எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : முன்னாள் குடியரசு தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போல் உயர வேண்டும் என விரும்பி சி.பி.ஆருக்கு அவரது பெற்றோர் பெயர் வைத்துள்ளனர். இதை நிறைவேற்றும் வகையில் அவர் நாட்டின் குடியரசு துணைத் தலைவராக உள்ளார்.
துணை குடியரசு தலைவராக ஜெக்தீப் தன்கர் தன் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதையடுத்து அப்பதவிக்கானத் தேர்தலில் தன் புதிய வேட்பாளரை தேர்வு செய்ய பாஜக ஆலோசித்தது. இதற்கான பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டம், டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவரது பெயரை அதிகாரபூர்வமாக பாஜகவின் தேசியத் தலைவரான ஜே.பி.நட்டா அறிவித்தார். பிரதமராக நரேந்திர மோடி அமர்ந்தது முதல் பாஜகவின் பெரும்பான எதிர்கால நடவடிக்கைகளை ஊடகங்களால் கணிக்க முடிவதில்லை. இந்தநிலையை மீண்டும் நிரூபிக்கும் வகையில் துணை குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வாகி உள்ளார்.
சி.பி.ஆர். என சுருக்கமாக அழைக்கப்படுபவரின் முமுப்பெயர் சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன். இவர், திருப்பூரில் அக்டோபர் 20, 1957-ல் பிறந்தவர். அப்போது 1952 முதல் இந்தியாவின் முதல் குடியரசு துணைத் தலைவராக சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் இருந்தார். இவரது நினைவால் சிபிஆரின் பெற்றோர்களான சி.கே.பொன்னுசாமி மற்றும் கே.ஜானகி அவருக்கு ராதாகிருஷ்ணன் எனப் பெயர் வைத்துள்ளனர்.
பிறகு 1962-ல் நாட்டின் இரண்டாவது குடியரசு தலைவராகவும் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் உயர்ந்தார். எனவே, சிபிஆரின் பெற்றோர்கள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் போல் அவர் உயர வேண்டும் என எண்ணி பெயர் வைத்துள்ளனர்.
இந்த நோக்கம் குடியரசு துணைத் தலைவராக அவர் தற்போது அமர இருப்பதால் நிறைவேறியதாகக் கருதப்படுகிறது. தமிழகத்தின் கொங்கு வேளாளர் சமூகத்தை சேர்ந்த சி.பி.ஆர்., தனது 16 வயதில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்தார்.
இத்துடன் அதன் தோழமை அரசியல் கட்சியாக இருந்த பாரதிய ஜனசங்கத்திலும் சி.பி.ஆர். இணைந்திருந்தார். தூத்துக்குடியின் வ.உ.சிதம்பரனார் கல்லூரியில் பிபிஏ பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றார்.
கல்லூரிக் காலத்தில் டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரராக இருந்த சி.பி.ஆர்., நீண்டதூர ஓட்டம், கைப்பந்து மற்றும் கிரிக்கெட்டிலும் இடம் பெற்றிருந்தார். சிபிஆருக்கு மனைவி ஆர்.சுமதி மற்றும் 2 பிள்ளைகளும் உள்ளனர்.
தமிழக அரசியலில் சி.பி.ஆர். காட்டிய தீவிரத்திற்கு 1974 முதல் பலன் கிடைக்கத் துவங்கியது. அந்த ஆண்டில் அவர் பாரதிய ஜன சங்கத்தின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினரானார்.
பாரதிய ஜன சங்கம் பின்னாளில் பாஜகவாக மாறிய பின்பும் சிபிஆரின் முக்கியத்துவம் அக்கட்சியில் தொடர்ந்தது. 2004 முதல் 2006 ஆம் ஆண்டு வரை அவர் பாஜகவின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்தார்.
அப்போது அவர் நதிகள் இணைப்பு, தீண்டாமை மற்றும் தீவிரவாதம் ஒழிப்பை தமிழகத்தில் வலியுறுத்தி 18,000 கி.மீ தூரம் 93 நாட்கள் ரத யாத்திரை நடத்தினார். இத்துடன், சிபிஆரும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி உருவாக முக்கிய பங்காற்றி இருந்தார். இதன் பலனாக, 1998 மக்களவை தேர்தலில் பாஜகவின் கோயம்புத்தூர் எம்பியானார் சி.பி.ஆர்.. அப்போது பாஜகவில் வென்ற 3 எம்பிக்களில் ஒருவராக சி.பி.ஆர். இருந்தார்.
பிறகு மீண்டும் 1999 மக்களவை தேர்தலிலும் சிபிஆருக்கு தொடர்ந்து இரண்டாவது முறை எம்பியாகும் வாய்ப்பு கிடைத்தது. 2012-ல் ஆர்எஸ்எஸ் நிர்வாகியை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க சி.பி.ஆர். ஆர்பாட்டம் நடத்தி மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் கைதானார்.
இந்த நிகழ்வு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் இடையே பரபரப்பாகப் பேசப்பட்டது. அடுத்து 2014 மக்களவை தேர்தலில் கோயம்புத்தூர் பாஜக வேட்பாளரானவர், இரண்டாவது நிலைக்கு தள்ளப்பட்டார்.
அந்த தேர்தலில் தமிழகத்தின் பாஜக வேட்பாளர்களை விட சிபிஆருக்கு அதிகமான வாக்குகளாக 3,89,000 வாக்குகள் கிடைத்தன. அடுத்து 2019 மக்களவை தேர்தலில் சிபிஎம் வேட்பாளரை சிபிஆரால் வெல்ல முடியவில்லை.
பிறகு பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் சிபிஆருக்கு சிறு, குறு மத்திய தொழில் துறை அமைச்சகத்தின் சார்பில் இந்திய நார் வாரிய தலைவர் பொறுப்பு 2016 முதல் 2020 வரை கிடைத்தது. இவரது ஆதரவாளர்கள் சிபிஆரை, ‘தமிழகத்தின் மோடி’ எனவும் அழைப்பது உண்டு.
இதையடுத்து மேலும் உயர்வு பெற்ற சி.பி.ஆர்., பிப்ரவரி 12, 2023-ல் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அப்போது அவர் தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் பொறுப்பு ஆளுநராகும் வாய்ப்பும் கிடைத்தது.
தனது அரசியல் அனுபவத்தில் சி.பி.ஆர். பல வெளிநாடுகளுக்கும் பயணித்துள்ளார். இதில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுக்கல், நார்வே, டென்மார்க், சிங்கப்பூர், தைவான், தாய்லாந்து, எகிப்து, அரபு நாடுகள், ஸ்வீடன், பின்லாந்து, பெல்ஜியம், ஹாலாந்து, துருக்கி, சீனா, மலேசியா, பங்களாதேஷ், இந்தோனேசியா மற்றும் ஜப்பான் ஆகியன இடம்பெற்றுள்ளன. ஜார்கண்டிலிருந்து மிகவும் முக்கியமான மாநிலமான மகாராஷ்டிராவின் ஆளுநராக சி.பி.ஆர். மாற்றலானார். இப்பதவியில் தொடர்ந்தவருக்கு நேற்று நாட்டின் 15-வது குடியரசு துணைத் தலைவராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
குடியரசு துணைத் தலைவர் பதவி வகிக்கும் மூன்றாவது தமிழர் சி.பி.ஆர். இவருக்கு முன்பாக தமிழர்களாக சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனுடன் ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 3 weeks ago |
-
திருமாவளவனுக்கு முதல்வர் வாழ்த்து
17 Aug 2025சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நேற்று தனது 63-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
-
தமிழக வளர்ச்சியில் பொறாமை கொண்டு இழிவான அரசியல் கவர்னர் மீது முதல்வர் மு.க. ஸ்டாலின் தாக்கு
17 Aug 2025தருமபுரி: தமிழக வளர்ச்சியில் பொறாமை கொண்டு இழிவான அரசியல் செய்கிறார் கவர்னர் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
த.வெ.க. 2-வது மாநில மாநாடு: பாரபத்தியில் குடிநீர் மேலாண்மைக்குழு அமைப்பு
17 Aug 2025மதுரை: தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாட்டையொட்டி மதுரை பாரபத்தியில் குடிநீர் மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
-
ஜம்மு - காஷ்மீர் மக்களுடன் துணை நிற்கிறோம்: அமித்ஷா
17 Aug 2025புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் ஏற்பட்ட மேக வெடிப்பால் ஜோத் காட்டியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.
-
கொளத்தூரில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்களா? வதந்தியை பரப்பாதீர்கள் அரசு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்
17 Aug 2025சென்னை: கொளத்தூரில் ஒரே வீட்டில் 30 வாக்காளர்களா? வதந்தியை பரப்பாதீர்கள் என்று அரசு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
-
பிரபல யூடியூபர் வீட்டில் துப்பாக்கி சூடு
17 Aug 2025சண்டிகர்: அரியானாவின் குருகிராமை சேர்ந்த பிரபல யூடியூபர் எல்விஷ் யாதவ் வீட்டில் நேற்று அதிகாலை துப்பாக்கி சூடு நடைபெற்றது.
-
சிலேசியா டைமண்ட் லீக் தடகள போட்டி கிஷானே தாம்சன் தங்கம் வென்றார்
17 Aug 2025பேகா ஓபன் ஸ்குவாஷ் போட்டி: இந்திய வீராங்கனை அனாஹத் சிங் இறுதிப்போட்டிக்கு தகுதி
-
மாற்று வீரருக்கு அனுமதி அளித்த இந்திய கிரிக்கெட் போர்டு
17 Aug 2025ஆமதாபாத்: உள்ளூர் போட்டிகளில் கடும் காயம் அடைந்தவருக்கு பதிலாக மாற்று வீரரை களமிறக்க பி.சி.சி.ஐ., அனுமதித்துள்ளது.
-
அமித்ஷா எத்தனை முறை தமிழகத்திற்கு வந்தாலும் எங்களுக்கு அச்சமில்லை அமைச்சர் ரகுபதி பேட்டி
17 Aug 2025சென்னை: அமித்ஷா எத்தனை முறை தமிழகத்திற்கு வந்தாலும் எங்களுக்கு அச்சமில்லை என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
ஆசிய கோப்பை தொடர் ஹர்பஜன் சிங் அணியில் சஞ்சு சாம்சனுக்கு இடம் இல்லை
17 Aug 2025மும்பை: ஆசிய கோப்பை தொடரில் ஹர்பஜன் சிங் அணியில் சஞ்சு சாம்சனுக்கு இடம் இல்லை.
-
சீமை கருவேல மரங்கள் அகற்றும் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐகோர்ட் நீதபதிகள் எச்சரிக்கை
17 Aug 2025சென்னை: சீமை கருவேல மரங்கள் அகற்றும் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று ஐகோர்ட் நீதபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
தீபாவளி பண்டிகை எதிரொலி: 10 நிமிடங்களிலேயே முடிந்த ரயில் டிக்கெட் முன்பதிவு
17 Aug 2025சென்னை: தீபாவாளி நாளான அக்டோபர் 26-ம் தேதிக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களிலேயே முடிந்தது.
-
நாட்டின் நிலை எமர்ஜென்சியை விட மிகவும் மோசமாக உள்ளது லல்லு பிரசாத் யாதவ் குற்றச்சாட்டு
17 Aug 2025பாட்னா: நாட்டில் நிலவும் சூழ்நிலைக்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம் என்று லல்லு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பும்ரா விளையாட வாய்ப்பு
17 Aug 2025மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விளையாட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
இந்திய அணிக்கு தன்னால் மீண்டும் தேர்வாக முடியும் - புஜாரா நம்பிக்கை
17 Aug 2025புதுடெல்லி: இந்திய அணிக்கு தன்னால் மீண்டும் தேர்வாக முடியும் என்று கிரிக்கெட் வீரர் புஜாரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
டெவால்ட் பிரேவிஸ் விவிகாரம் அஸ்வின் விளக்கம்
17 Aug 2025சென்னை: டெவால்ட் பிரேவிஸ் விவிகாரம் குறித்து அஸ்வின் விளக்கமளித்துள்ளார்.
-
டி-20 தொடரை வென்றது ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த மேக்ஸ்வெல்
17 Aug 2025கெய்ன்ஸ்: மேக்ஸ்வெல்லின் அதிரடியால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அ
-
ஆசியக் கோப்பை தொடர்: பாக்., அணியில் பாபர் அசாம், ரிஸ்வானுக்கு இடமில்லை
17 Aug 2025லாகூர்: ஆசியக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட நிலையில் அணியில் அசாம், ரிஸ்வானுக்கு இடமில்லை என்று பாக்.கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
-
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் ஆடி களப பூஜை நிறைவு
17 Aug 2025குமரி: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி மாதத்தில் 12 நாட்கள் களப பூஜை நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ஆடி களப பூஜை கடந்த 4-ந்தேதி தொடங்கியது.
-
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் கார்லஸ் அல்காரஸ்
17 Aug 2025சின்சினாட்டி: சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-08-2025.
18 Aug 2025 -
பேச்சுவார்த்தை ரத்து: இந்திய பயணத்தை தவிர்த்த அமெரிக்க குழு - அமலுக்கு வரும் 50 சதவீத வரி?
18 Aug 2025அமெரிக்கா : பேசசுவார்த்தை ரத்தானதை தொடர்ந்து இந்திய பயணத்தை அமெரிக்க குழு ரத்து செய்து 50 சதவீத வரியை அமலுக்கு வரும் என்று தெரிவித்தார்.
-
ஆக 29 ல் வெளியாகும் சமுத்திரக்கனியின் வீரவணக்கம்
18 Aug 2025பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் அனில் வி.நாகேந்திரன் முதன்முறையாக தமிழில் இயக்கி சமுத்திரக்கனி மற்றும் பரத் இணைந்து நடித்திருக்கும் படம் வீரவணக்கம்.
-
நடவடிக்கை எடுக்கப்படும்: எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு சபாநாயகர் கடும் எச்சரிக்கை
18 Aug 2025டெல்லி : பாராளுமன்றத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்க்கட்சி எம்.பி.களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
நிவின்பாலி - நயன்தாரா இணைந்து நடிக்கும் டியர் ஸ்டூடண்ட்ஸ்
18 Aug 2025நிவின்பாலி – நயன்தாரா ஜோடி மீண்டும் இணையும் இந்த படத்தை, அறிமுக இயக்குநர்கள் ஜார்ஜ் பிலிப் ராய் மற்றும் சந்தீப்குமார் எழுதி இயக்கியுள்ளனர்.