முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமித்ஷா எத்தனை முறை தமிழகத்திற்கு வந்தாலும் எங்களுக்கு அச்சமில்லை அமைச்சர் ரகுபதி பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 17 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Ragupathy 2024-12-21

Source: provided

சென்னை: அமித்ஷா எத்தனை முறை தமிழகத்திற்கு வந்தாலும் எங்களுக்கு அச்சமில்லை என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி நேற்று  செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது த.வெ.க. மாநாடு, அமித்ஷாவின் வருகை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

எந்த தாக்கத்தையும் யாராலும் ஏற்படுத்த முடியாது. தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியின் இரண்டாம் பாகம் தொடரும், மூன்றாம் பாகம் தொடரும். அது பொன்னியின் செல்வனைப் போல் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.

அமித்ஷாவால் தமிழகத்திற்கு வந்து எந்த வியூகத்தையும் வகுக்க முடியாது. தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்கவே அவர்கள் தடுமாறுகிறார்கள். எனவே அமித்ஷா எத்தனை முறை தமிழகத்திற்கு வந்தாலும் எங்களுக்கு அச்சமில்லை.போலி வாக்காளர்களை சேர்க்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.அசல் வாக்காளர்கள் தங்கள் அசல் வாக்குகளை செலுத்தினாலே போதும். எங்களுக்கு போலி வாக்காளர்கள் தேவையில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து