முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீமை கருவேல மரங்கள் அகற்றும் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐகோர்ட் நீதபதிகள் எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 17 ஆகஸ்ட் 2025      தமிழகம்
chennai-high-court 2022-08-29

Source: provided

சென்னை: சீமை கருவேல மரங்கள் அகற்றும் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று ஐகோர்ட் நீதபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

தமிழ்நாட்டில் சீமை கருவேல மரங்களை அகற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகம் முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை என குறிப்பிட்ட நீதிபதிகள், தற்போது வரை 713 கிராமங்களில் மட்டும் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைக்கு அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்ட கிராமங்கள், மாவட்டங்களின் விவரங்கள் இல்லாததால் தமிழக அரசின் அறிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த நீதிபதிகள், முறையாக அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு ஆகஸ்ட் 29-ந்தேதிக்கு வழக்கை தள்ளிவைத்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து