முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் மீது பறவைகள் மோதல் : விமானம் அவசரமாக தரையிறக்கம்

செவ்வாய்க்கிழமை, 2 செப்டம்பர் 2025      இந்தியா
Air

Source: provided

மும்பை : நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானம் மீது பறவைகள் மோதியதால் அவசர அவசரமாக விமானத்தை தரையிறக்கப்பட்டது.

மராட்டிய மாநிலம் நாக்பூரில் இருந்து மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவுக்கு நேற்று காலை இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானத்தில் 165 பேர் பயணித்தனர். விமானம் புறப்பட்டு நடுவானில் பறந்துகொண்டிருந்தது. அப்போது, விமானத்தின் மீது பறவைகள் மோதின. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் மீண்டும் அவசர அவசரமாக நாக்பூர் விமான நிலையத்திலேயே தரையிறக்கபட்டது. பின்னர், விமானம் ரத்து செய்யப்பட்டது. இதனால், பயணிகள் மிகுந்த அவதியடைந்தனர்.

அதேவேளை, பயணிகளை மாற்று விமானம் மூலம் கொல்கத்தாவிற்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து