எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்த பிறகு, தமிழ்நாடு எல்லா வகையிலும் இன்றைக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, தொழில் வளர்ச்சியில், மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்று ஜெர்மனியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் வாழ்வதும், வளர்வதும் தமிழும் தமிழ் இனமுமாய் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜெர்மனியின் கொலோன் நகரில் நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு - ஜெர்மனி வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அதில் பேசிய அவர், “ பல்லாயிரம் கிலோ மீட்டர்களைக் கடந்து, வேறொரு நாட்டில் நீங்களும், நானும் சந்திக்கின்றபோது ஏற்படுகின்ற இந்த மகிழ்ச்சிதான், உண்மையான தமிழ்ப் பாசம். தமிழினப் பாசம் இது.
"உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும், தமிழன் இருப்பான. தமிழ்க் குரலைக் கேட்கலாம்" என்று சொல்கின்ற அளவுக்கு உலகெல்லாம் பரவி, தங்களுடைய அறிவால், உழைப்பால் உயர்ந்திருக்கின்ற இனம்தான், நம்முடைய தமிழினம். நம்முடைய இனத்திற்கான இதுதான் மிகப் பெரிய பெருமையாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
ஜெர்மனி நாட்டில் உங்கள் எல்லோரையும், அதுவும் உங்கள் ஒவ்வொருவரையும் சந்திக்கின்றபோது மகிழ்ச்சி. நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதிப்புமிக்க பொசிஷனில் இருப்பதை பார்க்கும்போது, தமிழ்நாட்டின் முதலமைச்சராக, திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவனாக மிகந்த மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமை அடைகிறேன்.
நம்முடைய திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்த பிறகு, தமிழ்நாடு எல்லா வகையிலும் இன்றைக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, தொழில் வளர்ச்சியில், மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய தமிழ்நாட்டு வளர்ச்சியைப் பற்றி நீங்கள் எல்லாம் செய்தித்தாள்களில் படித்திருப்பீர்கள் - சோஷியல் மீடியாக்களில் பார்த்திருப்பீர்கள். இங்கு இருக்கக்கூடிய உறவினர்கள், நண்பர்கள் மூலமாக கேள்வியும் பட்டிருப்பீர்கள்.
இந்த வளர்ச்சியை இன்னும் இன்னும் விரைவுப்படுத்த வேண்டும் என்று தான் முதலீட்டாளர்கள் மாநாடு, அதாவது முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு பயணம் ஆகியவற்றை நான் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன். யு.ஏ.இ., ஜப்பான், ஸ்பெயின், சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கெல்லாம் பயணத்தை மேற்கொண்டு ஏராளமான முதலீடுகளைத் தமிழ்நாட்டை நோக்கி ஈர்த்து, நம்முடைய மக்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம்.
இப்படி வெளிநாடுகளுக்கு வரும்போது, முதலில் எனக்குள் என்ன தோன்றுகிறது என்றால், இந்த நாட்டில் வாழுகின்ற நம்முடைய தமிழர்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்களுடைய வாழ்க்கைத்தரம் எந்தளவுக்கு உயர்ந்திருக்கிறது? பெரும் பாடுபட்டு தலைநிமிர்ந்த இந்த இனம், இந்த மண்ணில் சுயமரியாதையுடன் நடைபோடுவதை பார்க்கவேண்டும் என்று நான் நினைப்பேன்.
அதிலும் முக்கியமாக, ஒரு அயலக மண்ணில், நம்முடைய தமிழைக் கேட்கவேண்டும் என்ற ஆசை எனக்கு வந்துவிடும். எல்லோருக்கும் அப்படிதான். அதனால்தான், ஜெர்மனிக்கு வந்தவுடனே முதலில் உங்களை சந்திப்பதற்கு வந்துவிட்டேன். இப்போது உங்களுடைய ஆரவாரத்தை கேட்கும்போது மகிழ்ச்சியை பார்க்கும்போது, நொடியில் தமிழ்நாட்டிற்கு டிராவல் செய்த உணர்வு ஏற்படுகிறது. மனிதன் எங்கே சென்றாலும், அவனுடைய வேர் இருக்கின்ற தாய்நிலத்தை மறக்க மாட்டான்.
அப்படித்தான் உங்களுடைய நினைப்பும், எப்போதும் தமிழ்நாட்டின் மீதே இருக்கும். தமிழ்நாட்டில் இருக்கின்ற நாங்களும் உங்களை அன்போடு பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் நம்முடைய திராவிட மாடல் அரசில், அயலகத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
இந்த ஆண்டு மட்டும், இந்த அயலகத் தமிழர் நாள் விழாவுக்கு எத்தனை நாடுகளில் இருந்து நம்முடைய தமிழர்கள் சென்னைக்கு வந்திருந்தார்கள் தெரியுமா? 62 நாடுகளிலிருந்து வந்தார்கள். சொந்த மண்ணில் கால் வைத்தபோது அவர்கள் அடைந்த மகிழ்ச்சியைப் பார்த்து அதை நான் ரசித்தேன் – புலங்காகிதம் அடைந்தேன் – பூரிப்படைந்தேன்.
அடுத்து, அயலகத் தமிழர் நலவாரியம். அயலகத் தமிழர்களுக்கான டோல்-ஃப்ரீ ஹெல்ப்லைன், அதேபோன்று புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கு சுழல் நிதி, தமிழ்நாட்டுக்கு வெளியே வாழுகின்ற தமிழர்களுக்கு இன்ஷுரன்ஸ் என்று ஏராளமான திட்டங்களை செய்து கொண்டிருக்கிறோம். அதுமட்டுமல்ல, வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்று, எதிர்பாராதவிதமாக உயிரிழக்க நேரிடுகிறவர்களின் குடும்பத்திற்கு, நிதியுதவியும், பென்ஷனும் வழங்குகிறோம்.
இப்படி பார்த்து பார்த்து செய்து தருவதுடன், வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் ஓடோடி வந்து உதவுகிறோம். இதற்கு சில எடுத்துக்காட்டுகளை நான் சொல்ல விரும்புகிறேன். உக்ரைன் நாட்டில் இருந்து ஆயிரத்து 524 மாணவர்கள், சூடானில் இருந்து 253 பேர், இஸ்ரேலில் இருந்து 126 பேர், வங்கதேசத்தில் இருந்து 220 பேர், கம்போடியா - தாய்லாந்து - மியான்மர் ஆகிய நாடுகளிலிருந்து 119 பேரை மீட்டு வந்திருக்கிறோம்.
அதுமட்டுமல்ல, இன்னும் சில நெகிழ்ச்சியான சம்பவங்களையும் உங்களிடம் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். காஞ்சிபுரத்தை சேர்ந்த மனோஜ் என்பவர், அமெரிக்காவில் இருந்து சென்னை வரும்போது, அவருடைய குழந்தை சந்தியாவுக்கு நடுவானில் கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனே விமானத்தை, இஸ்தான்புல்லில் தரையிறக்கினார்கள். அந்தக் குழந்தையை மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்துக் கொண்டு வர 10 இலட்சம் ரூபாய் வழங்கினோம்.
மயிலாடுதுறையைச் சேர்ந்த முபாரக் அலி என்பவருக்கு தாய்லாந்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது 10 லட்சம் ரூபாய் செலவில், சென்னைக்கு அழைத்துக் கொண்டு வந்து சிகிச்சை அளித்தோம். குவைத் தீ விபத்தில் சிக்கிய 7 தமிழர்களுடைய உடலை மீட்டு ஒப்படைத்து, அந்த குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கினோம்.
இரண்டாம் உலகப் போரில் போர் கைதிகளாக இருந்து மறைந்த தமிழர் நினைவாக, தாய்லாந்தில் நடுகல் அமைக்க 10 லட்சம் ரூபாய் வழங்கியிருக்கிறோம். இதையெல்லாம் நான் குறிப்பிட்டு சொல்லக் காரணம்,
இப்போது நான் சொன்ன முன்னெடுப்புகள் எல்லாவற்றையும்விட, மிக முக்கியமான திட்டம்தான், வேர்களைத் தேடித் திட்டம். வெளிநாடுகளிலேயே செட்டில் ஆகிவிட்ட சிலர், “மண்ணை விட்டு பிரிந்து தூர தேசத்துக்கு வந்துவிட்டோமே, இனி இந்த சொந்தம் அவ்வளவுதானா” என்று உங்களுக்குள்ளே நிச்சயம் இது ஏற்பட்டிருக்கும். அப்படிப்பட்ட புலம்பெயர்ந்த தமிழர்களுடைய குழந்தைகளை, மாணவர்களை நம்முடைய தமிழ்நாட்டிற்கு அழைத்துக் கொண்டு சென்று, நம்முடைய மரபின் வேர்களை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறோம்.
2023-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில், இதுவரைக்கும் 15 நாடுகளிலிருந்து 292 பேர் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்கள். பலர், சில தலைமுறைகளாக விட்டுப் போன சொந்தங்களை தேடிக் கண்டுபிடித்து உருகியிருக்கிறார்கள். அவர்கள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரும், அவர்கள் மனதில் தேங்கி நின்ற பாசமும்தான் இந்தத் திட்டத்தின் நோக்கத்திற்குக் கிடைத்த வெற்றி என்று நான் நினைக்கிறேன்.
“வாழ்வதும், வளர்வதும் தமிழும் தமிழினமுமாய் இருக்க வேண்டும்” இதுதான் நம்முடைய திராவிட மாடல் அரசின் குறிக்கோள். இதற்காகத்தான் தொடர்ந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். என்று பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 31-08-2025
01 Sep 2025 -
குற்றம் புதிது திரைவிமர்சனம்
01 Sep 2025போலீஸ் உதவி ஆணையர் மதுசூதனன் ராவின் மகள் சேஷ்விதா கனிமொழி, பணி முடித்துவிட்டு இரவு நேரத்தில் வீடு திரும்பும் போது மாயமாகி விடுகிறார்.
-
பாரதத்தாயின் வீர மகன்: பூலித்தேவருக்கு கவர்னர் புகழாரம்
01 Sep 2025சென்னை : பாரதத் தாயின் வீர மகன் பூலித்தேவர் என்று கவர்னர் ஆர்.என்.ரவி புகழாரம் கூறியுள்ளார்.
-
கேரளாவில் கோவில் யானை தாக்கியதில் பாகன் உயிரிழப்பு
01 Sep 2025திருவனந்தபுரம் : கேரளாவில் கோவில் யானை தாக்கியதில் பாகன் உயிரிழந்தார்.
-
தெற்கு ஆப்பிரிக்காவில் பயங்கரம்: போலீஸ் வேன், சிறைத்துறை பேருந்து மோதல்: 16 பேர் பலி
01 Sep 2025விண்ட்ஹொக் : தெற்கு ஆப்பிரிக்காவில் போலீஸ் வேன், சிறைத்துறை பஸ் நேருக்கு நேர் மோதியதில் 16 பேர் உயிரிழந்தனர்.
-
மிசோரம் மாநிலத்தில் ரூ.8 ஆயிரம் கோடியில் ரயில் பாதை: பிரதமர் செப்.13-ல் திறந்து வைக்கிறார்
01 Sep 2025ஐஸ்வால் : மிசோரம் மாநிலத்தில் ரூ.8 ஆயிரம் கோடியில் புதிதாக ரயில் பாதை திட்டத்தை பிரதமர் மோடி வரும் 13-ம் தேதி திறந்து வைக்கிறார்.
-
விநாயகர் சிலைகள் கரைப்பு: பட்டினப்பாக்கம் கடற்கரையில் 40 டன்கள் குப்பைகள் அகற்றம்
01 Sep 2025சென்னை : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பட்டினப்பாக்கம் கடற்கரையில் 40 டன் குப்பைகள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
-
அடுத்த வாரம் வெளியாகும் யோலோ
01 Sep 2025MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S.
-
சென்னையில் டீ, காபி விலை உயர்வு அமல்
01 Sep 2025சென்னை : சென்னை மாநகரில் டீ கடைகளில் டீ, காபி விலை உயர்வு அமலுக்கு வந்தது.
-
ஜார்க்கண்ட்டில் 2 மாவோயிஸ்டுகள் கைது
01 Sep 2025ராஞ்சி : ஜார்க்கண்டில் 2 மாவோயிஸ்டுகளை போலீசார் கைது செய்தனர்.
-
ரஷ்யா - உக்ரைன் போர்: முடிவுக்கு கொண்டு வர புதினிடம் பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தல்
01 Sep 2025பெய்ஜிங் : ரஷ்யா-உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டு வர புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
-
வாழ்வதும், வளர்வதும் தமிழும் தமிழ் இனமுமாய் இருக்க வேண்டும்: தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு அனைத்திலும் முன்னேற்றம் : ஜெர்மனியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
01 Sep 2025சென்னை : திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்த பிறகு, தமிழ்நாடு எல்லா வகையிலும் இன்றைக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது.
-
மூளையை தின்னும் அமீபா: கேரளாவில் குழந்தை உள்ளிட்ட 2 பேர் பலி
01 Sep 2025திருவனந்தபுரம் : கேரளாவில் அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் எனப்படும் மூளையை தின்னும் அமீபா நோயால் மூன்று மாதக் குழந்தை உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர்.
-
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 600 ஆக உயர்வு
01 Sep 2025காபூல் : ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
-
பாம் இசை வெளியீட்டு விழா
01 Sep 2025ஜெம்பிரியோ பிக்சர்ஸ் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர் நடிக்கும் படம் பாம்.
-
தமிழகத்தில் உள்ள நீச்சல் குளங்களை ஆய்வு செய்ய பொது சுகாதாரத்துறை உத்தரவு
01 Sep 2025சென்னை : தமிழகத்தில் உள்ள நீச்சல் குளங்களை ஆய்வு செய்ய பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் காந்தி கண்ணாடி
01 Sep 2025ரணம் படத்தை இயக்கிய ஷெரிப் தற்போது இயக்கியிருக்கும் படம் காந்தி கண்ணாடி. இப்படத்தை ஆதிமூலம் கிரியேஷன்ஸ் சார்பில் ஜெய் கிரண் தயாரித்திருக்கிறார்.
-
உண்ணாவிரத போராட்டம்: சசிகாந்த் செந்தில் எம்.பி.க்கு துரை வைகோ திடீர் ஆதரவு
01 Sep 2025சென்னை : சசிகாந்த் செந்தில் உண்ணாவிரத போராட்டத்திறகு துரை வைகோ ஆதரவு தெரிவித்துள்ளார்.
-
பறிமுதல் செய்த தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை அடித்து நொறுக்கிய இலங்கை அரசு
01 Sep 2025ராமேசுவரம் : பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு அடித்து உடைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
டெல்லியில் பரவும் பறவை காய்ச்சல்: உயிரியல் பூங்காக்களில் கண்காணிப்பு தீவிரம்
01 Sep 2025டெல்லி : டெல்லியில் பரவும் பறவை காய்ச்சலால் உயிரியல் பூங்காக்களில் கண்காணிப்புப்பணி தீவிரம் அடைந்துள்ளது.
-
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சொத்துகளை மீட்கக்கோரிய வழக்கு : அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
01 Sep 2025மதுரை : மதுரை மீனாட்சியம்மன் கோவில் சொத்துகளை மீட்கவும், பாதுகாக்கவும் கோரிய வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
தங்கம் விலை புதிய உச்சம்: ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்தை நெருங்கியது
01 Sep 2025சென்னை : சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (திங்கள் கிழமை) வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிராம் ரூ.10,000-ஐ நெருங்கியுள்ளது.
-
ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.86 லட்சம் கோடியாக உயர்வு : மத்திய நிதி அமைச்சர் தகவல்
01 Sep 2025புதுடெல்லி : ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.86 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிரமலா சித்தாராமன் தெரிவித்துள்ளார்.
-
ஆசிரியர்கள் பணியில் தொடர, பதவி உயர்வுக்கு 'டெட்' தேர்வு கட்டாயம் : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
01 Sep 2025புதுடெல்லி : ஆசிரியர் பணியில் தொடர, பதவி உயர்வு பெற தகுதித் தேர்வு கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
கல்வி நிதி ஒதுக்கீடு செய்யும் விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
01 Sep 2025புதுடெல்லி : தமிழகத்திற்கு கல்வி நிதி ஒதுக்கீடு செய்யும் விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.