025சுரின் : தாய்லாந்து - கம்போடியா மோதலால் ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து முகாம்களில் 1,38,000 மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
-
பிரதமர் மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயண செலவு ரூ.295 கோடி
25 Jul 2025புதுடெல்லி : பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு 4 ஆண்டுகளில் ரூ.295 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
5-வது நாளாக சிகிச்சையில் இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலையில் முன்னேற்றம்
25 Jul 2025சென்னை : ஆஞ்சியோ சிகிச்சைக்கு பிறகு 5-வது நாளாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல வெளியாகி
-
இலவசங்கள் அறிவிப்புக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
25 Jul 2025புதுடெல்லி : இலவசங்கள் அறிவிப்புக்கு எதிரான மனு தள்ளுபடியை சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
காட்டுப் பன்றிகள் சுட்டு பிடிக்கப்படும்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்
25 Jul 2025திருநெல்வேலி, விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் காட்டுப் பன்றிகள் சுட்டுப் பிடிக்கப்படும் என்று மாநில வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.
-
பீகாரில் 65.6 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம்: தேர்தல் ஆணையம்
25 Jul 2025புதுடில்லி : பீகாரில் 65.6 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கி இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
-
கோடீஸ்வரர் பட்டியலில் கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை
25 Jul 2025நியூயார்க் : கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை முன்னணி கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பிடித்தார்.
-
இங்கிலாந்து மன்னருடன் பிரதமர் மோடி சந்திப்பு
25 Jul 2025டெல்லி : இங்கிலாந்து மன்னருடன் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
-
இந்தியாவின் கருத்துக்கு உறுதியான பங்களிப்பாளராக வருகிறேன்: கமல்
25 Jul 2025புதுடில்லி, நான் வெறும் விமர்சகனாக மட்டும் பார்லிமென்ட் வரவில்லை; மாறாக இந்தியாவின் கருத்துக்கு உறுதியான பங்களிப்பாளராக வருகிறேன் என ராஜ்யசபா எம்.பி., கமல் தெரிவித்துள்
-
7 ராமேசுவரம் மீனவர்கள் காவல் மீண்டும் நீட்டிப்பு
25 Jul 2025ராமேசுவரம், ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 7 பேருக்கு இலங்கை நீதிமன்றம் இரண்டாவது முறையாக காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது.
-
தேசிய கல்வி கொள்கை குறித்து பார்லி.யில் மத்திய அரசு விளக்கம்
25 Jul 2025புதுடெல்லி, கல்வியின் மீதான மாநில உரிமைகளை பறிப்பதற்கு தேசிய கல்விக்கொள்கை உருவாக்கப்படவில்லை என்று பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது
-
புதுச்சேரியில் 3 சனிக்கிழமைகளில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்
25 Jul 2025புதுச்சேரி : புதுச்சேரி பள்ளிகள் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 3 சனிக்கிழமைகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பிலிப்பைன்ஸ்: புயலில் சிக்கி 25 பேர் பலி
25 Jul 2025மணிலா, பிலிப்பைன்ஸ் புயலில் 25 பேர் பலியாகி உள்ளனர்.